இத்தாலி: அருங்காட்சியகத்தில் 300 ஆண்டுகள் பழைமையான ஓவியத்தை சேதப்படுத்திய பார்வையாளர் - எப்படி?
இத்தாலிய அருங்காட்சியகத்தில் செல்ஃபி எடுக்கும் போது பார்வையாளர் ஒருவர் 300 ஆண்டுகள் பழைமையான கலைப்படைப்பை சேதப்படுத்தியுள்ளார்.
புளோரன்ஸின் புகழ்பெற்ற உஃபிஸி கேலரியில் உள்ள விலைமதிப்பற்ற 300 ஆண்டுகள் பழைமையான ஓவியம், புகைப்படம் எடுக்க முயன்றபோது ஒரு பார்வையாளர் தடுமாறி விழுந்ததால் சேதமடைந்துள்ளது.
1712 ஆம் ஆண்டில் அன்டன் டொமினிகோ கபியானியால் வரையப்பட்ட 'சிடஸ்கன் இளவரசர் ஃபெர்டினாண்டோ டி மெடிசியின்’ உருவப்படம் தான் இந்த ஓவியம்.

கலை படைப்பின் மீது பார்வையாளர் பின்னோக்கி விழுந்ததால் அந்த ஓவியம் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த சேதத்தை விரைவாக சரி செய்ய முடியும் என்று அருங்காட்சியம் சார்பில் பிபிசியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உருவப்படம் உஃபிசியில் "புளோரன்ஸ் மற்றும் ஐரோப்பா: பதினெட்டாம் நூற்றாண்டின் கலைகள்" என்ற கண்காட்சியின் ஒரு பகுதியாக காட்சிப்படுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற சம்பவங்களைத் தடுப்பதற்கான புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு சுற்றுலா பயணி ஒருவர் வான் கோ நாற்காலியில் அமர்ந்து அதனை சேதப்படுத்திய வீடியோ இணையத்தில் வைரலானது. இது போன்ற சம்பவங்கள் விலைமதிப்பற்ற கலைப்படைப்பின் பாதுகாப்பை உறுதி செய்ய தூண்டியுள்ளது.