செய்திகள் :

"நான் அமன் சொத்து; என்னைத் தொட்டால் வெட்டுவேன்" - முதலிரவில் கத்தியைக் காட்டி கணவனை மிரட்டிய மனைவி

post image

உத்தரப் பிரதேசத்தில் முஸ்கான் என்ற பெண் தனது கணவனைக் காதலன் துணையோடு கொலை செய்து உடலை ஊதா கலர் டிரம்மில் சிமெண்ட் போட்டு வைத்தார்.

சமீபத்தில் மத்தியப் பிரதேசத்தில் ராஜா ரகுவன்ஷியை அவரது மனைவி தேனிலவுக்குச் சென்றபோது தனது காதலன் மூலம் அடியாட்களை வைத்து கொலை செய்தார்.

இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் உள்ள பிரயக்ராஜ் நகரைச் சேர்ந்த சிதாரா என்ற பெண்ணை, கேப்டன் நிஷாத் திருமணம் செய்தார்.

இது பெற்றோர் பார்த்துப் பேசி முடித்து வைத்த திருமணமாகும். திருமணம் முடிந்தவுடன் நிஷாத் அன்று இரவு முதலிரவு அறைக்குள் சென்றார். அங்கு சிதாரா படுக்கையில் மிகவும் அமைதியாகக் கையில் கத்தியுடன் அமர்ந்திருந்தார்.

சிதாரா
சிதாரா

கையில் கத்தி இருப்பதைப் பார்த்த நிஷாத் அதிர்ச்சியடைந்தார். நிஷாத் படுக்கையில் அமர சென்றபோது, 'என்னைத் தொடாதே. அப்படித் தொட்டால் 35 துண்டுகளாக வெட்டி விடுவேன். நான் அமன் சொத்து' என்று சிதாரா தெரிவித்தார்.

இதைக் கேட்டவுடன் நிஷாத் அப்படியே உரைந்துவிட்டார். இரவு முழுவதும் இரண்டு பேருமே தூங்கவில்லை. நிஷாத் அருகில் இருந்த ஷோபாவில் அமர்ந்து இருந்தார். சிதாரா படுக்கையில் கத்தியுடன் அமர்ந்திருந்தார். எப்போது என்ன நடக்குமோ என்ற அச்சம் நிலவி வந்தது.

இது குறித்து நிஷாத் கூறுகையில், ''முதல் நாளில் கத்தியுடன் சிதாராவைப் பார்த்தவுடன் அதிர்ச்சியாகிவிட்டேன். அவர் என்னை 35 துண்டுகளாக வெட்டுவேன் என்று மிரட்டினார். இதனால் அன்று இரவு முழுவதும் ஷோபாவில் அமர்ந்திருந்தேன். அடுத்த மூன்று நாள் இரவும் அப்படியே சென்றது.

சிதாரா நள்ளிரவுக்குப் பிறகு தூங்குவார். நான் இரவு முழுவதும் பயத்தில் என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் அமர்ந்திருந்தேன். ஏற்கனவே மனைவிகள் கணவனைக் கொலை செய்த செய்திகளைச் செய்தித்தாள்களில் படித்திருந்தேன். எனவே நானும் அதில் ஒருவனாக மாறிவிடக்கூடாது என்பதற்காக உறங்காமல் இருந்தேன்'' என்றார்.

மூன்று நாள் கழித்து இது குறித்து நிஷாத் தனது தாயாருடன் அனைத்தையும் பகிர்ந்து கொண்டார். உடனே நிஷாத் தாயார் இது குறித்து சிதாராவுடன் பேசியபோது, "நான் அமன் காதலிக்கிறேன். கட்டாயப்படுத்தியதால்தான் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டேன். அமனுடன் வாழ விரும்புகிறேன். அமனுக்குத்தான் என்னுடன் முதலிரவு கொண்டாட உரிமை இருக்கிறது" என்று சிதாரா தெரிவித்துவிட்டார்.

இதனால் சிதாராவின் பெற்றோர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வந்து தங்களது மகளிடம் பேசிப் பார்த்தனர். உறவினர்கள் மற்றும் பெரியவர்களும் வந்திருந்தனர். அவர்கள் அமனை மறந்துவிட்டு நிஷாத்துடன் வாழும்படி சிதாராவிற்கு அறிவுரை வழங்கினர்.

சமரச பேச்சுவார்த்தையில் நிஷாத்துடன் வாழ்வதாக சிதாரா தெரிவித்தார். இது தொடர்பாக எழுத்துப்பூர்வமாக இரு தரப்பினரும் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

சொன்னபடி சிதாரா தனது கணவன் வீட்டிற்குச் சென்றார். சம்மதித்து வந்தாலும் சிதாரா தனிப்பட்ட முறையில் நிஷாத்தைத் துன்புறுத்த ஆரம்பித்தார். அதோடு திருமணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி தன்னை அமனுடன் அனுப்பி வைக்கும்படி தொடர்ந்து கூறிக்கொண்டிருந்தார்.

Marriage
Marriage

திடீரென நள்ளிரவு வீட்டின் காம்பவுண்ட் சுவரில் ஏறிக் குதித்து சிதாரா தப்பிச்சென்றுவிட்டார். அவர் நேராக அமனிடம் சென்றுவிட்டார்.

இது குறித்து சிதாராவின் தந்தை லட்சுமி நாராயண் கூறுகையில், ''எனது மகளுக்கு மிகவும் கஷ்டப்பட்டு நல்ல மணமகனைத் தேடினேன். அவளுக்குப் புரிய வைக்க முயற்சி செய்தோம். எங்களை அவமானப்படுத்திவிட்டுச் சென்றுவிட்டார்'' என்றார்.

இப்பிரச்னை போலீஸ் நிலையத்திற்குச் சென்றது. இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இது குறித்து நிஷாத் கூறுகையில், "அவள் திரும்பி வந்தால், நான் அவளுடன் மீண்டும் வாழ முடியாது என்று நினைக்கிறேன். அந்த பயம் இன்னும் நீங்கவில்லை" என்று அவர் மேலும் கூறினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

`இருமனைவி இருக்கிறது என்பதற்காக தேர்தல் வெற்றியை ரத்துசெய்ய முடியாது!’ - மும்பை ஹைகோர்ட்

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா எம்.எல்.ஏவாக இருப்பவர் ராஜேந்திர காவிட். பழங்குடியின வகுப்பை சேர்ந்த ராஜேந்திர காவிட் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தபோது தனக்கு இரண்டு மனைவி இருப்பதை குறி... மேலும் பார்க்க

Lumpsum: உங்க பேங்க் பேலன்ஸ் கூறும் பொய்... லம்ப்சம் முதலீடு பற்றித் தெரியாத அந்த விஷயம்...

நீங்க 10, 15, 25 வருஷம் உழைச்சாச்சு. பார்த்து பார்த்து பேங்குலசில லட்சங்கள் பணமும் சேர்த்தாச்சு. ரொம்ப நிம்மதியா இருக்குல்ல? நாம நினைக்குற நேரத்துல நம்மளைக் காப்பாத்தக்கூடியபணத்தை சேர்த்துட்டதா நினைக்... மேலும் பார்க்க

இத்தாலி: அருங்காட்சியகத்தில் 300 ஆண்டுகள் பழைமையான ஓவியத்தை சேதப்படுத்திய பார்வையாளர் - எப்படி?

இத்தாலிய அருங்காட்சியகத்தில் செல்ஃபி எடுக்கும் போது பார்வையாளர் ஒருவர் 300 ஆண்டுகள் பழைமையான கலைப்படைப்பை சேதப்படுத்தியுள்ளார்.புளோரன்ஸின் புகழ்பெற்ற உஃபிஸி கேலரியில் உள்ள விலைமதிப்பற்ற 300 ஆண்டுகள் ப... மேலும் பார்க்க

Disneyland-ல் 9 வயது சிறுமியுடன் திருமண ஏற்பாடு; கைதான 22 வயது நபர்; என்ன நடந்தது?

பாரிஸின் டிஸ்னிலேண்ட் தீம் பார்க்கில் 9 வயதில் சிறுமியுடன் போலியான திருமணம் நடத்த முயன்றதாகப் பிரிட்டிஷ் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த சனிக்கிழமை காலை தீம் பார்க்கை திருமணத்திற்காக புக் செ... மேலும் பார்க்க

Cafe: ஒரு மணி நேரத்திற்கு 200 ரூபாய்; இருட்டான இருக்கை வசதி- போலீசார் சோதனையில் சிக்கிய கஃபேக்கள்!

மகாராஷ்டிராவில் அமைந்துள்ள சில கஃபேக்கள், காதல் ஜோடிகளுக்கு ஒரு மணி நேரத்திற்கு 200 ரூபாய் வசூலித்து, இருட்டான இருக்கை வசதியை வழங்கியுள்ளது.அந்த பகுதியில் கஃபே நடத்துபவர்கள் காதல் ஜோடிகளுக்கு கூடுதல் ... மேலும் பார்க்க

விருந்தினர்களை எழுப்ப "சிவப்பு பாண்டா"- சீன ஹோட்டலில் ஓர் இரவு தங்க இவ்வளவு கட்டணமா?!

சீனாவின் சோங்கிங் பெருநகரத்திற்கு அருகிலுள்ள சிலெஹே லெடு லியாங்ஜியாங் ஹாலிடே என்ற ஹோட்டல், விருந்தினர்களை எழுப்ப "சிவப்பு பாண்டாக்களை" பயன்படுத்தியதற்காக சர்ச்சையில் சிக்கியுள்ளது.இந்த ஹோட்டலில் தங்கு... மேலும் பார்க்க