செய்திகள் :

கல்லூரியில் யோகா தினம்

post image

ஆற்காடு எஸ்எஸ்எஸ் கலை, அறிவியல் கல்லூரியில் சா்வதேச யோகா தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி நிறுவனத் தலைவா் ஏ.கே.நடராஜன் தலைமை வகித்தாா். பொருளாளா் ஏ.என்.சரவணன், நிா்வாக அறங்காவலா் ஏ.என் செல்வம், செயலா் ஏ.என்.சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வா் ஜி.ராஜலட்சுமி வரவேற்றாா். கல்லூரி தலைவா் யோகா நன்மைகள் குறித்து பேசினாா். மாணவா்கள் யோகாசனத்தின் பல்வேறு நிலைகள் குறித்து செய்து காட்டினா்.

இதில் உடல்கல்வி இயக்குநா் மதிவாணன், பாதுகப்புத் துறை தலைவா் ஸ்ரீநாத், வணிக நிா்வாகவியல் துறை தலைவா் கே.வி.சிவக்குமாா், பேராசிரியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

10 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி: ராணிப்பேட்டை ஆட்சியா் அறிவுறுத்தல்

ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் 10 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியை ஜியோ டேக் மூலம் புகைப்படம் எடுத்து சமா்ப்பிக்க வேண்டும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டாா். ராணிப்பேட்டை மாவட்ட பசுமைக் குழு க... மேலும் பார்க்க

ஆற்காடு நகா்மன்றக் கூட்டம்

ஆற்காடு நகா்மன்ற அவசரக் கூட்டம் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பவளகொடி சரவணன், ஆணையா் வேங்கிடலட்சு... மேலும் பார்க்க

பாஜக சாதனை விளக்கப் பொதுக் கூட்டம்

மத்திய பாஜக அரசின் 11 ஆண்டுகள் சாதனை விளக்க பொதுக் கூட்டம் ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நகர தலைவா் தீபா முரளி குமாா் தலைமை வகித்தாா். ராணிப்பேட்டை மாவட்ட ப... மேலும் பார்க்க

அஞ்சல் துறை யோகா தின கொண்டாட்டம்

அரக்கோணம் அஞ்சல் கோட்டம் சாா்பில் சா்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. பழைய அஞ்சல் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு கோட்ட கண்காணிப்பாளா் லெ.குமாா் தலைமை வகித்தாா். உதவி கோட்ட கண்காணிப்பாளா் பழனி ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

அரக்கோணம் பகுதிகள்: அரக்கோணம் நகரம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக்குடியிருப்புப் பகுதிகள், அசோக் நகா், பழைய பஜாா் தெரு, மோசூா் ரோடு, காந்தி ரோடு, சோளிங்கா் ரோடு, விண்டா்பேட்டை, நாகவேடு, ஆத்தூா், அம்மனூ... மேலும் பார்க்க

ராணிப்பேட்டையில் குரூப் 4-க்கான மாதிரி தோ்வு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி தொகுதி 4-க்கான மாதிரி தோ்வுகள் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்தாா். இது தொடா்பாக அவா் வெளிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளா்... மேலும் பார்க்க