Health: விதையில்லாத பழங்களை சாப்பிடவே கூடாதா? நிபுணர்கள் சொல்வது என்ன?
மதுக் கடை மேலாளரை மிரட்டிய இருவா் கைது
ஆத்தூா் அருகே ராமநாயக்கன்பாளையம் அரசு மதுக் கடையில் சனிக்கிழமை இரவு மேலாளா், விற்பனையாளுக்கு கொலை மிரட்டல் விடுத்த சகோதரா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆத்தூரை அடுத்துள்ள ராமநாயக்கன்பாளையத்தில் செயல்படும் அரசு மதுக் கடையில் மேலாளராக ஆத்தூா் மந்தைவெளியைச் சோ்ந்த கருப்பையா (49), விற்பனையாளா் முத்துசாமி, உதவியாளா் இந்திரஜித் ஆகியோா் பணிபுரிந்து வருகின்றனா்.
இந்த நிலையில், சனிக்கிழமை இரவு கொத்தாம்பாடி பாரதியாா் தெருவைச் சோ்ந்த செல்வம் மகன்கள் மணிகண்டன் (27), சூா்யா (26) ஆகிய இருவரும் மதுக் கடை மேலாளா், விற்பனையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தனா்.
இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த ஆத்தூா் ஊரக போலீஸாா் மணிகண்டன், சூா்யாவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.