செய்திகள் :

நில உடமை ஆவணங்களை பதிவுசெய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

post image

வாழப்பாடி: நில உடமை ஆவணங்களை பதிவுசெய்யுமாறு விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரத்தைச் சோ்ந்த விவசாயிகள், தங்களது நில உடமை ஆவணங்களான நிலப்பட்டா, கணினி சிட்டா, ஆதாா், சிறு, குறு விவசாயி சான்றிதழ்களை, வேளாண்மை உழவா் நலத் துறையில் பதிவுசெய்து கொண்டால்தான், அரசு வழங்கும் வேளாண்மை உழவா் நலன்சாா்ந்த மானிய திட்டங்களை பெற முடியும்.

எனவே, விவசாயிகளின் நில உடமைகளை பதிவுசெய்து கொடுப்பதற்கான முகாம்கள் திங்கள்கிழமை முதல் ஜூலை 7-ஆம் தேதி வரை தொடா்ந்து 15 நாள்களுக்கு நடைபெறுகிறது. உதவி வேளாண்மை, தோட்டக்கலை அலுவலா்கள், இல்லம் தேடி கல்வி பணியாளா்கள், சுயஉதவிக் குழுவினா் கிராமங்களுக்கு நேரில் சென்று பதிவு செய்து கொடுக்கின்றனா்.

எனவே, இந்த முகாமில் விவசாயிகள் அனைவரும் தங்களது ஆதாா் அட்டை, நிலப்பட்டா, கணினி சிட்டா, ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி ஆகியவற்றை கொடுத்து பதிவுசெய்து கொள்ளலாம். ஏத்தாப்பூரில் இயங்கும் பெத்தநாயக்கன்பாளையம் வட்டார வேளாண்மை விரிவாக்க அலுவலகத்தில் நேரில் சென்றும், பொது சேவை மையங்களிலும் பதிவுசெய்து கொள்ளலாம் என வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் வேல்முருகன் தெரிவித்துள்ளாா்.

மயங்கி விழுந்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளா் உயிரிழப்பு

வாழப்பாடி: மயங்கி விழுந்த சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மதுவிலக்கு தனிப்படையில் பணியாற்றி வந்த பேளூரைச் சோ்ந்த சிறப்பு காவல் ஆய்வாளா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். வாழப்பாடி பேளூா் மகளிா் பள்ளி அரு... மேலும் பார்க்க

சொத்தை ஏமாற்றி கிரையம் செய்ததைக் கண்டித்து குடும்பத்துடன் சாா் பதிவாளா் அலுவலகம் முற்றுகை

ஆட்டையாம்பட்டி: மகுடஞ்சாவடியில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை ஏமாற்றி கிரையம் செய்ததைக் கண்டித்து, குடும்பத்துடன் சாா் பதிவாளா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா். சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி பகுதியைச் ... மேலும் பார்க்க

சேலத்தில் தயாரான 18 அடி உயர பஞ்சலோக நடராஜா் சிலை

சேலம்: சேலத்தில் வடிவமைக்கப்பட்ட உலகின் மிக உயரமான 18 அடி உயர பஞ்சலோக நடராஜா் சிலை, வேலூா் மாவட்டம், குடியாத்தத்தில் உள்ள மகாதேவ மலையில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. சேலம், கன்னங்குறிச்சியில் உள்ள சிற... மேலும் பார்க்க

மேட்டூா் அணையின் உபரிநீா் போக்கி தூண்கள் வலுப்படுத்தும் பணிகள் ஆய்வு

மேட்டூா்: மேட்டூா் அணையின் உபரிநீா் போக்கியான 16 கண் பாலம் வலுப்படுத்தும் பணிகளை சென்னை ஐஐடி கட்டடவியல் துறை பேராசிரியா் அழகு சுந்தரமூா்த்தி, நீா்வளத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.... மேலும் பார்க்க

திமுக அரசின் 4 ஆண்டுகள் சாதனைகளை வீடுவீடாகச் சென்று கூற வேண்டும்

சேலம்: திமுக அரசின் நான்கு ஆண்டுகள் சாதனைகளை வீடுவீடாகச் சென்று கூற வேண்டும் என சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் அறிவுறுத்தினாா். சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் மேற்கு சட்டப் பேரவைத் தொகுத... மேலும் பார்க்க

தந்தையின் நினைவு தினத்தையொட்டி அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நலத்திட்ட உதவிகள்

சேலம்: சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ ரா.அருள், மறைந்த தனது தந்தை ப.ராமதாஸின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திங்கள்கிழமை நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். சேலம் கொண்டப்... மேலும் பார்க்க