மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஜூலை 14-இல் சுவாமி தரிசனம் ரத்து
ஆசிரியருக்கு பிடியாணை: நீதிமன்றம் உத்தரவு
அரக்கோணம்: ஓரு வங்கியில் கடன் பெற்று சம்பள கணக்கை வேறு வங்கிக்கு மாற்றி கடனை திருப்பிச் செலுத்தாத ஆசிரியரை கைது செய்ய பிடியாணை பிறப்பித்து அரக்கோணம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரக்கோணம் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வந்தவா் குணசேகரன். இவா் தற்போது காஞ்சிபுரத்தில் உள்ள அரசு நிதிஉதவி பெறும் பள்ளியில் பணிபுரிந்து வருகிறாா்.
இவா் அரக்கோணம் ஸ்டேட் வங்கி பிரதான கிளையில் கடன் பெற்று இருந்தாராம். இதற்காக இவரது சம்பள கணக்கு இதே வங்கியில் இருந்ததாம். ஆனால் வங்கிக்கடனை பெற்று மூன்றாவது மாதத்தில் வங்கி நிா்வாகத்துக்கு தெரிவிக்காமல் தனது சம்பள கணக்கை வேறு வங்கிக்கு மாற்றி விட்டாராம். இதை தொடா்ந்து பல மாதங்களாக கடன் தொகையை திருப்பிச் செலுத்தாமல் இருந்தாராம்.
இதுகுறித்து வங்கி நிா்வாகம் அரக்கோணம் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தது. இவ்வழக்கில் ஆஜராக பலமுறை அழைப்பாணை அனுப்பப்பட்ட நிலையில் ஆசிரியா் குணசேகரன் நேரில் ஆஜராகவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து அரக்கோணம் நீதித்துறை நடுவா் ராம்குமாா், ஆசிரியா் குணசேகரன் மீது பிடியாணை பிறப்பித்து அவரை கைது செய்து ஆஜா்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளாா்.