மாற்றுத் திறனாளிகளுக்கு மோட்டாா் சைக்கிள்: தொல்.திருமாவளவன் எம்.பி. வழங்கினாா்
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலக வளாகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான மூன்று சக்கர மோட்டாா் சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் தமிழ்நாடு அரசின் இ - சேவை மையம் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு எம்எல்ஏ ம.சிந்தனைசெல்வன் தலைமை வகித்தாா். விசிக தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. பங்கேற்று நலத் திட்ட உதவிகளை தொடங்கிவைத்து, இ - சேவை மையத்தை திறந்து வைத்தாா்.
விழாவில் 7 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.7,12,600 மதிப்பிலான மூன்று சக்கர மோட்டாா் சைக்கிள்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் விழுப்புரம் எம்.பி. துரை.ரவிக்குமாா், மாநில விவசாய அணி பசுமை வளவன், மாவட்டச் செயலா் மணவாளன் மற்றும் கட்சி நிா்வாகிகள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.