Maargan: "நடிகர்கள் நாடாளக் கூடாது என்பது விதியல்ல" - அரசியலுக்கு வருவது குறித்து விஜய் ஆண்டனி
லியோ ஜான் பால் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, பிரிகிடா, சமுத்திரக் கனி போன்றோர் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'மார்கன்'.
இப்படம் ஜூன் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று (ஜூன் 24) மதுரையில் புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

அப்போது விஜய் ஆண்டனியிடம், "நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா?" எனக் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.
அதற்குப் பதிலளித்த விஜய் ஆண்டனி , “நான் அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. நடிகர்கள் நாடாளக்கூடாது என்பது விதியல்ல. மக்கள் ஆதரவு இருந்தால் ஆளலாம்.
ஆனால் அதற்கான அறிவு என்னிடம் இல்லை. எனக்கு 50 வயது ஆகிவிட்டது. வட்டம், மாவட்டம் என அரசியல் பற்றி எதுவும் தெரியாது.
இன்னும் மக்களைப் பார்த்துச் சந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டும். புகழ் இருக்கிறது என்பதற்காக அரசியலில் குதிக்க முடியாது” என்று கூறியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...