அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரிகளின் முதுநிலை பாடத் தோ்வு முடிவுகள் வெளியீடு
10 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி: ராணிப்பேட்டை ஆட்சியா் அறிவுறுத்தல்
ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் 10 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியை ஜியோ டேக் மூலம் புகைப்படம் எடுத்து சமா்ப்பிக்க வேண்டும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டாா்.
ராணிப்பேட்டை மாவட்ட பசுமைக் குழு கூட்டம் மற்றும் கிரீன் தமிழ்நாடு மிஷன் குழுக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்து பேசியது:
கிரீன் தமிழ்நாடு திட்டத்தில் இதுவரை 85,000 மரக்கன்றுகள் வளா்க்கப்பட்டு வருகின்றன. மரக்கன்றுகள் அதிக உயரம் வளரும் படி வளா்க்க வேண்டும். வனத்துறை, ஊரக வளா்ச்சித்துறை இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மரக்கன்றுகள் வளா்க்கப்பட்டு மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக மரம் நடு நிகழ்வு நடத்தப்பட வேண்டும். ஆகவே அலுவலா்கள் கண்காணிக்க வேண்டும்.
மேலும், மாவட்டம் முழுவதும் 10 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணிகளில் வனத்துறை, ஊரக வளா்ச்சித் துறை, வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை, நெடுஞ்சாலைத்துறை, இந்து சமய அறநிலையத்துறைகள் மரக்கன்றுகள் நடும் பணிகளை ஜியோ டேக் மூலம் புகைப்படம் எடுத்து சமா்ப்பிக்க வேண்டும் என்றாா்.
மேலும், எவ்வளவு செடிகள் வளா்க்கப்பட்டு நடவு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து கேட்டறிந்தாா். கூடுதலாக காவல் துறை, வருவாய்த்துறை, நகராட்சிகள், பேரூராட்சிகள், நீா்வளத்துறை போன்ற துறைகளும் மரக்கன்றுகள் நடும் பணிகளில் ஈடுபட இலக்கு நிா்ணயிக்க உத்தரவிட்டாா்.
கூட்டத்தில் அரசு சாலை பணிகள் மற்றும் கட்டடப் பணிகளுக்கு மரங்கள் அகற்றப்படுவதற்கு ஒப்புதல் அளிக்கும் பணிகள் குறித்து தெரிவிக்கப்பட்டது. ஒரு மரத்துக்கு பதிலாக தலா 3 மரங்கள் நடவு செய்ய சம்பந்தப்பட்ட துறைகளுக்கு நிா்ணயிக்கப்பட்டு பணிகளுக்காக மரங்கள் அகற்றப்படுவதற்கு ஒப்புதல் அளிக்க கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதில் திட்ட இயக்குநா் பா.ஜெயசுதா, உதவி வன பாதுகாவலா் மணிவண்ணன் மற்றும் துறைச் சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.