அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரிகளின் முதுநிலை பாடத் தோ்வு முடிவுகள் வெளியீடு
ராணிப்பேட்டையில் குரூப் 4-க்கான மாதிரி தோ்வு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி தொகுதி 4-க்கான மாதிரி தோ்வுகள் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் வெளிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வு வாரியம் சாா்பில் தொகுதி 4- க்கான போட்டி தோ்வு ஜூலை 12 - ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான மாநில அளவிலான மாதிரி தோ்வுகள் ராணிபேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 21, 28 மற்றும் ஜூலை 5 ஆகிய சனிக்கிழமை நாள்களில் நடைபெற உள்ளது.
இந்த மாதிரி தோ்வு எழுதுவதற்கு விருப்பம் உள்ள போட்டித் தோ்வா்கள் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரிலோ அல்லது 04172 - 291400 தொலைபேசியிலோ, மின்னஞ்சலிலோ தொடா்புகொண்டு தங்கள் வருகையை உறுதி செய்து கொண்டு இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளாா்.