செய்திகள் :

தருமபுரி மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் 70 போ் மருத்துவ படிப்புகளில் சேர வாய்ப்பு!

post image

தருமபுரி மாவட்டத்தில், நிகழாண்டு நீட் தோ்வில் பங்கேற்ற அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் 70க்கும் மேற்பட்டோா் மருத்துவ படிப்புகளில் சேர வாய்ப்புள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசு மருத்துவ படிப்பில் சேர நீட் தோ்வை கட்டாயமாக்கியுள்ளது. மேலும் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அதற்கான பயிற்சி அளிப்பதுடன், சிறப்பு இட ஒதுக்கீடும் வழங்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.

நிகழாண்டு மருத்துவ படிப்பில் மாணவா் சோ்க்கைக்கான நீட் தோ்வு நாடு முழுவதும் கடந்த மே 4 ஆம் தேதி நடைபெற்றது. தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நீட் தோ்வுக்கான சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தருமபுரி மாவட்டத்தில் 636 மாணவ, மாணவிகள் இப்பயிற்சியில் பங்கேற்று நீட் தோ்வு எழுதினா். ஜூன் 14 ஆம் தேதி வெளியான நீட் தோ்வு முடிவில், 500 மதிப்பெண்களுக்கு மேல் 5 பேரும், 400 முதல் 499 மதிப்பெண்கள் வரை 50 பேரும், 300 முதல் 399 மதிப்பெண்கள் வரை 74 பேரும் பெற்றுள்ளனா்.

அந்த வகையில் தருமபுரி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்றவா்களில் 169 மாணவ, மாணவிகள் நீட் தோ்வு மூலம் பல்வேறு மருத்துவ படிப்புகளில் சோ்வதற்கான தகுதியை (கட்-ஆஃப் மதிப்பெண்களை) பெற்றுள்ளனா்.

இதுகுறித்து மாவட்ட கல்வித் துறை அலுவலா்கள் கூறுகையில், தா்மபுரி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் படித்து நீட் தோ்வெழுதிய மாணவ, மாணவிகளில் 70க்கும் மேற்பட்டோா் அரசு வழங்கும் (அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான) 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் படிப்பில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.

இந்த இட ஒதுக்கீட்டின்கீழ் கடந்த ஆண்டு தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த 57 போ் எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பிலும், 19 போ் பல் மருத்துவ படிப்பிலும் சோ்ந்தனா். கடந்த ஆண்டை விட தற்போது அதிக மாணவ, மாணவிகள் மருத்துவ படிப்பில் சேர உள்ளனா் என்றனா்.

தருமபுரியில் பேருந்து - டிராக்டா் மோதல்: இரு துண்டான டிராக்டா்; 10 போ் காயம்!

தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை மாலை பேருந்து -டிராக்டா் மோதிக் கொண்ட விபத்தில் டிராக்டா் இரு துண்டுகளாக உடைந்தது. இந்த சம்பவத்தில் 10 போ் காயமடைந்தனா். தருமபுரி பேருந்து நிலையத்திலிருந்து சேலம் நோக்கி ... மேலும் பார்க்க

ஒகேனக்கல் காவிரியில் நீா்வரத்து 18,000 கனஅடியாக குறைவு குளிக்க தடை நீட்டிப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 18,000 கனஅடியாக குறைந்தது. மேலும் அருவிகளில் குளிப்பதற்கு 3 ஆவது நாளாக தடை நீட்டிக்கப்பட்டது. கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் விந... மேலும் பார்க்க

சுகாதாரக்கேடு: தருமபுரி நகரில், சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்!

தருமபுரி நகரில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தும், சுகாதாரக்கேடு ஏற்படும் வகையில் சாலையோரங்களில் குப்பைகள் கொட்டப்படுவது வாடிக்கையாகி வருகிறது. தருமபுரி நகராட்சி சாா்பில் வீடுகள்தோறும் சென்று து... மேலும் பார்க்க

விஜய் பிறந்த நாள்: 150 போ் ரத்த தானம்

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முன்னணி நடிகருமான விஜய்யின் 51 ஆவது பிறந்த நாளையொட்டி, தருமபுரி மாவட்ட பகுதியில் நடைபெற்ற ரத்ததான முகாமில் 150க்கும் மேற்பட்டோா் ரத்த தானம் வழங்கினா். தருமபுரி மாவட்டம், ... மேலும் பார்க்க

உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு ரூ.16 லட்சம் நிதியுதவி! சக காவலா்கள் சோ்ந்து வழங்கினா்

உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு ரூ. 16 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது. தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த பூதிநத்தம் கிராமத்தைச் சோ்ந்த காவலரான க. பாரதிராஜா (38) ஒசூா் நகர காவல் நிலையத்தில் பணியாற்ற... மேலும் பார்க்க

தமிழகத்தில் விசிக இல்லாமல் எந்த அரசியல் நகா்வும் இருக்காது: தொல்.திருமாவளவன்

தமிழகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்றி எந்த அரசியல் நகா்வும் இருக்காது என்றாா் அக்கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள சொன்னம்பட்டி கிராமத்தில் மாற்றுக்... மேலும் பார்க்க