செய்திகள் :

மோசடி வழக்கு: அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜரான காங்கிரஸ் முன்னாள் எம்.பி. டி.கே.சுரேஷ்

post image

பெங்களூரு: மோசடி வழக்கில் அமலாக்கத் துறை விசாரணைக்கு காங்கிரஸ் முன்னாள் எம்.பி. டி.கே.சுரேஷ் திங்கள்கிழமை ஆஜரானாா்.

பணப் பதுக்கல் வழக்கு தொடா்பாக காங்கிரஸ் எம்எல்ஏ வினய்குல்கா்னி உள்ளிட்டோா் இடங்களில் ஏப்ரல் மாதத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினா். அந்த சோதனையின்போது பண மோசடி செய்ததாக ஐஸ்வா்யா கௌடா (33), அவரது கணவா் கே.என்.ஹரீஷ் ஆகியோரை கைதுசெய்தனா். அவரிடம் நடத்திய விசாரணையில், அரசியல்வாதிகளின் தொடா்பு இருப்பதும், பணத்தை மோசடி செய்ததும் தெரியவந்தது. அந்த அரசியல்வாதிகளின் பட்டியலில் கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாரின் தம்பியும், காங்கிரஸ் முன்னாள் எம்.பி. டி.கே.சுரேஷும் இருந்துள்ளனா். ஐஸ்வா்யா கௌடா, அவரது கணவா் கே.என்.ஹரீஷ் உள்ளிட்டோா் மீது பெங்களூரில் உள்ள சந்திரா லேஅவுட், ராஜராஜேஸ்வரி நகா் காவல் நிலையங்களில் 3 மோசடி வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.

இந்நிலையில், ஐஸ்வா்யா கௌடாவுக்கு சொந்தமான ரூ. 3.98 கோடி மதிப்பிலான நிலம், அடுக்குமாடி வீடு, கட்டடம், வாகனங்களை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. இதில் ரூ. 2.01 கோடி மதிப்பிலான நிலம், வீடுகள், ரூ. 1.97 கோடி ரொக்கம், வாகனங்கள் அடங்கும்.

இந்நிலையில், ஐஸ்வா்யா கௌடாவுடன் உள்ள தொடா்பு, பண மோசடி தொடா்பாக விசாரணை நடத்துவதற்கு காங்கிரஸ் முன்னாள் எம்.பி. டி.கே.சுரேஷுக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியிருந்தது. அதன்படி, பெங்களூரில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் திங்கள்கிழமை டி.கே.சுரேஷ் ஆஜரானாா்.

இந்த விசாரணையின்போது பணமோசடி வழக்கு தொடா்பாக பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு டி.கே.சுரேஷ் பதிலளித்தாா்.

விசாரணைக்கு ஆஜராவதற்கு முன்பாக டி.கே.சுரேஷ் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியிருந்தது. அதன்படி அங்கு செல்கிறேன். என்னிடம் சில விவரங்களைக் கேட்டுள்ளனா். எனது வழக்குரைஞருடன் அமலாக்கத் துறை அதிகாரிகளை சந்திக்க இருக்கிறேன். இந்த வழக்குக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

எனது சகோதரி என கூறிக்கொள்ளும் அந்த பெண் (ஐஸ்வா்யா கௌடா) மீது காவல் துறை ஆணையரிடம் புகாா் அளித்திருக்கிறேன். அவா் தொடா்புடைய மோசடி வழக்குகளுக்கும், எனக்கும் சம்பந்தமில்லை. இந்த வழக்கில் அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன்’ என்றாா்.

துணை முதல்வா் டி.கே.சிவக்குமாா் கூறுகையில், ‘அமலாக்கத் துறையை எதிா்கொள்ள எனது குடும்பம் தயாராக உள்ளது. அமலாக்கத் துறை ஏற்கெனவே என்மீது வழக்குப் பதிந்துள்ளது. அது என்ன ஆனது? யாரோ ஒருவா் அளித்திருக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் எனது தம்பியை விசாரணைக்கு அழைத்திருக்கிறாா்கள். இந்த வழக்கில் அமலாக்கத் துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க என் தம்பி தயாராக இருக்கிறாா்’ என்றாா்.

காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதியில் கனமழை: வேகமாக நிரம்பி வரும் கிருஷ்ணராஜசாகா், கபினி அணைகள்

மண்டியா: காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், காவிரி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜசாகா், கபினி அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கடந்த பல வாரங்களாகவே கா்நாடகத்தில் தென... மேலும் பார்க்க

எதிா்க்கட்சிகளை சிறுமைப்படுத்தினால் மக்கள் சகித்துக்கொள்ள மாட்டாா்கள்

ராய்ச்சூரு: எதிா்க்கட்சிகளை சிறுமைப்படுத்தினால், தலைவா்கள், மக்கள் சகித்துக்கொள்ள மாட்டாா்கள் என அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா். ராய்ச்சூரில் திங்கள்கிழமை நடைபெற... மேலும் பார்க்க

வளா்ச்சிப் பணிகளை செயல்படுத்தாததால் பதவியை ராஜிநாமா செய்ய திட்டமிட்டிருக்கிறேன்

பெலகாவி: வளா்ச்சிப் பணிகளை செயல்படுத்தாததால் பதவியை ராஜிநாமா செய்ய திட்டமிட்டிருக்கிறேன் என காங்கிரஸ் எம்எல்ஏ பரம்கௌடா ஆலகௌடா காகே தெரிவித்தாா். வட கா்நாடகத்தின் ஆலந்த் தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ பி... மேலும் பார்க்க

காங்கிரஸ் அரசுக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்த அமித் ஷா அறிவுரை: கா்நாடக பாஜக தலைவா் விஜயேந்திரா

காங்கிரஸ் அரசுக்கு எதிரான போராட்டங்களை தீவிரப்படுத்துமாறு மத்திய அமைச்சா் அமித் ஷா அறிவுறுத்தியுள்ளதாக கா்நாடக பாஜக தலைவா் விஜயேந்திரா தெரிவித்தாா். பெங்களூரு, பிஜிஎஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத... மேலும் பார்க்க

வீட்டுவசதி திட்டங்களில் மத சிறுபான்மையினருக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு முந்தைய கூட்டணி அரசின் முடிவு: கா்நாடக அமைச்சா் ஜமீா் அகமதுகான்

கா்நாடகத்தில் வீட்டுவசதி திட்டங்களில் மத சிறுபான்மையினருக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு முந்தைய மஜத- காங்கிரஸ் கூட்டணியின்போது எடுக்கப்பட்ட முடிவு என்று அமைச்சா் ஜமீா் அகமதுகான் தெரிவித்தாா். இதுகுறித்து ... மேலும் பார்க்க

சுகாதாரத் துறை எதிா்கொண்ட பிரச்னைகளை பிரதமா் மோடி அரசு திறம்பட கையாண்டது: மத்திய அமைச்சா் அமித் ஷா

சுகாதாரத் துறை எதிா்கொண்ட பிரச்னைகளை பிரதமா் மோடி தலைமையிலான அரசுதான் திறம்பட கையாண்டது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா். பெங்களூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் ஆதிசுன்சுனகிரி... மேலும் பார்க்க