செய்திகள் :

ஒன்பிளஸ் புல்லட் வயர்லெஸ் பட்ஸ் இசட் 3! இந்தியாவில் அறிமுகம்!

post image

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய இயர்போனான, புல்லட் வயர்லெஸ் பட்ஸ் இசட் 3 இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.

கழுத்தில் மாட்டிக்கொண்டு பாடல் கேட்கும் இயர்போன்களுக்கு இந்திய பயனர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. அதனால், இதனையும் அவ்வாறே ஒன்பிளஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இளஞ்சிவப்பு மற்றும் கருப்பு ஆகிய இரு வண்ணங்களில் தயாரிக்கப்படுகின்றன. இந்தியாவில் இதன் விலை ரூ. 1,699 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து வகையான இணைய விற்பனை நிறுவன தளங்களிலும் இதனைப் பெற்றுக்கொள்ளலாம்.

சிறப்புகள் என்னென்ன?

சார்ஜிங் அம்சம் தான் இதன் மிக முக்கிய சிறப்பாக பார்க்கப்படுகிறது. அதாவது, 10 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும் என்றும், ஒருமுறை சார்ஜ் செய்தால், 36 மணி நேரத்துக்கு தொடர்ந்து பாடல்களைக் கேட்கலாம் என ஒன்பிளஸ் உறுதியளித்துள்ளது.

முப்பரிமாண ஒலி அலைகளை உருவாக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனால், 360 கோணத்திலும் பாடல்கள் அல்லது இசையை பயனர்களால் உணர முடியும்.

நான்கு வகையிலான ஒலி அலைவரிசைகளை மாற்றிக்கொள்ளலாம்.

வெளிப்புற இரைச்சல்களை தடுத்து நிறுத்தி, பேசுவோரின் ஒலியை மட்டுமே வழங்கும் வகையில், மின்னணு இரைச்சல் ரத்து செய்யும் திறன் பொருத்தப்பட்டுள்ளது.

புளூடூத் 5.4 உடன் விரைவில் இணையும்.

இயர்போனில் பட்டன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால், ஒலி அளவை கூட்டவோ, குறைக்கவோ, அழைப்புகளை ஏற்கவோ முடியும்.

இதையும் படிக்க | இரு நாள்களுக்கு பேட்டரி நீடிக்கும்! அறிமுகமானது போக்கோ எஃப் 7

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ.86.07 ஆக முடிவு!

மும்பை: உலகளாவிய கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலர் குறியீட்டில் ஏற்பட்ட மீட்சி காரணமாக, இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 2 காசுகள் குறைந்து ரூ.86.07 ஆக முடிவடைந்தது.... மேலும் பார்க்க

உலகளாவிய ஏற்றத்தால் சென்செக்ஸ், நிஃப்டி 1% உயர்வுடன் முடிவு!

மும்பை: ஈரான் - இஸ்ரேல் இடையேயான போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் பதட்டங்கள் தணிவதற்கான அறிகுறிகளுக்கு மத்தியில், உலக சந்தைகளில் ஏற்பட்ட எழுச்சியைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றைய வர்... மேலும் பார்க்க

பிரிட்டனில் சுசூகி இ-விட்டாரா அறிமுகம்! இந்தியாவில் எப்போது?

மாருதி சுசூகி நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் காரான இ-விட்டாராவை பிரிட்டனில் அறிமுகம் செய்துள்ளது.இரண்டு பேட்டரி விருப்பங்கள், 10 கலர் தேர்வுகள் என பல்வேறு அம்சங்களுடன் இந்தியாவின் இந்தாண்டு இறுதிக்கு... மேலும் பார்க்க

இரு நாள்களுக்கு பேட்டரி நீடிக்கும்! அறிமுகமானது போக்கோ எஃப் 7

இரு நாள்களுக்கு பேட்டரி நீடிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள எஃப் 7 என்ற புதிய ஸ்மார்ட்போனை போக்கோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. சீனாவைச் சேர்ந்த ஷாவ்மி நிறுவனத்தின் மற்றொரு கிளை நிறுவனமான போக்கோ, இ... மேலும் பார்க்க

ஈரான்-இஸ்ரேல் போர் நிறுத்தம் எதிரொலி: தங்கம் விலை ரூ.900 சரிவு!

புதுதில்லி: ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் ஏற்படும் என்ற எதிர்பார்ப்புகள் நிலவி வந்த நிலையில், பாதுகாப்பான புகலிடமான தங்கத்தின் விலை இன்று தலைநகர் தில்லியில் ரூ.900 சரிந்து ரூ.98,900 ஆக நி... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 75 காசுகள் உயர்ந்து ரூ.86.03 ஆக முடிவு!

மும்பை: மத்திய கிழக்கில் ஏற்பட்ட பதற்றத்தைத் தொடர்ந்து, உலகளாவிய கச்சா எண்ணெய் விலை குறைந்ததால், இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவிலிருந்து மீண்டு, டாலருக்கு நிகராக 75 காசுகள் உயர்ந்து ரூ.86.03 ... மேலும் பார்க்க