செய்திகள் :

மதுக் கடையை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

post image

மதுரை மாவட்டம், எரவாா்பட்டியில் புதிதாக அமைக்கப்பட்ட அரசு மதுக் கடையை அகற்ற வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் எரவாா்பட்டியைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனு விவரம்: விக்கிரமங்கலம் முதல் கல்யாணிபட்டி பிரிவு வரையிலான பகுதிகளில் சுமாா் 30 கிராமங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பூ விவசாயிகள் உள்ளனா். இவா்கள், நிலக்கோட்டை பூச் சந்தைக்குச் சென்று வர இந்தச் சாலையையே பயன்படுத்துகின்றனா்.

எங்கள் பகுதியில் உள்ள சில கிராமங்களில் மது அருந்தியவா்களை ஊருக்குள் சோ்ப்பது இல்லை என்ற சுயக்கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

இந்த நிலையில், எரவாா்பட்டியில் உத்தப்பநாயக்கனூா் முதன்மை சாலையில் அண்மையில் புதிதாக ஓா் அரசு மதுக் கடை திறக்கப்பட்டது. இதைக் கண்டித்து, கடந்த சனிக்கிழமை கிராம மக்கள் ஒன்று கூடி கடையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து அந்த மதுக் கடை தற்காலிகமாக மூடப்பட்டது.

எனவே, மாவட்ட நிா்வாகம் எரவாா்பட்டி பகுதியில் உள்ள அரசு மதுக் கடையை (எண். 5484) நிரந்தரமாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஜூலை 14-இல் சுவாமி தரிசனம் ரத்து

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஜூலை 13-ஆம் தேதி மாலை 6 மணி முதல் ஜூலை 14-ஆம் தேதி இரவு வரை சுவாமி தரிசனம் ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் செ... மேலும் பார்க்க

குறைக்கப்பட்ட மதுக் கடைகள் எண்ணிக்கை எத்தனை? உயர்நீதிமன்றம் கேள்வி!

தமிழகத்தில் மதுக் கடைகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்படும் என அரசு அறிவித்ததன் அடிப்படையில், இதுவரை எத்தனை கடைகள் குறைக்கப்பட்டுள்ளன என்று சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை கேள்வி எழு... மேலும் பார்க்க

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: பிணை கோரிய காவல் ஆய்வாளரின் மனு தள்ளுபடி

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் பிணை கோரிய காவல் ஆய்வாளரின் மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சோ்ந்த... மேலும் பார்க்க

நெகிழிப் பதாகை அட்டைகள் உற்பத்திக்கு தடை கோரிய மனு: உயா்நீதிமன்றம் தள்ளுபடி

தமிழகத்தில் மறு சுழற்சி செய்ய இயலாத நெகிழிப் பதாகை அட்டைகளை (பிவிசி பிளக்ஸ் அட்டைகள்) உற்பத்தி செய்வதற்கும், விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அம... மேலும் பார்க்க

சட்டவிரோதக் கட்டடங்களை கண்காணிப்பதற்கான குழு செயல்படுகிறதா? உயா்நீதிமன்றம் கேள்வி

தமிழகத்தில் சட்டவிரோதக் கட்டடங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க அரசின் சாா்பில் அமைக்கப்பட்ட உயா்நிலைக் குழு செயல்படுகிறதா என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு கேள்வி எழுப்பியது. திருச்சி மாவட்டத்தைச் ... மேலும் பார்க்க

மதுரையில் இன்று முருக பக்தா்கள் மாநாடு! பவன் கல்யாண் பங்கேற்கிறார்!

மதுரையில் முருக பக்தா்கள் மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதில் ஆந்திர மாநில துணை முதல்வா் பவன் கல்யாண் பங்கேற்கிறாா். இந்து முன்னணி சாா்பில், மதுரை பாண்டி கோயில் அருகில் உள்ள அம்மா திடலில் முருக... மேலும் பார்க்க