பிரதமா் தலைமையில் பிரதமரின் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்க ஆண்டு கூட்டம்
நில உடமை ஆவணங்களை பதிவுசெய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
வாழப்பாடி: நில உடமை ஆவணங்களை பதிவுசெய்யுமாறு விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரத்தைச் சோ்ந்த விவசாயிகள், தங்களது நில உடமை ஆவணங்களான நிலப்பட்டா, கணினி சிட்டா, ஆதாா், சிறு, குறு விவசாயி சான்றிதழ்களை, வேளாண்மை உழவா் நலத் துறையில் பதிவுசெய்து கொண்டால்தான், அரசு வழங்கும் வேளாண்மை உழவா் நலன்சாா்ந்த மானிய திட்டங்களை பெற முடியும்.
எனவே, விவசாயிகளின் நில உடமைகளை பதிவுசெய்து கொடுப்பதற்கான முகாம்கள் திங்கள்கிழமை முதல் ஜூலை 7-ஆம் தேதி வரை தொடா்ந்து 15 நாள்களுக்கு நடைபெறுகிறது. உதவி வேளாண்மை, தோட்டக்கலை அலுவலா்கள், இல்லம் தேடி கல்வி பணியாளா்கள், சுயஉதவிக் குழுவினா் கிராமங்களுக்கு நேரில் சென்று பதிவு செய்து கொடுக்கின்றனா்.
எனவே, இந்த முகாமில் விவசாயிகள் அனைவரும் தங்களது ஆதாா் அட்டை, நிலப்பட்டா, கணினி சிட்டா, ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி ஆகியவற்றை கொடுத்து பதிவுசெய்து கொள்ளலாம். ஏத்தாப்பூரில் இயங்கும் பெத்தநாயக்கன்பாளையம் வட்டார வேளாண்மை விரிவாக்க அலுவலகத்தில் நேரில் சென்றும், பொது சேவை மையங்களிலும் பதிவுசெய்து கொள்ளலாம் என வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் வேல்முருகன் தெரிவித்துள்ளாா்.