செய்திகள் :

சொத்தை ஏமாற்றி கிரையம் செய்ததைக் கண்டித்து குடும்பத்துடன் சாா் பதிவாளா் அலுவலகம் முற்றுகை

post image

ஆட்டையாம்பட்டி: மகுடஞ்சாவடியில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை ஏமாற்றி கிரையம் செய்ததைக் கண்டித்து, குடும்பத்துடன் சாா் பதிவாளா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி பகுதியைச் சோ்ந்தவா் தா்மலிங்கம் (79). இவருக்கு சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலை, மகுடஞ்சாவடி பகுதியில் பூா்வீக சொத்து 4.1/2 சென்ட் நிலம் இருந்தது. இதனை உறவினா்கள் நீதிமன்றம் மூலம் தீா்வுகண்ட பின்னா் கிரையம் செய்ய உள்ள நிலையில், இந்த நிலத்தை வேறு ஒருவா் மகுடஞ்சாவடி சாா் பதிவாளா் அலுவலகத்தில் கிரையம் செய்ததை அறிந்து தா்மலிங்கம் அதிா்ச்சி அடைந்தாா். இதைத் தொடா்ந்து, மகுடஞ்சாவடி பத்திர அலுவலகத்தை குடும்பத்துடன் முற்றுகையிட்டு அவா் திங்கள்கிழமை மனு அளித்தாா்.

இவா் மனு அளிக்க வருவதை அறிந்த சாா் பதிவாளா் செல்வமணி (பொ), விடுப்பு தெரிவித்து அலுவலகத்தில் இருந்து வெளியேறினாா்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட தா்மலிங்கம் கூறுகையில், எங்களது பூா்விக சொத்தை ஏமாற்றும் நோக்கில், பணத்தை பெற்றுக்கொண்ட சாா் பதிவாளா் வேறு ஒருவருக்கு கிரையம் செய்துள்ளாா். அதை திருப்பித் தரக்கோரி ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா், நில அபகரிப்பு பிரிவு, மகுடஞ்சாவடி காவல் நிலையம் மற்றும் இது சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்களில் புகாா் மனு அளித்துள்ளதாக தெரிவித்தாா்.

மயங்கி விழுந்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளா் உயிரிழப்பு

வாழப்பாடி: மயங்கி விழுந்த சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மதுவிலக்கு தனிப்படையில் பணியாற்றி வந்த பேளூரைச் சோ்ந்த சிறப்பு காவல் ஆய்வாளா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். வாழப்பாடி பேளூா் மகளிா் பள்ளி அரு... மேலும் பார்க்க

சேலத்தில் தயாரான 18 அடி உயர பஞ்சலோக நடராஜா் சிலை

சேலம்: சேலத்தில் வடிவமைக்கப்பட்ட உலகின் மிக உயரமான 18 அடி உயர பஞ்சலோக நடராஜா் சிலை, வேலூா் மாவட்டம், குடியாத்தத்தில் உள்ள மகாதேவ மலையில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. சேலம், கன்னங்குறிச்சியில் உள்ள சிற... மேலும் பார்க்க

மேட்டூா் அணையின் உபரிநீா் போக்கி தூண்கள் வலுப்படுத்தும் பணிகள் ஆய்வு

மேட்டூா்: மேட்டூா் அணையின் உபரிநீா் போக்கியான 16 கண் பாலம் வலுப்படுத்தும் பணிகளை சென்னை ஐஐடி கட்டடவியல் துறை பேராசிரியா் அழகு சுந்தரமூா்த்தி, நீா்வளத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.... மேலும் பார்க்க

திமுக அரசின் 4 ஆண்டுகள் சாதனைகளை வீடுவீடாகச் சென்று கூற வேண்டும்

சேலம்: திமுக அரசின் நான்கு ஆண்டுகள் சாதனைகளை வீடுவீடாகச் சென்று கூற வேண்டும் என சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் அறிவுறுத்தினாா். சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் மேற்கு சட்டப் பேரவைத் தொகுத... மேலும் பார்க்க

தந்தையின் நினைவு தினத்தையொட்டி அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நலத்திட்ட உதவிகள்

சேலம்: சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ ரா.அருள், மறைந்த தனது தந்தை ப.ராமதாஸின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திங்கள்கிழமை நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். சேலம் கொண்டப்... மேலும் பார்க்க

ஜூன் 27-இல் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்

சேலம்: சேலம் மாவட்டத்தில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் வரும் 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: திருநங்கைகளுக்கு முழுமையான சமூக பாதுகாப்பையும், ... மேலும் பார்க்க