செய்திகள் :

சுபான்ஷு சுக்லாவுக்கு மோடி, ராகுல் வாழ்த்து!

post image

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவுக்கு பிரதமர் நரேந்திர மோடியும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் ‘ககன்யான்’ திட்டத்துக்காக தேர்வான வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா, அமெரிக்காவில் செயல்படும் மனித விண்வெளிப் பயண சேவைகள் நிறுவனமான ‘ஆக்ஸியம் ஸ்பேஸ்’ நிறுவனத்தின் ‘ஆக்ஸியம்-4’ திட்டத்தின்கீழ் புதன்கிழமை விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ‘ஃபால்கான் 9’ மூலம் இன்று பகல் 12.01 மணிக்கு சுபான்ஷு சுக்லாவுடன் 3 பேர் விண்வெளிக்குப் புறப்பட்டனர்.

இந்த நிலையில், சுபான்ஷு சுக்லாவுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில்,

”இந்தியா, ஹங்கேரி, போலந்து மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி வீரர்களின் பயணத்தை நாங்கள் வரவேற்கிறோம்.

இந்திய விண்வெளி வீரர், குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற உள்ளார். அவர் 140 கோடி இந்தியர்களின் விருப்பங்கள், நம்பிக்கைகளை தன்னுடன் சுமந்து செல்கிறார்.

அவருக்கும் மற்ற விண்வெளி வீரர்களுக்கும் வெற்றி கிடைக்க வாழ்த்துகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில்,

"குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்துக்கான தனது பயணத்தைத் தொடங்கியது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமையான தருணம்.

முதல் இந்திய விண்வெளி வீரரான ராகேஷ் சர்மாவின் மரபை முன்னெடுத்து, 41 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளிக்குச் செல்வது ஒவ்வொரு இந்தியருக்கும் ஊக்கமளிக்கிறார்.

சுபான்ஷு மற்றும் குழுவினர் பாதுகாப்பாகவும் வெற்றிகரமாகவும் திரும்ப வாழ்த்துகிறேன். ஜெய் ஹிந்த், ஜெய் பாரத்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க : தோளில் மூவர்ணக் கொடி; சகாப்தத்தின் தொடக்கம்: விண்ணிலிருந்து சுபான்ஷு சுக்லா

2026 முதல் 10ம் வகுப்புக்கு இரண்டு பொதுத் தேர்வுகள்: சிபிஎஸ்இ

நாடு முழுவதும்2026ஆம் ஆண்டு முதல் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு பொதுத் தேர்வுகளை நடத்த சிபிஎஸ்இ ஒப்புதல் வழங்கியுள்ளதாக தேர்வுக் கட்டுப்பாடு அதிகாரி அறிவித்துள்... மேலும் பார்க்க

அவசரநிலை 50 ஆண்டுகள் நிறைவு! மத்திய அமைச்சரவை தீர்மானம்!

அவசரநிலை பிரகடனம் செய்து 50 ஆண்டுகள் நிறைவையொட்டி, மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் புதன்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.காங்கிரஸ் தலைமையிலான முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அரசு, கடந்த 1975 ஆ... மேலும் பார்க்க

கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் உடல்நிலை கவலைக்கிடம்!

கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான அச்சுதானந்தனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளத்தின் முன்னாள் முத... மேலும் பார்க்க

140 கோடி இந்தியர்களின் நம்பிக்கையைச் சுமந்து செல்கிறார் சுபான்ஷு சுக்லா!

140 கோடி இந்தியர்களின் விருப்பங்கள், நம்பிக்கைகள் சுமந்து செல்லும் விண்வெளி நாயகன் சுபான்ஷு சுக்லாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். பல்வேறு இன்னல்களைத் தாண்டி, ஃபால்கன்-9 ரா... மேலும் பார்க்க

இந்திய மனித விண்வெளிப் பயண சகாப்தத்தின் தொடக்கம்: விண்ணிலிருந்து சுபான்ஷு சுக்லா

இந்தியாவின் மனித விண்வெளிப் பயணத்தின் சகாப்தம் தொடங்கிவிட்டதாக டிராகன் விண்கலத்திலிருந்து இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா தெரிவித்துள்ளார்.‘ஆக்ஸியம் ஸ்பேஸ்’ நிறுவனத்தின் ‘ஆக்ஸியம்-4’ திட்டத்தின்கீழ் சுபா... மேலும் பார்க்க

இந்திய விண்வெளியில் புதிய மைல்கல்: திரௌபதி முர்மு!

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான ஆகஸியம்-4 பயணத்தின் ஒரு பகுதியாக, இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவின் நட்சத்திரங்களை நோக்கிய பயணத்தினால் முழு நாடும் உற்சாகமாகவும், பெருமையும் அடைவதாக குடியரசுத் ... மேலும் பார்க்க