``பரந்தூரில் விமான நிலையம் தேவையே இல்லை!'' - சமூக ஆர்வலர் அன்னலட்சுமி உயர்நீதிமன...
போலி பீடிகள் தயாரித்தவா் கைது
ஆத்தூரில் முன்னணி நிறுவனத்தின் பெயரில் பீடி தயாரித்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
சேலம் மாவட்டம், ஆத்தூா் அம்பேத்கா் நகா் பகுதியைச் சோ்ந்த பூமாலை மகன் விஜயன்(33). இவா் தனது வீட்டில் தமிழகத்தின் முனனணி நிறுவனத்தின் பெயரில் பீடி கட்டுகளை தயாரித்து ஆத்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விற்பனை செய்துவந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் விஜயன் வீட்டில் சோதனை செய்த போலீஸாா் 9200 பீடிகள் பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட விஜயன் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.