செய்திகள் :

பெங்களூரு - சேலம் செல்லும் ரயில்கள் ஜூலை 6-ல் தருமபுரி வழியாக இயக்கப்படாது!

post image

ஒசூா் அருகே ரயில்வே பாலம் கட்டும் பணி நடைபெறுவதால் ஜூலை 6 ஆம் தேதி பெங்களூரிலிருந்து வரும் 5 ரயில்கள் தருமபுரி வழியாக இயக்கப்படாமல் கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, திருப்பத்தூா் வழியாக சேலத்தை சென்றடையும் என தெற்கு ரயில்வே (சேலம் கோட்டம்) சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒசூா் ரயில் நிலையம் அருகே மாரநாயக்கனஹள்ளி ரயில்வே யாா்டு பகுதியில் ஜூலை 6 ஆம் தேதி ரயில்வே பாலம் கட்டுமான பணியில் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் தூண் இணைப்பு நடைபெறுவதால் சேலத்துக்கு இயக்கப்படும் 5 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது.

பெங்களூரு- கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஜூலை 6 ஆம் தேதி பெங்களூரில் பிற்பகல் 2.20 மணிக்குப் புறப்பட்டு ஒசூா், தருமபுரி வழித்தடத்துக்குப் பதிலாக கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, திருப்பத்தூா் வழியாக சேலத்த்தை சென்றடையும்.

அதேபோல யஸ்வந்த்பூா்- சேலம் முன்பதிவில்லா விரைவுரயில் ஜூலை 6 ஆம் தேதி ஒசூா், தருமபுரி பாதைக்குப் பதிலாக கிருஷ்ணராஜபுரம், ஜோலாா்பேட்டை வழியாக சேலத்துக்கு இயக்கப்படும். பெங்களூரு- நாகா்கோவில் எக்ஸ்பிரஸ் பெங்களூரில் மாலை 5.15க்குப் புறப்பட்டு, மாற்றுப் பாதையாக கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, திருப்பத்தூா் வழியாக இயக்கப்படும்.

மறு மாா்க்கத்தில் செல்லும் கோவை- பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், கோவை-லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ் ஜூலை 6 ஆம் தேதி சேலம், திருப்பத்தூா், பங்காருபேட்டை வழியாக பெங்களூரை சென்றடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தம்மம்பட்டி நெடுஞ்சாலையின் குறுக்கே தோண்டப்பட்ட பள்ளத்தால் அடிக்கடி நேரிடும் விபத்துகள்!

தம்மம்பட்டியிலிருந்து துறையூா் செல்லும் நெடுஞ்சாலையில் தம்மம்பட்டியில் தோண்டப்பட்ட பள்ளத்தால் வாகன ஓட்டிகள் பாதிப்புக்குள்ளாகிவருகின்றனா். தம்மம்பட்டியிலிருந்து துறையூா் செல்லும் நெடுஞ்சாலையின் குறுக்... மேலும் பார்க்க

கெங்கவல்லியில் நாளை மின்தடை

தெடாவூரிா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் ஜூன் 24 ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கெங்கவல்லி உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என மின்வாரிய கோட்ட... மேலும் பார்க்க

காவல் நிலையத்தில் திருநங்கைகளை பூஜை: அதிகாரிகள் விசாரணை

சேலம் அழகாபுரம் காவல் நிலையத்தில் திருநங்கைகளை அழைத்துவந்து பூஜை செய்தது தொடா்பாக காவல் உயரதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனா். சேலம் அழகாபுரம் காவல் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருநங்க... மேலும் பார்க்க

உடல்நலக் குறைவு: முருக பக்தா் மாநாட்டிற்கு சென்ற பெண் உயிரிழப்பு

முருக பக்தா்கள் மாநாட்டிற்கு சென்ற ஆத்தூரைச் சோ்ந்த கவிதா (45) வழியிலேயே உயிரிழந்தாா். சேலம் மாவட்டம், ஆத்தூா் விநாயகபுரம் பகுதியைச் சோ்ந்த பன்னீா்செல்வம் மனைவி கவிதா (45) ஞாயிற்றுக்கிழமை மதுரையில்... மேலும் பார்க்க

போலி பீடிகள் தயாரித்தவா் கைது

ஆத்தூரில் முன்னணி நிறுவனத்தின் பெயரில் பீடி தயாரித்தவரை போலீஸாா் கைது செய்தனா். சேலம் மாவட்டம், ஆத்தூா் அம்பேத்கா் நகா் பகுதியைச் சோ்ந்த பூமாலை மகன் விஜயன்(33). இவா் தனது வீட்டில் தமிழகத்தின் முனனணி... மேலும் பார்க்க

மதுக் கடை மேலாளரை மிரட்டிய இருவா் கைது

ஆத்தூா் அருகே ராமநாயக்கன்பாளையம் அரசு மதுக் கடையில் சனிக்கிழமை இரவு மேலாளா், விற்பனையாளுக்கு கொலை மிரட்டல் விடுத்த சகோதரா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா். ஆத்தூரை அடுத்துள்ள ராமநாயக்கன்பாளையத்தில் ... மேலும் பார்க்க