தருமபுரியில் போக்குவரத்து விதிகளை மீறுவோரை கண்காணிக்க தானியங்கி கேமரா: அபராதம் க...
உன் பேச்ச கேட்காம ஒரு வேலை சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்றேன்! - அப்பாவிற்கு மகனின் மன்னிப்புக் கடிதம்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
கிட்டத்தட்ட 25 வருடத்திற்கு மேல் ஒரே வேளையில் இருந்து என்னை மட்டும் இல்லாமல் என் அண்ணன் மற்றும் தங்கையை படிக்க வைத்த என் அப்பாவிற்கு, 25 வயது ஆகியும் ஒரு ரூபாய் கூட சம்பாதித்து தர முடியாமல் குற்றவுணர்ச்சியில் தவிக்கும் மகன் எழுதிகொள்வது…
அப்பா உங்களிடம் சொல்ல முடியாதவற்றை நான் இந்த கடிதத்தில் எழுதிகொள்கிறேன்.. நீங்களும் மற்ற பெற்றோர்களை போல என்னை மிகவும் கஷ்டபட்டுதான் படிக்க வைத்திருக்கிறீர்கள்.. ஆனால் அதற்கு உங்களுக்கு மீண்டும் எதும் கைமாறு செய்ய முடியாமல் இரண்டு ஆண்டுகளாக குற்றவுணர்ச்சியில் தவித்து வருகிறேன்.

நான் உங்களிடம் தற்போது கைபேசியில் கூட பேசாமல் இருப்பதற்கு காரணம் அது தான். என்னால் உங்களை எதிர்கொள்ள முடியவில்லை. படித்து முடித்தவுடன் நீங்கள் இந்த வேலைதான் செய்ய வேண்டும் என்று என்னிடம் எதும் சொல்லவில்லை. ஆனால் நீங்கள் கண்டிப்பாக நினைத்திருப்பார்கள். ”பையன் என்ஜினீயரிங் முடிச்சிட்டான் இனிமே அவன் பாத்துபான்” என்ற எண்ணத்தை நான் புதைத்துவிட்டேன்.
அதற்காக என்னை மன்னித்துகொளுங்கள். அப்படி செய்யவேண்டும் என்பது என் நோக்கம் இல்லை.. ஆனால் சில காரணங்களால் நான் சினிமாவின் மீது ஈர்ப்புகொண்டு அதை என் வேலையாக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் வந்தது.. வந்ததும் நான் உங்களிடம் சொன்னேன். ஆனால் உங்களுக்கு அது புரியவில்லை.
உங்கள் நிலையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. எந்த நடுதர மக்கள்தான் தன் மகன் சினிமாவில் தன் வேலையை வைத்துகொள்ள விரும்புகிறான் என்றதும் ஒப்புக்கொள்ள முடியும்.. நீங்கள் வேண்டாம் என்று என்னை தடுத்தீர்கள். நான் நீங்கள் பேசுவதை ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை.. அதற்காக என்னை மன்னித்துகொள்ளுங்கள்..

நீங்கள் சொன்ன மாதிரி நான் எவ்வளவு முயற்சி செய்தாலும் என்னால் இன்று வரை சினிமாவில் ஒரு உதவி இயக்குனராக கூட ஆக முடியவில்லை.. அன்றாட தேவைக்காக சூப்பர் மார்கெட்டில் வேலை செய்வது போல் சில வேலைகளை செய்து எனது அன்றாட தேவைகளை மட்டும் பூர்த்திசெய்து வருகிறேன்..
அதில் வரும் பணம் என் செலவிற்கே பற்றவில்லை என்பதால் எனக்கு நமது குடும்ப செலவிற்கு எதும் பணம் அனுப்ப முடியவில்லை.. உணவின் கஷ்டம் வீட்டில் இருக்கும்வரை எனக்கு தெரியாமல் இருக்க நீங்கள் கடன் வாங்கியாவது செய்துவிடுவிர்கள். ஆனால் நான் வீட்டில் இருந்து வந்ததில் இருந்து பெரும்பாலும் ஒரு வேலை உணவு சாப்பிடுவதே பெரும் பாடக இருக்கிறது..
அப்போதெல்லாம் நான் உங்களை தான் நினைத்துகொள்வேன்.. சில சமயம் நீங்கள் எனக்கு போன் செய்து “நமக்கு இந்த சினிமாலாம் வேலக்கி ஆவாதுபா ஒழுங்காக படிச்ச வேலைய பாரு” என்று நீங்கள் சொல்லும்போது நான் உங்களை கோபமாக பேசி இருக்கிறேன். பேசி முடித்தவுடன் உங்களை திட்டியதற்காக வருத்தபட்டிருக்கிறேன்.

நான் கல்லூரி படிக்கும்போதெல்லாம் என் பையன் என்ஜினீயரிங் படிக்கிறான் என்று பெருமையாக சொல்வீர்கள். இப்போது என்னை பற்றி நீங்கள் என்ன நினைத்துக் கொண்டுடிருப்பீர்கள். தினமும் தூங்கும்போது என்னை பற்றி என்ன யோசிப்பீர்கள் என்று எனக்குள் பெரிய கேள்வியாக இருக்கிறது.
கண்டிப்பாக நான் ஒருநாள் சினிமாவில் வந்துவிடுவேன்.. என்னை எண்ணி நீங்கள் வருத்தபடாதீர்கள். “மிஸ் யூ பா என்ன பத்தி கவலப்படாத இத உன்கிட்ட நேரா சொல்ல முடியாமதான் இந்த லெட்டர் எழுதுறேன்.. இதையே உனக்கு இப்போ அனுபனும்னு தோணுது ஆனா இத நீ வேற யார்கிட்டயாவது தான் குடுத்து படிச்சி தெரிஞ்சிப்ப இது மூணாவது மனுஷன் சொல்லி உனக்கு தெரிய வேணாம்.. இது எனக்கும் உனக்குமானது. என்ன சிக்கிரம் புரிஞ்சிப்பன்னு நினைக்கிறேன்.. இது வரைக்கும் நான் கோவதுல எதாவது தப்பா பேசி இருந்தா மன்னிச்சிகோ.. மன்னிப்புனு சொன்னா நீ பெரிய மனிஷன் மாதிரி பேசாதனு சொல்லுவ பரவால்ல பெரிய மனுஷன் சொல்ற மாதிரியே இருக்கட்டும் “சாரி”…
