பங்கர் பஸ்டர் வேஸ்ட்.. முன்பே வெளியேற்றப்பட்ட யுரேனியம்: டிரம்ப்புக்கு டஃப் கொடு...
Tatkal Ticket-ஐ சிக்கலின்றி புக் செய்ய வேண்டுமா? IRCTC கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி?|How to
'தட்கல் டிக்கெட்டுகள் ஏஜென்டுகளுக்குத் தான் அதிகம் கிடைக்கின்றன' என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக உள்ளது. இதை சரிசெய்யும் விதமாக, ரயில்வே துறை புதிய சில கண்டிஷன்களைக் கொண்டு வந்துள்ளது.
அவை...
1. தட்கல் டிக்கெட் 11 மணிக்கு திறந்த முதல் 10 நிமிடங்கள் பொதுமக்களுக்குத் தான் ஓப்பனாக இருக்கும். அந்த 10 நிமிடங்களுக்குப் பிறகு தான், ஏஜென்டுகள் டிக்கெட்டுகளைப் புக் செய்ய முடியும்.
2. ஜூலை 1-ம் தேதி முதல், தட்கல் டிக்கெட் புக் செய்யும் அனைவரும் தங்களது ஐ.ஆர்.சி.டி.சி கணக்குடன் ஆதார் எண்ணைக் கட்டாயம் இணைத்திருக்க வேண்டும்.
3. பொதுமக்கள் தங்களது ஐ.ஆர்.சி.டி.சி கணக்கில் ஒரு மாதத்திற்கு 12 தட்கல் டிக்கெட்டுகளை மட்டுமே புக் செய்ய முடியும்.

இப்போது, உங்களது ஐ.ஆர்.சி.டி.சி கணக்குடன் ஆதாரை எப்படி இணைப்பது என்பதைப் பார்க்கலாம்...
1. உங்களது ஐ.ஆர்.சி.டி.சி கணக்கு முகப்பு பக்கத்திற்குள் செல்லவும்.
2. முகப்பு பக்கத்தில் உள்ள My Account > Authenticate User-ஐ கிளிக் செய்யவும்.
3. இப்போது திறக்கப்படும் பக்கத்தில் உங்களது ஆதார் எண்ணை பதிவிட்டு, உங்களது பெயர் உள்ளிட்ட தகவல்கள் சரியாக இருக்கிறதா என்பதை ஒருமுறை செக் செய்துகொள்ளுங்கள்.
4. அடுத்ததாக, வலது பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும் 'Save'-ஐ கிளிக் செய்யவும்.
5. உங்களது ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் எண்ணிற்கு OTP வரும். இதை பதிவிட்டு 'Submit' கொடுத்தால் 'ALL DONE'.
குறிப்பு: ஆதார் எண்ணிற்கு பதிலாக, பான் கார்டு எண்ணைக் கூட தரலாம்.

உங்களது ஐ.ஆர்.சி.டி.சி கணக்குடன் ஆதார் இணைந்துவிட்டதா என்பதை செக் செய்ய...
1. ஐ.ஆர்.சி.டி.சி முகப்பு பக்கத்திற்குள் செல்லவும்.
2. My Account > Auntheticate User -ஐ பார்த்தால், 'Auntheticate User' அருகில் சின்ன 'டிக்' மார்க் இருக்கும். இது இருந்தால் உங்கள் கணக்குடன் ஆதார் வெற்றிகரமாக இணைந்துவிட்டது என்று தெரிந்துகொள்ளலாம்.