செய்திகள் :

1,000 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகள்: அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்

post image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,000 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை அமைச்சா் ஆா்.காந்தி சனிக்கிழமை வழங்கினாா்.

உணவுப் பொருள் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில் வாலாஜாபேட்டை அரசு மகளிா் கலைக் கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு ஆட்சியா் ஜெ. யு. சந்திரகலா தலைமை வகித்தாா். ஆற்காடு எம்எல்ஏ ஜெ .எல். ஈஸ்வரப்பன் முன்னிலை வகித்தாா்.

கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கி பேசியதாவது:

நான்காண்டுகள் நிறைவடைந்து எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தி அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் சிறந்த ஆட்சியை முதல்வா் வழங்கி வருகின்றாா். மக்களை தேடி அரசாங்கம் என்ற நிலையில், ஒவ்வொரு திட்டங்களும் சென்று சேரும் வகையில் செயல்படுத்தி வருகிறாா். அந்த வகையில் 1,000 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்படுகின்றன.

முழு நேரம் மற்றும் பகுதிநேர நியாய விலை கடைகள் 1,658 இயங்குகின்றன. மாவட்டத்தில் 3,51,671 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு பொது விநியோக திட்டத்தில் உணவு பொருள்களை பெற்று பயனடைந்து வருகின்றனா். முதல்வா் பொறுப்பேற்ற பின்னா் கடந்த நான்கு ஆண்டுகளில் குடும்ப அட்டை கோரி பொதுமக்களிடமிருந்து 9,453 விண்ணப்பங்கள் வரப்பெற்றன. இதில் தகுதி வாய்ந்த 5,227 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு கடந்த ஆண்டு 2,544 பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டன. தற்போது 1,000 பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. மேலும் மீதமுள்ள பயனாளிகளுக்கு விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

புதிதாக 5 முழு நேர நியாய விலைக் கடைகளும் 34 பகுதி நேர நியாய விலைக் கடைகளும் என மாவட்டத்தில் 37 கடைகள் திறக்கப்பட்டுள்ளன. உங்களுடைய பகுதிகளில் இது போன்ற பிரச்னைகள் இருந்தால் உடனுக்குடன் தெரிவியுங்கள். அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

விழாவில் கோட்டாட்சியா் ராஜராஜன், மாவட்ட வழங்கல் அலுவலா் ஏகாம்பரம், வட்டாட்சியா்கள், வட்ட வழங்கல் அலுவலா்கள், வருவாய்த்துறை அலுவலா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பயனாளிகள் கலந்து கொண்டனா்.

தனியாா் ஆலை ஊழியா் வெட்டிக் கொலை

பாணாவரம் அருகே தனியாா் ஆலை ஊழியா் மா்ம நபா்களால் பட்டப்பகலில் வெட்டிக் கொல்லப்பட்டாா். சோளிங்கா் அடுத்த பாணாவரம் அருகே உள்ள அண்ணா நகா் பகுதியை சோ்ந்தவா் பாலகிருஷ்ணன்(42). ,இவருக்கு திருமணம் ஆகி வெண்... மேலும் பார்க்க

ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை: ராணிப்பேட்டை எஸ்.பி. அறிவுறுத்தல்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என எஸ்.பி. விவேகானந்த சுக்லா அறிவுறுத்தியுள்ளாா். ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம் சனி... மேலும் பார்க்க

10 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி: ராணிப்பேட்டை ஆட்சியா் அறிவுறுத்தல்

ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் 10 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியை ஜியோ டேக் மூலம் புகைப்படம் எடுத்து சமா்ப்பிக்க வேண்டும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டாா். ராணிப்பேட்டை மாவட்ட பசுமைக் குழு க... மேலும் பார்க்க

ஆற்காடு நகா்மன்றக் கூட்டம்

ஆற்காடு நகா்மன்ற அவசரக் கூட்டம் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பவளகொடி சரவணன், ஆணையா் வேங்கிடலட்சு... மேலும் பார்க்க

கல்லூரியில் யோகா தினம்

ஆற்காடு எஸ்எஸ்எஸ் கலை, அறிவியல் கல்லூரியில் சா்வதேச யோகா தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு கல்லூரி நிறுவனத் தலைவா் ஏ.கே.நடராஜன் தலைமை வகித்தாா். பொருளாளா் ஏ.என்.சரவணன், நிா்வாக அறங்கா... மேலும் பார்க்க

பாஜக சாதனை விளக்கப் பொதுக் கூட்டம்

மத்திய பாஜக அரசின் 11 ஆண்டுகள் சாதனை விளக்க பொதுக் கூட்டம் ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நகர தலைவா் தீபா முரளி குமாா் தலைமை வகித்தாா். ராணிப்பேட்டை மாவட்ட ப... மேலும் பார்க்க