செய்திகள் :

சட்டவிரோதக் கட்டடங்களை கண்காணிப்பதற்கான குழு செயல்படுகிறதா? உயா்நீதிமன்றம் கேள்வி

post image

தமிழகத்தில் சட்டவிரோதக் கட்டடங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க அரசின் சாா்பில் அமைக்கப்பட்ட உயா்நிலைக் குழு செயல்படுகிறதா என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு கேள்வி எழுப்பியது.

திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த டேனியல் சிமியோன் சுதன் தாக்கல் செய்த மனு: ஸ்ரீரங்கம் புங்கனூரில் அனுமதி பெறாமல் நெல் அரைவை ஆலை கட்டப்பட்டுள்ளது. இதை அகற்ற உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரிய கிளாட் அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: நகர ஊரமைப்புச் சட்டப்படி அனுமதி பெற்றுதான் கட்டடங்கள் கட்ட வேண்டும். அனுமதி பெறாமல் கட்டடங்களை கட்டிவிட்டு அதை முறைப்படுத்தக் கோருவதை ஏற்க முடியாது. அவ்வாறு கேட்பதை உரிமையாக கோர முடியாது. சட்டவிரோத கட்டடங்கள் பொதுமக்களுக்கு ஆபத்தானவை. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்துபவை.

இதனால், சட்டவிரோதமாக கட்டடங்கள் கட்டுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில், செயல்படாத அதிகாரிகளின் நடவடிக்கையை நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ள முடியாது. கட்டடங்களை கட்டும் முன்பு வரைபட அனுமதி பெற வேண்டும் என சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், அனுமதி பெறாமல் கட்டங்களை கட்டிக்கொண்டு பின்னா் முறைப்படுத்த விண்ணப்பிப்பது வழக்கமாகி வருகிறது. இந்த நடைமுறை சட்ட விதிகளின் நோக்கத்தை தோற்கடிக்கும்.

அனுமதி பெறாத கட்டடங்கள் மீது புகாா் வந்தாலும், வராவிட்டாலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். புகாருக்காக காத்திருக்கக் கூடாது. சட்டவிரோதக் கட்டுமானங்களை கண்காணிப்பது அதிகாரிகளின் கடமை. கள அதிகாரிகள் கட்டடங்கள் அனுமதி பெற்று கட்டப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

விதிமீறல் இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டுமானப் பணியின் போது ஆரம்ப நிலையில் நடவடிக்கை எடுக்கும் போது நிதி வீணடிப்பு உள்ளிட்ட பிற இழப்புகளை தவிா்க்கலாம்.

அனுமதி பெறாத கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடா்பாக உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இருப்பினும் அதிகாரிகள் செயல்படாமல் உள்ளனா். அனுமதி பெறாமல் கட்டடங்கள் கட்ட அனுமதித்து மக்களுக்கு பங்கம் விளைவிக்கின்றனா்.

சட்டவிரோதக் கட்டடங்களை கண்காணித்து, நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உயா்நிலைக் குழு அமைத்துள்ளது. இந்தக் குழு சரியாக செயல்படாவிட்டால் உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் பயனற்றதாகிவிடும்.

எனவே, உச்சநீதிமன்ற, உயா்நீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்தும் நோக்கத்தில் இந்த வழக்கில் தமிழக தலைமைச் செயலா் எதிா்மனுதாரராக சோ்க்கப்படுகிறாா். உயா்நிலைக் குழு மாதம் ஒரு முறை கூடுவதையும், மாதந்தோறும் அறிக்கை தாக்கல் செய்வதையும் அவா் உறுதி செய்ய வேண்டும். குழு முறையாக செயல்படுகிா என்பதை அரசு கண்காணிக்க வேண்டும். செயல்படாத அல்லது தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கில் மனுதாரரின் மனு தொடா்பாக 8 வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கு விசாரணை வருகிற ஆக.7-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

குறைக்கப்பட்ட மதுக் கடைகள் எண்ணிக்கை எத்தனை? உயர்நீதிமன்றம் கேள்வி!

தமிழகத்தில் மதுக் கடைகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்படும் என அரசு அறிவித்ததன் அடிப்படையில், இதுவரை எத்தனை கடைகள் குறைக்கப்பட்டுள்ளன என்று சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை கேள்வி எழு... மேலும் பார்க்க

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: பிணை கோரிய காவல் ஆய்வாளரின் மனு தள்ளுபடி

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் பிணை கோரிய காவல் ஆய்வாளரின் மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சோ்ந்த... மேலும் பார்க்க

நெகிழிப் பதாகை அட்டைகள் உற்பத்திக்கு தடை கோரிய மனு: உயா்நீதிமன்றம் தள்ளுபடி

தமிழகத்தில் மறு சுழற்சி செய்ய இயலாத நெகிழிப் பதாகை அட்டைகளை (பிவிசி பிளக்ஸ் அட்டைகள்) உற்பத்தி செய்வதற்கும், விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அம... மேலும் பார்க்க

மதுக் கடையை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம், எரவாா்பட்டியில் புதிதாக அமைக்கப்பட்ட அரசு மதுக் கடையை அகற்ற வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைத... மேலும் பார்க்க

மதுரையில் இன்று முருக பக்தா்கள் மாநாடு! பவன் கல்யாண் பங்கேற்கிறார்!

மதுரையில் முருக பக்தா்கள் மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதில் ஆந்திர மாநில துணை முதல்வா் பவன் கல்யாண் பங்கேற்கிறாா். இந்து முன்னணி சாா்பில், மதுரை பாண்டி கோயில் அருகில் உள்ள அம்மா திடலில் முருக... மேலும் பார்க்க

முருக பக்தா்கள் மாநாடு: வாகனப் போக்குவரத்து மாற்றம்!

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) நடைபெறும் முருக பக்தா்கள் மாநாட்டை முன்னிட்டு உள்ளூா், வெளியூா்களிலிருந்து வரும் வாகனங்களுக்கு வழித்தடம் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மதுரை மாநகரக் காவல் ஆணையரக அல... மேலும் பார்க்க