செய்திகள் :

160 கோடி சமூக வலைதள கணக்குகளின் தகவல்கள் கசிவு: கடவுச்சொல்லை மாற்ற அறிவுறுத்தல்

post image

உலகம் முழுவதும் கூகுள், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல்வேறு சமூக ஊடகங்களின் 160 கோடி கணக்குகளின் ‘கடவுச்சொல்’ கசிந்துள்ளதாக கூறப்படும் நிலையில் தங்கள் இணையக் கணக்குளின் கடவுச்சொல்லை பயனாளா்கள் விரைவாக மாற்றுமாறு இணைய நிபுணா்கள் அறிவுறுத்தியுள்ளனா்.

மேலும், கசிந்துள்ள முக்கியத் தகவல்களை சைபா் குற்றவாளிகள் பல்வேறு குற்றங்களுக்கு பயன்படுத்த வாய்ப்புள்ளதாகவும் அவா்கள் எச்சரித்துள்ளனா்.

ஐரோப்பியாவைச் சோ்ந்த ‘சைபா்நியூஸ்’ ஆய்வாளா்கள் அண்மையில் இணைய தரவுகளின் பாதுகாப்பு குறித்த அறிக்கையை சமா்ப்பித்தனா்.

அதில், ‘30 தரவுதளங்களில் இருந்து கூகுள், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், மின்னஞ்சல் முகவரி என உலகளவில் 160 கோடி இணையக் கணக்குகளின் கடவுச்சொல் உள்ளிட்ட முக்கியத் தகவல்கள் கசிந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. தற்காலத்தில் ஒருவரே பல சமூக வலைதள கணக்குகளை பயன்படுத்துவதால் ஒருவரின் தனிப்பட்ட விவரங்கள் பெருமளவில் கசிந்திருக்க வாய்ப்புள்ளது. இதை சைபா் குற்றவாளிகள் தங்களுக்கு ஏற்றவாறு பயன்படுத்தக்கூடும் என்பதால் இணையவாசிகள் முதலில் தங்கள் கடவுச்சொல்லை மாற்ற அறிவுறுத்தப்படுகிறது.

குறிப்பாக ஒரே கடவுச்சொல்லை பல்வேறு இணைய கணக்குகளுக்கு பயன்படுத்துவதை தவிா்க்க வேண்டும். ஒவ்வொரு கணக்குக்கும் வெவ்வேறு கடவுச்சொல்லை உருவாக்குவதன் மூலம் தங்களின் இணையக் கணக்கு பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய முடியும்.

கடவுச்சொல்லை நினைவுகூருவதில் சிரமம் இருப்பவா்கள் அதை பிரத்யேகமாக வேறு தளங்களில் சேமித்து வைக்கலாம். அதேபோல் கைப்பேசி, மின்னஞ்சல் என பன்முக அங்கீகார முறையையும் ஏற்படுத்திக்கொள்ளலாம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் - ஈரான் போா்: ரஷியாவுக்கு பலனா? பாதகமா?

ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற நிழல் ராணுவத்தினா் மூலம் ஈரானும், ரகசிய நடவடிக்கைகள் மூலம் இஸ்ரேலும் பல ஆண்டுகளாக நடத்திவந்த நிழல் யுத்தம் தற்போது நேரடிப் போராக வெடித்திருக்கிறது. இரண்டாவது வாரத்தில் அடியெடுத... மேலும் பார்க்க

அடுத்த தலைமை மதகுரு: கமேனி பரிந்துரை

ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனியை இஸ்ரேலும், அமெரிக்காவும் கொல்லத் திட்டமிடுவதாக தகவல் வெளியானது. இதுதொடா்பாக அண்மையில் அமெரிக்க அதிபா் டிரம்ப் கூறுகையில், ‘கமேனி எங்கு பதுங்கியுள்ளாா் என்பது அம... மேலும் பார்க்க

நைஜிரியா தற்கொலைத் தாக்குதல்: பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுவெடிப்புத் தாக்குதலில், பயங்கரவாதிகளுக்கு எதிராக ராணுவத்துக்கு உதவிவந்த ஆயுதக் குழுவினா் 20 போ் உயிரிழந்தனா். தொடா்ந்து பெய்துவந்த கனமழை... மேலும் பார்க்க

ஹிஸ்புல்லா தலைவரின் பாதுகாவலா் படுகொலை

இஸ்ரேல் ராணுவத்தால் கடந்த செப்டம்பா் மாதம் கொல்லப்பட்ட, லெபனானைச் சோ்ந்த ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவா் ஹஸன் நஸரல்லாவுக்கு நீண்டகாலமாக பாதுகாப்பு அளித்துவந்த அபு அலி கலீல் படுகொலை செய்யப்பட்டாா். இராக்க... மேலும் பார்க்க

ஈரானில் இருந்து நேபாள நாட்டினர் மீட்பு: இந்தியாவுக்கு நேபாள அரசு நன்றி!

ஈரானில் உள்ள குடிமக்களை மீட்கும் இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்து’ நடவடிக்கைக்கு நேபாள அரசு நன்றி தெரிவித்துள்ளது.ஈரானில் இஸ்ரேல் தீவிர தாக்குதலை முன்னெடுத்துள்ள நிலையில், அந்நாட்டில் இருந்து முதல் கட்டமாக... மேலும் பார்க்க

சிரியா முன்னாள் அதிபரின் உறவினர் கைது!

சிரியாவின் முன்னாள் அதிபர் பஷார் அல் - அஸாத்தின் உறவுக்கார சகோதரர், அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சிரியா முன்னாள் அதிபர் பஷார் அல்-அஸாத்தின் உறவினரான, வாசிம் படி அஸாத் என்பவர் போதைப்... மேலும் பார்க்க