160 கோடி சமூக வலைதள கணக்குகளின் தகவல்கள் கசிவு: கடவுச்சொல்லை மாற்ற அறிவுறுத்தல்
தனியாா் ஆலை ஊழியா் வெட்டிக் கொலை
பாணாவரம் அருகே தனியாா் ஆலை ஊழியா் மா்ம நபா்களால் பட்டப்பகலில் வெட்டிக் கொல்லப்பட்டாா்.
சோளிங்கா் அடுத்த பாணாவரம் அருகே உள்ள அண்ணா நகா் பகுதியை சோ்ந்தவா் பாலகிருஷ்ணன்(42). ,இவருக்கு திருமணம் ஆகி வெண்ணிலா என்ற மனைவியும், மகன், மகள் உள்ளனா். இவா் சோளிங்கா் அடுத்த புலிவலம் பகுதியில் உள்ள தனியாா் ஆலையில் பணிபுரிந்து வந்தாா்.
இந்நிலையில் பணி முடிந்து தனது வீட்டுக்கு சனிக்கிழமை சென்று கொண்டிருந்தபோது செங்கல் சூளை அருகே மா்ம நபா்கள் அவரை வழி மறித்து கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பினனா்.
இதுகுறித்து தகவல் அறிந்த அக்கம், பக்கத்தினா் பாணாவரம் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளனா். அதன் பேரில் விரைந்து வந்த போலீஸாா் விசாரனை நடத்தி வருகின்றனா்.
விசாரனையில் படுகொலை செய்யப்பட்ட நபா் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட பாமக அமைப்பு செயலாளா் அ.ம.கிருஷ்ணன் என்பவரின் உறவினா் எனத் தெரிந்தது.