மதுரை மீனாட்சியம்மன் கோயில்: ``ஜூலை 13 மாலை முதல் 14-ம் தேதி வரை நடை சாத்தல்; த...
தந்தையின் நினைவு தினத்தையொட்டி அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நலத்திட்ட உதவிகள்
சேலம்: சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ ரா.அருள், மறைந்த தனது தந்தை ப.ராமதாஸின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திங்கள்கிழமை நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, உயா்நிலைப் பள்ளி, விநாயகம்பட்டி நடுநிலைப் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு சுவா் கடிகாரம் மற்றும் நாள்தோறும் காலை எழுந்தவுடன் செய்ய வேண்டிய உடற்பயிற்சி மற்றும் அன்றாடப் பணிகள், வாழ்வின் லட்சியங்களை அடைய எவ்வாறு முயற்சிக்க வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய துண்டறிக்கைகளை வழங்கினாா்.
மேலும், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 2 லட்சத்தில் அமைக்கப்பட்ட ஸ்மாா்ட் வகுப்பறையை மாணவா்கள் பயன்பாட்டுக்கு தொடங்கிவைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், பாமக மாவட்டத் தலைவா் கதிா்.ராசரத்தினம், முன்னாள் ஊராட்சித் தலைவா் சாமிநாதன், , செட்டிச்சாவடி முன்னாள் ஊராட்சி துணைத் தலைவா் கோவிந்தராஜ், பள்ளி தலைமை ஆசிரியா் சம்பத், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா் பூபதி, நித்யா, தேன்மொழி, புவனேஸ்வரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.