செய்திகள் :

கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் உடல்நிலை கவலைக்கிடம்!

post image

கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான அச்சுதானந்தனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளத்தின் முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் (வயது 101), கடந்த 2 நாள்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், அந்த மருத்துவமனை தரப்பில் இன்று (ஜூன் 25) வெளியிடப்பட்ட அறிக்கையில், அச்சுதானந்தனின் உடல்நிலையில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை எனவும், தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மூத்த தலைவர் அச்சுதானந்தனை, கேரள முதல்வர் பினராயி விஜயன், நேற்று (ஜூன் 24) நேரில் சந்தித்து, அவரது குடும்பத்தினருடன் பேசியதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, கடந்த 1964 ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்து, அச்சுதானந்தன் உள்ளிட்ட தலைவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைத் துவங்கினார்கள்.

அதன் பின்னர், 7 முறை சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை கேரள மாநிலத்தின் முதல்வராகப் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:சுபான்ஷு சுக்லாவுக்கு மோடி, ராகுல் வாழ்த்து!

2026 முதல் 10ம் வகுப்புக்கு இரண்டு பொதுத் தேர்வுகள்: சிபிஎஸ்இ

நாடு முழுவதும்2026ஆம் ஆண்டு முதல் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு பொதுத் தேர்வுகளை நடத்த சிபிஎஸ்இ ஒப்புதல் வழங்கியுள்ளதாக தேர்வுக் கட்டுப்பாடு அதிகாரி அறிவித்துள்... மேலும் பார்க்க

அவசரநிலை 50 ஆண்டுகள் நிறைவு! மத்திய அமைச்சரவை தீர்மானம்!

அவசரநிலை பிரகடனம் செய்து 50 ஆண்டுகள் நிறைவையொட்டி, மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் புதன்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.காங்கிரஸ் தலைமையிலான முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அரசு, கடந்த 1975 ஆ... மேலும் பார்க்க

140 கோடி இந்தியர்களின் நம்பிக்கையைச் சுமந்து செல்கிறார் சுபான்ஷு சுக்லா!

140 கோடி இந்தியர்களின் விருப்பங்கள், நம்பிக்கைகள் சுமந்து செல்லும் விண்வெளி நாயகன் சுபான்ஷு சுக்லாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். பல்வேறு இன்னல்களைத் தாண்டி, ஃபால்கன்-9 ரா... மேலும் பார்க்க

சுபான்ஷு சுக்லாவுக்கு மோடி, ராகுல் வாழ்த்து!

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவுக்கு பிரதமர் நரேந்திர மோடியும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.மனிதர்களை விண்ணுக்கு அ... மேலும் பார்க்க

இந்திய மனித விண்வெளிப் பயண சகாப்தத்தின் தொடக்கம்: விண்ணிலிருந்து சுபான்ஷு சுக்லா

இந்தியாவின் மனித விண்வெளிப் பயணத்தின் சகாப்தம் தொடங்கிவிட்டதாக டிராகன் விண்கலத்திலிருந்து இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா தெரிவித்துள்ளார்.‘ஆக்ஸியம் ஸ்பேஸ்’ நிறுவனத்தின் ‘ஆக்ஸியம்-4’ திட்டத்தின்கீழ் சுபா... மேலும் பார்க்க

இந்திய விண்வெளியில் புதிய மைல்கல்: திரௌபதி முர்மு!

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான ஆகஸியம்-4 பயணத்தின் ஒரு பகுதியாக, இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவின் நட்சத்திரங்களை நோக்கிய பயணத்தினால் முழு நாடும் உற்சாகமாகவும், பெருமையும் அடைவதாக குடியரசுத் ... மேலும் பார்க்க