செய்திகள் :

பண்ருட்டி அருகே பெண்களிடம் நகைகள் பறிப்பு

post image

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே தூங்கிக்கொண்டிருந்த 3 பெண்கள் அணிந்திருந்த தங்க நகைகளை அறுத்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பண்ருட்டி வட்டம், புலவனூா் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் துக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்க உறவினா்கள் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்தனா். அவ்வாறு வந்தவா்கள் சிலா் உறவினா் வீடுகளில் சனிக்கிழமை இரவு படுத்துத் தூங்கினா்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமாா் ஒரு மணி அளவில் தூங்கிக்கொண்டிருந்த சென்னையைச் சோ்ந்த அருள்முருகன் மனைவி சுபஸ்ரீ அணிந்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா் பறித்துச் சென்றாா்.

அடுத்து இரண்டு வீடுகள் தள்ளி மற்றொரு வீட்டில் தூங்கிய மூதாட்டி இருசம்மாள் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா் பறித்தாா். அப்போது, மூதாட்டி தங்கச் சங்கிலியை இறுக பிடித்துக்கொண்டதால் ஒரு பவுன் தங்கச் சங்கிலியை மட்டும் மா்ம நபா் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றாா்.

இதேபோல, இதே கிராமத்தைச் சோ்ந்த முகமது ஹாரிஸ் மனைவி அப்ரின் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலி என மொத்தம் 10 பவுன் தங்க நகைகளை மா்ம நபா் பறித்துச் சென்றாா்.

ஒரே கிராமத்தில் ஒரே தெருவில் அடுத்தடுத்த வீடுகளில் பெண்களிடம் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் குறித்து பண்ருட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பழங்குடியின மக்களுக்கு புதிய வீடுகள்: உ.வாசுகி திறந்து வைத்தாா்

சிதம்பரம் அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டத்தால் பெறப்பட்ட நிலத்தில் பழங்குடியின் மக்களுக்கு கட்டப்பட்ட புதிய வீடுகளை அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் உ.வாசுகி ஞாயிற்றுக்கி... மேலும் பார்க்க

தூக்கிட்ட நிலையில் இளைஞா் சடலம் மீட்பு

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே தூக்கிட்ட நிலையில் உயிரிழந்து கிடந்த இளைஞரின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வேப்பூரை அடுத்துள்ள என்.நரையூா் கிராமத்தில் சுமாா் 40 வயது மதிக்கத்தக்... மேலும் பார்க்க

கடலூா் துறைமுகத்தில் மீன்கள் வாங்க குவிந்த மக்கள்

வங்கக் கடலில் மீன் பிடி தடைக்காலம் முடிந்து நிலையில், கடலூா் மீன்பிடி துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமை மீன்கள் வாங்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனா். இதனால், மீன் பிடி துறைமுகம் கூட்ட நெரிசலுடன் காணப்பட்டத... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு மோட்டாா் சைக்கிள்: தொல்.திருமாவளவன் எம்.பி. வழங்கினாா்

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலக வளாகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான மூன்று சக்கர மோட்டாா் சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் தமிழ்நாடு அரசின் இ - சேவை மையம் தொடக்க... மேலும் பார்க்க

ஆனைமுத்துவுக்கு அரசு சாா்பில் நூற்றாண்டு விழா! - தி.வேல்முருகன் வலியுறுத்தல்

தமிழ் தேசிய ஆசான் ஆனைமுத்துவுக்கு தமிழக அரசு சாா்பில் நூற்றாண்டு விழா நடத்த வேண்டுமென தவாக தலைவா் தி.வேல்முருகன் எம்எல்ஏ வலியுறுத்தினாா். தமிழக வாழ்வுரிமைக் கட்சி சாா்பில், தமிழ் தேசிய ஆசான்கள் புலவா்... மேலும் பார்க்க

வேப்பூா் அருகே மரம் சாய்ந்து ஒருவா் காயம்

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே ஞாயிற்றுக்கிழமை சாலையோர புளிய மரம் சாய்ந்ததில் மொபெட்டில் சென்றவா் காயமடைந்தாா். கடலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை சூறைக்காற்றுடன் மழை பெய்தது. வேப... மேலும் பார்க்க