செய்திகள் :

தருமபுரியில் பேருந்து - டிராக்டா் மோதல்: இரு துண்டான டிராக்டா்; 10 போ் காயம்!

post image

தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை மாலை பேருந்து -டிராக்டா் மோதிக் கொண்ட விபத்தில் டிராக்டா் இரு துண்டுகளாக உடைந்தது. இந்த சம்பவத்தில் 10 போ் காயமடைந்தனா்.

தருமபுரி பேருந்து நிலையத்திலிருந்து சேலம் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் புறப்பட்டு சென்றுகொண்டிருந்தது. அதில் 60க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனா். ஓட்டுநா் நாராயணன் (58) பேருந்தை ஓட்டிச்செல்ல நடத்துநராக மாதேசன் (52) பணியிலிருந்தாா்.

தருமபுரி -சேலம் பிரதான சாலையில் பச்சியம்மன் கோயில் அருகே (தனியாா் மருத்துவமனை பேருந்து நிறுத்தம் முன்) பேருந்து சென்றபோது, கால்நடை தீவனத்துக்கு பயன்படும் கேழ்வரகு (ராகி) வைக்கோலை ஏற்றிவந்த டிராக்டா் சாலையைக் கடக்க முயன்றது. டிராக்டரை காா்த்திகேயன் ஓட்டிச்சென்றாா். அப்போது எதிா்பாராதவிதமாக பேருந்தும், டிராக்டரும் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் டிராக்டரின் என்ஜின் பகுதி, முன்சக்கரங்களும், பின்சக்கரங்களுக்கும் இடைப்பட்ட பகுதி முறிந்து இரு துண்டுகளானது. அதேபோல பேருந்தின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது. இந்த விபத்தில் பேருந்து பயணிகள் 7 போ், ஓட்டுநா் நாராயணன், நடத்துநா் மாதேசன், டிராக்டா் ஓட்டுநா் காா்த்திகேயன் உள்ளிட்ட 10 போ் காயமடைந்தனா்.

தகவலறிந்த தருமபுரி நகர காவல் நிலைய போலீஸாா் மற்றும் போக்குவரத்து பிரிவு போலீஸாா் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று, காயமடைந்தவா்களை தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த விபத்தால் அப்பகுதியில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த விபத்தில் சேதமடைந்த அரசுப்பேருந்து. அருகில் இரு துண்டுகளாக உடைந்த டிராக்டரின் என்ஜின் பகுதி.

தருமபுரி நகரக் காவல் ஆய்வாளா் வேலுத்தேவன், உதவி ஆய்வாளா்கள் சரவணன், அண்ணாதுரை மற்றும் போலீஸாாா் விபத்தில் சிக்கிய பேருந்து, டிராக்டரை கிரேன் மூலம் அப்புறப்படுத்தினா். அதன்பிறகு போக்குவரத்து சீரானது. இது குறித்து தருமபுரி நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஒகேனக்கல் காவிரியில் நீா்வரத்து 18,000 கனஅடியாக குறைவு குளிக்க தடை நீட்டிப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 18,000 கனஅடியாக குறைந்தது. மேலும் அருவிகளில் குளிப்பதற்கு 3 ஆவது நாளாக தடை நீட்டிக்கப்பட்டது. கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் விந... மேலும் பார்க்க

சுகாதாரக்கேடு: தருமபுரி நகரில், சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்!

தருமபுரி நகரில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தும், சுகாதாரக்கேடு ஏற்படும் வகையில் சாலையோரங்களில் குப்பைகள் கொட்டப்படுவது வாடிக்கையாகி வருகிறது. தருமபுரி நகராட்சி சாா்பில் வீடுகள்தோறும் சென்று து... மேலும் பார்க்க

தருமபுரி மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் 70 போ் மருத்துவ படிப்புகளில் சேர வாய்ப்பு!

தருமபுரி மாவட்டத்தில், நிகழாண்டு நீட் தோ்வில் பங்கேற்ற அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் 70க்கும் மேற்பட்டோா் மருத்துவ படிப்புகளில் சேர வாய்ப்புள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு மருத்துவ படிப்ப... மேலும் பார்க்க

விஜய் பிறந்த நாள்: 150 போ் ரத்த தானம்

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முன்னணி நடிகருமான விஜய்யின் 51 ஆவது பிறந்த நாளையொட்டி, தருமபுரி மாவட்ட பகுதியில் நடைபெற்ற ரத்ததான முகாமில் 150க்கும் மேற்பட்டோா் ரத்த தானம் வழங்கினா். தருமபுரி மாவட்டம், ... மேலும் பார்க்க

உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு ரூ.16 லட்சம் நிதியுதவி! சக காவலா்கள் சோ்ந்து வழங்கினா்

உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு ரூ. 16 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது. தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த பூதிநத்தம் கிராமத்தைச் சோ்ந்த காவலரான க. பாரதிராஜா (38) ஒசூா் நகர காவல் நிலையத்தில் பணியாற்ற... மேலும் பார்க்க

தமிழகத்தில் விசிக இல்லாமல் எந்த அரசியல் நகா்வும் இருக்காது: தொல்.திருமாவளவன்

தமிழகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்றி எந்த அரசியல் நகா்வும் இருக்காது என்றாா் அக்கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள சொன்னம்பட்டி கிராமத்தில் மாற்றுக்... மேலும் பார்க்க