செய்திகள் :

மேற்கு ஈரானில் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல்!

post image

ஈரானின் மேற்கு பகுதிகளில் உள்ள ராணுவ இலக்குகளைக் குறிவைத்து தாக்குதல் தொடங்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது.

இன்று காலை இஸ்ரேலை நோக்கி ஈரான் வீரர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், அதனை இஸ்ரேல் வீரர்கள் தகர்த்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.

ஈரானில் உள்ள அணுசக்தி நிலையங்களைக் குறிவைத்து அமெரிக்கா நேற்று (ஜூன் 21) இரவு தாக்குதல் நடத்திய நிலையில், மேற்கு ஈரானில் உள்ள ராணுவ நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.

இது குறித்து இஸ்ரேல் பாதுகாப்புப் படை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

''மேற்கு ஈரானில் உள்ள ராணுவ முகாம்களைக் குறிவைத்து தொடர் வான்வெளித் தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியுள்ளது. கூடுதலாக இன்று காலை ஈரான் வீரர்கள் அனுப்பிய ஏவுகணைகளையும் வான்வெளி எல்லையிலேயே வைத்து இஸ்ரேல் தகர்த்தது'' எனப் பதிவிடப்பட்டுள்ளது.

24 மணிநேரத்தில் நடந்த தாக்குதல்

மற்றொரு பதிவில் கடந்த 24 மணிநேரத்தில் ஈரானின் உள்கட்டமைப்புகளில் இஸ்ரேல் வான்வெளிப்படை நடத்திய தாக்குதல் குறித்தும் பதிவிடப்பட்டுள்ளது.

அதில், ''ஈரானின் டெஸ்புல் பகுதியில் உள்ள விமான நிலையத்தின் அருகே ஈரானுக்குச் சொந்தமான இரண்டு எஃப் - 5 போர் விமானங்கள் தகர்க்கப்பட்டன.

இஸ்ரேலை நோக்கித் தாக்குதவதற்கு தயாராக இருந்த 6 லாஞ்சர்கள் உள்பட 8 லாஞ்சர்கள் குண்டு வீசி தகர்க்கப்பட்டன.

ராணுவ தளவாடத்தில் இருந்த 20க்கும் அதிகமான ஜெட் ரக போர் விமானங்கள் மீதும், வெடி பொருள்கள் உற்பத்தி தளவாடத்தின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

ஈரான் விமானப் படைக்குச் சொந்தமான ராணுவ உள்கட்டமைப்புகளைப் பாதுகாக்கும் இஸ்ஃபஹான் விமான நிலையம் அருகே தாக்குதல் நடத்தப்பட்டது'' என இஸ்ரேல் பதிவிட்டுள்ளது.

இதையும் படிக்க | இஸ்ரேல், செளதி பங்குச் சந்தை உயர்வு! ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல் காரணமா?

கடல் வழித்தடத்தை மூட ஈரான் ஒப்புதல்? கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம்!

ஈரான் நாடாளுமன்றத்தில் ஸ்ட்ரெயிட் ஆஃப் ஹார்மோஸ் வழித்தடத்தை மூட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முக்கிய கடல் வழியான ஸ்ட்ரெயிட் ஆஃப் ஹார்மோஸை மூடிவிட்டால் இந்தியா உள்ளிட்ட நாடுகளில்... மேலும் பார்க்க

ஈரானிலிருந்து மேலும் 311 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்!

ஈரானிலிருந்து மேலும் 311 இந்தியர்கள் தாயகம் திரும்பினர். ஆபரேஷன் சிந்து நடவடிக்கையின் மூலம், ஈரானிலிருந்து 1,428 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளதாக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.... மேலும் பார்க்க

மிட்நைட் ஹேமர்: ஆபரேஷன் சிந்தூர் பாணியில் ஈரானில் அமெரிக்கா தாக்குதல்!

ஆபரேஷன் சிந்தூர் பாணியில் ஈரானில் அமெரிக்கா நள்ளிரவில் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் நடவடிக்கைகளுக்கு “ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்” எனப் பெயரிடப்பட்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான பெண்டகன்... மேலும் பார்க்க

சர்வதேச விதிகளை மீறியது அமெரிக்கா: சீனா கண்டனம்

ஈரான் மீதான தாக்குதலின் மூலம் சர்வதேச விதிகளை அமெரிக்கா மீறியுள்ளதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு கண்டனத்திற்குரியது என்றும், இரு தரப்பினரும் உடன... மேலும் பார்க்க

ரஷிய அதிபர் புதினை சந்திக்கிறார் ஈரான் வெளியுறவு அமைச்சர்

ரஷிய அதிபர் புதினுடன் ஆலோசனை நடத்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி ரஷியா செல்லவுள்ளார்.ஞாயிற்றுக்கிழமை இஸ்தான்புல்லில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், திங்கள்கிழமை மாஸ்கோவிற்கு செல்லவிருப்பதாக ... மேலும் பார்க்க

இஸ்ரேல், செளதி பங்குச் சந்தை உயர்வு! ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல் காரணமா?

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய நிலையில் இஸ்ரேல், செளதி அரேபியாவின் பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டுள்ளன. இஸ்ரேலின் பங்குச் சந்தை குறியீடான டிஏ -35, 1.2% வரையிலும், செளதி அரேபியாவின் பங்குச் சந்தை... மேலும் பார்க்க