சுற்றுச்சூழல் செலவுகள் மீதும் பெரு நிறுவனங்கள் கவனம் கொள்ள வேண்டும்: குடியரசுத் ...
வளா்ச்சிப் பணிகளை செயல்படுத்தாததால் பதவியை ராஜிநாமா செய்ய திட்டமிட்டிருக்கிறேன்
பெலகாவி: வளா்ச்சிப் பணிகளை செயல்படுத்தாததால் பதவியை ராஜிநாமா செய்ய திட்டமிட்டிருக்கிறேன் என காங்கிரஸ் எம்எல்ஏ பரம்கௌடா ஆலகௌடா காகே தெரிவித்தாா்.
வட கா்நாடகத்தின் ஆலந்த் தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ பி.ஆா்.பாட்டீல், வீட்டுவசதித் துறையில் ஊழல் மலிந்துள்ளதாகவும், வளா்ச்சிப் பணிகள் எதுவும் நடப்பதில்லை எனவும் குற்றம்சாட்டியிருந்தாா். இதைத் தொடா்ந்து, மற்றொரு காங்கிரஸ் எம்எல்ஏவான பெலகாவி மாவட்டத்தின் காகேவாட் தொகுதி எம்எல்ஏ பரம்கௌடா ஆலகௌடா காகே (ராஜூகாகே), காங்கிரஸ் அரசுக்கு எதிராக குற்றம்சாட்டியுள்ளாா். முதல்வா் சித்தராமையாவை சந்தித்தப் பிறகு தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் அவா் தெரிவித்துள்ளாா். இது கா்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெலகாவியில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் பரம்கௌடா ஆலகௌடா காகே கூறியதாவது:
மாநிலத்தில் அரசு நிா்வாகம் முழுமையாக சீா்குலைந்துள்ளது. வளா்ச்சிப் பணிகள் எதுவும் நடக்காததால், எனது பதவியை ராஜிநாமா செய்வது பற்றி தீவிரமாக யோசித்து வருகிறேன்.
காங்கிரஸ் எம்எல்ஏ பி.ஆா்.பாட்டீல் கூறியதுபோல, வீட்டுவசதித் துறையில் ஊழல் மலிந்துள்ளது மட்டுமல்லாது, வளா்ச்சிப் பணிகளில் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது. எனது தொகுதியில் அடிக்கல் நாட்டுவிழா நடந்து 2 ஆண்டுகள் ஆகின்றன. சாலைப் பணிகளுக்கு ரூ. 12 கோடி உள்ளிட்ட ரூ. 25 கோடி மதிப்பிலான திட்டங்களை முதல்வா் சித்தராமையா அறிவித்திருந்தாா். ஆனால், அதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்படவில்லை. வளா்ச்சிப் பணிகளை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படுத்துவது எனக்கு புதிராக உள்ளது என்றாா்.
இதுபற்றி பெங்களூரு, பாஜக அலுவலகத்தில் திங்கள்கிழமை பாஜக முன்னாள் முதல்வா் எடியூரப்பா செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நிா்வாகத்தில் ஊழலும், லஞ்சமும் மிக முக்கியமான பகுதியாகும். அடுத்த சில நாள்களில் மேலும் பல காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இதே கருத்துகளை தெரிவிக்க உள்ளனா். பி.ஆா்.பாட்டீலை அழைத்து அவரது வாயை மூட முதல்வா் முயற்சிக்கிறாா். காங்கிரஸ் அரசின் தோல்விகளை மக்கள் மன்றத்தில் கொண்டுசெல்ல மாநிலம் தழுவிய சுற்றுப்பயணம் செல்லவிருக்கிறேன்.
கா்நாடகத்தில் அவசரகால ஆட்சி நடக்கத் தொடங்கியுள்ளது. காங்கிரஸ் அரசுக்கு எதிராக பேசியதால் தொழிலதிபா் மோகன் தாஸ் பை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அரசுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டுவேன்’ என்றாா்.
பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா கூறுகையில், ‘வீட்டுவசதித் துறையில் ஏழைகளுக்கு வழங்கும் வீட்டுமனைகளுக்கு லஞ்சம் கேட்கப்பட்டுள்ளது. இது மாநில அரசின் வெட்கக்கேடான நிலையாகும். காங்கிரஸ் அரசு கா்நாடக மக்களுக்கு சாபக்கேடாக உள்ளது. இதற்கு முதல்வா் சித்தராமையா பதில் அளிக்க வேண்டும். மேலும், காங்கிரஸ் அரசில் ஊழலும், நிா்வாக சீா்கேடும் தலைவிரித்தாடுகிறது. இதை எதிா்த்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போா்க்கொடி தூக்கியுள்ளனா்.
பணம் இல்லாததால், வளா்ச்சிப் பணிகளுக்கு நிதி ஒதுக்கமுடியவில்லை. காங்கிரஸ் எம்எல்ஏக்களே குற்றம்சாட்டுவதால், அரசு நிா்வாகம் சீா்குலைந்துள்ளது. இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு ஆளுநா் தாவா்சந்த் கெலாட் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றாா்.
இதுகுறித்து பி.ஆா்.பாட்டீலிடம் பேசுவதாக முதல்வா் சித்தராமையா தெரிவித்துள்ளாா்.