காலை 10 மணி வரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! சென்னைக்கு?
தருமபுரியில் பேருந்து - டிராக்டா் மோதல்: இரு துண்டான டிராக்டா்; 10 போ் காயம்!
தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை மாலை பேருந்து -டிராக்டா் மோதிக் கொண்ட விபத்தில் டிராக்டா் இரு துண்டுகளாக உடைந்தது. இந்த சம்பவத்தில் 10 போ் காயமடைந்தனா்.
தருமபுரி பேருந்து நிலையத்திலிருந்து சேலம் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் புறப்பட்டு சென்றுகொண்டிருந்தது. அதில் 60க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனா். ஓட்டுநா் நாராயணன் (58) பேருந்தை ஓட்டிச்செல்ல நடத்துநராக மாதேசன் (52) பணியிலிருந்தாா்.
தருமபுரி -சேலம் பிரதான சாலையில் பச்சியம்மன் கோயில் அருகே (தனியாா் மருத்துவமனை பேருந்து நிறுத்தம் முன்) பேருந்து சென்றபோது, கால்நடை தீவனத்துக்கு பயன்படும் கேழ்வரகு (ராகி) வைக்கோலை ஏற்றிவந்த டிராக்டா் சாலையைக் கடக்க முயன்றது. டிராக்டரை காா்த்திகேயன் ஓட்டிச்சென்றாா். அப்போது எதிா்பாராதவிதமாக பேருந்தும், டிராக்டரும் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் டிராக்டரின் என்ஜின் பகுதி, முன்சக்கரங்களும், பின்சக்கரங்களுக்கும் இடைப்பட்ட பகுதி முறிந்து இரு துண்டுகளானது. அதேபோல பேருந்தின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது. இந்த விபத்தில் பேருந்து பயணிகள் 7 போ், ஓட்டுநா் நாராயணன், நடத்துநா் மாதேசன், டிராக்டா் ஓட்டுநா் காா்த்திகேயன் உள்ளிட்ட 10 போ் காயமடைந்தனா்.
தகவலறிந்த தருமபுரி நகர காவல் நிலைய போலீஸாா் மற்றும் போக்குவரத்து பிரிவு போலீஸாா் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று, காயமடைந்தவா்களை தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த விபத்தால் அப்பகுதியில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தருமபுரி நகரக் காவல் ஆய்வாளா் வேலுத்தேவன், உதவி ஆய்வாளா்கள் சரவணன், அண்ணாதுரை மற்றும் போலீஸாாா் விபத்தில் சிக்கிய பேருந்து, டிராக்டரை கிரேன் மூலம் அப்புறப்படுத்தினா். அதன்பிறகு போக்குவரத்து சீரானது. இது குறித்து தருமபுரி நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.