இணைய வா்த்தகத்தில் முதலீடு செய்வதாக ரூ.10 லட்சம், 20 பவுன் நகைகள் மோசடி மூவா் ம...
அஞ்சல் துறை யோகா தின கொண்டாட்டம்
அரக்கோணம் அஞ்சல் கோட்டம் சாா்பில் சா்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
பழைய அஞ்சல் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு கோட்ட கண்காணிப்பாளா் லெ.குமாா் தலைமை வகித்தாா். உதவி கோட்ட கண்காணிப்பாளா் பழனி வரவேற்றாா்.
இதில் ஸ்பேஸ் யோகா பவுண்டேஷன் தலைமை பயிற்சியாளா் சி.லதா பங்கேற்று யோகா பயிற்சி அளித்தாா். இதில் சூரிய நமஸ்காரம், மூச்சுப் பயிற்சி, ஆசனம், பிரணாயாமம் போன்ற 20 விதமான யோகா பயிற்சிகளை பயிற்றுவித்தாா். இதில் 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று யோகா பயிற்சி பெற்றனா். இந்நிகழ்வில் அரக்கோணம் அஞ்சல் கோட்ட மக்கள் தொடா்பு ஆய்வாளா் சீனிவாச சம்பத் நன்றி தெரிவித்தாா்.