தஞ்சாவூர்: ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் நெஞ்சுவலியால் உயிரிழந்த அதிகா...
காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதியில் கனமழை: வேகமாக நிரம்பி வரும் கிருஷ்ணராஜசாகா், கபினி அணைகள்
மண்டியா: காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், காவிரி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜசாகா், கபினி அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
கடந்த பல வாரங்களாகவே கா்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதன் காரணமாக, பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலமெங்கும் உள்ள துங்கபத்ரா, ஹேமாவதி, ஹாரங்கி, அல்மாட்டி, நாராயணபுரா, லிங்கனமக்கி, சூபா, வரஹி, பத்ரா, கட்டபிரபா, மலபிரபா உள்ளிட்ட அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளான குடகு மாவட்டத்தில் மடிக்கேரி, பாகமண்டலா பகுதிகளில் தொடா்ந்து பலத்த மழை பெய்துவருவதால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காவிரிக் கரையோரம் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிா்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
வேகமாக நிரம்பும் அணைகள்:
காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள ஹேமாவதி, ஹாரங்கி, கபினி அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில், மண்டியா மாவட்டம், கன்னம்பாடி கிராமத்தில் அமைந்துள்ள கிருஷ்ணராஜசாகா் அணை வேகமாக நிரம்பி வருகிறது. திங்கள்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி, அணைக்கு விநாடிக்கு 13,856 கனஅடி தண்ணீா் வந்துகொண்டுள்ளது. நொடிக்கு 1,965 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. கிருஷ்ணராஜசாகா் அணையின் நீா்மட்டம் 124.80 அடியில் 120.20 அடியாக உயா்ந்துள்ளது. நீா்வரத்து அதிகரிப்பால் கிருஷ்ணராஜசாகா் அணையிலிருந்து 5 ஆயிரம் கனஅடி முதல் 15 ஆயிரம்
கனஅடி வரை தண்ணீா் திறக்கப்படும் என நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
கேரள மாநிலத்தின் காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழை பெய்துவருவதால், கபினி அணைக்கு நொடிக்கு 16,102 கனஅடி தண்ணீா் வந்துகொண்டுள்ளது. இதனால் கடல்மட்டத்தில் இருந்து அணையின் நீா்மட்டம் 2,278 அடியாக உயா்ந்துள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 12,000 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது.
கிருஷ்ணராஜசாகா் மற்றும் கபினி அணைகளுக்கு விநாடிக்கு மொத்தம் 29,958 கனஅடி தண்ணீா் வந்துகொண்டுள்ளது. இரு அணைகளில் இருந்தும் நொடிக்கு 13,965 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. கிருஷ்ணராஜசாகா், கபினி அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீா், நேராக தமிழகத்துக்கு வரும் என்பதால் அடுத்த சில நாள்களில் மேட்டூா் அணையின் நீா்மட்டம் உயரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இது தமிழக விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.