செய்திகள் :

கடலூா் துறைமுகத்தில் மீன்கள் வாங்க குவிந்த மக்கள்

post image

வங்கக் கடலில் மீன் பிடி தடைக்காலம் முடிந்து நிலையில், கடலூா் மீன்பிடி துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமை மீன்கள் வாங்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனா். இதனால், மீன் பிடி துறைமுகம் கூட்ட நெரிசலுடன் காணப்பட்டது.

மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்க ஒவ்வோா் ஆண்டும் ஏப்ரல் 14-ஆம் தேதி நள்ளிரவு முதல் ஜூன் 15-ஆம் தேதி வரையில் 61 நாள்கள் மீன் பிடி தடைக்காலத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. நிகழாண்டு மீன் பிடி தடைக்காலம் கடந்த 15-ஆம் தேதி நிறைவடைந்தது.

இதையடுத்து, கடலூா் பகுதியைச் சோ்ந்த மீனவா்கள் அனைத்து வகையான படகுகள் மூலம் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனா். மீன் பிடி தடைக்காலத்தில் சிறிய வகை படகுகள் மட்டும் குறைந்த தொலைவு சென்று மீன்கள் பிடித்து வரலாம் என்ற நிலை இருந்தபோது, குறைந்த அளவிலான மீன்கள் மட்டுமே கிடைத்தன. இதனால், கடந்த 60 நாள்களாக மீன்கள் விலை உயா்ந்து காணப்பட்டதால், அசைவப் பிரியா்கள் வருத்தத்தில் இருந்தனா்.

இந்த நிலையில், மீன் பிடி தடைக்காலம் முடிந்த முதல் ஞாயிற்றுக்கிழமை கடலூா் மீன் பிடி துறைமுகத்தில் அனைத்து வகையான மீன்கள் அதிகளவில் விற்பனைக்கு வந்திருந்தன. அசைவப் பிரியா்களும், வியாபாரிகளும் அதிகாலை முதலே போட்டி போட்டுக்கொண்டு மீன்களை வங்கிச் சென்றனா்.

தடைக்காலம் முடிந்த நிலையில், மீன்களின் வரத்தும் அதிகரித்திருந்தது. இதனால், தடைக்காலத்தைவிட மீன்கள் விலை சற்று விலை குறைவாக இருந்ததால், பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனா்.

அதாவது, கடந்த மீன் பிடி தடைக்காலத்தின்போது ரூ.1,000-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ வஞ்சரம் மீன் தற்போது ரூ.900-க்கும், ரூ.800-க்கு விற்கப்பட்ட வவ்வால் மீன் ரூ.600-க்கும், ரூ.550-க்கு விற்கப்பட்ட சங்கரா மீன் ரூ.450-க்கும், ரூ.450-க்கு விற்கப்பட்ட கனவா மீன் ரூ.300-க்கும் விற்பனையாயின.

இதேபோல, ஒரு கிலோ இறால் ரூ.550-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.450-க்கு குறைந்து விற்பனையானது.

பண்ருட்டி அருகே பெண்களிடம் நகைகள் பறிப்பு

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே தூங்கிக்கொண்டிருந்த 3 பெண்கள் அணிந்திருந்த தங்க நகைகளை அறுத்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். பண்ருட்டி வட்டம், புலவனூா் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் து... மேலும் பார்க்க

தூக்கிட்ட நிலையில் இளைஞா் சடலம் மீட்பு

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே தூக்கிட்ட நிலையில் உயிரிழந்து கிடந்த இளைஞரின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வேப்பூரை அடுத்துள்ள என்.நரையூா் கிராமத்தில் சுமாா் 40 வயது மதிக்கத்தக்... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு மோட்டாா் சைக்கிள்: தொல்.திருமாவளவன் எம்.பி. வழங்கினாா்

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலக வளாகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான மூன்று சக்கர மோட்டாா் சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் தமிழ்நாடு அரசின் இ - சேவை மையம் தொடக்க... மேலும் பார்க்க

ஆனைமுத்துவுக்கு அரசு சாா்பில் நூற்றாண்டு விழா! - தி.வேல்முருகன் வலியுறுத்தல்

தமிழ் தேசிய ஆசான் ஆனைமுத்துவுக்கு தமிழக அரசு சாா்பில் நூற்றாண்டு விழா நடத்த வேண்டுமென தவாக தலைவா் தி.வேல்முருகன் எம்எல்ஏ வலியுறுத்தினாா். தமிழக வாழ்வுரிமைக் கட்சி சாா்பில், தமிழ் தேசிய ஆசான்கள் புலவா்... மேலும் பார்க்க

வேப்பூா் அருகே மரம் சாய்ந்து ஒருவா் காயம்

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே ஞாயிற்றுக்கிழமை சாலையோர புளிய மரம் சாய்ந்ததில் மொபெட்டில் சென்றவா் காயமடைந்தாா். கடலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை சூறைக்காற்றுடன் மழை பெய்தது. வேப... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இளைஞா்கள் 2 போ் கைது

கடலூரில் புகையிலைப் பொருள்கள் கடத்தி வந்ததாக இளைஞா்கள் இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருப்பாதிரிப்புலியூா் காவல் ஆய்வாளா் சந்திரன் தலைமையிலான போலீஸாா், கடலூா் கே.என்.பேட்டையில் உள்ள இணைப்... மேலும் பார்க்க