செய்திகள் :

இத்தாலி: அருங்காட்சியகத்தில் 300 ஆண்டுகள் பழைமையான ஓவியத்தை சேதப்படுத்திய பார்வையாளர் - எப்படி?

post image

இத்தாலிய அருங்காட்சியகத்தில் செல்ஃபி எடுக்கும் போது பார்வையாளர் ஒருவர் 300 ஆண்டுகள் பழைமையான கலைப்படைப்பை சேதப்படுத்தியுள்ளார்.

புளோரன்ஸின் புகழ்பெற்ற உஃபிஸி கேலரியில் உள்ள விலைமதிப்பற்ற 300 ஆண்டுகள் பழைமையான ஓவியம், புகைப்படம் எடுக்க முயன்றபோது ஒரு பார்வையாளர் தடுமாறி விழுந்ததால் சேதமடைந்துள்ளது.

1712 ஆம் ஆண்டில் அன்டன் டொமினிகோ கபியானியால் வரையப்பட்ட 'சிடஸ்கன் இளவரசர் ஃபெர்டினாண்டோ டி மெடிசியின்’ உருவப்படம் தான் இந்த ஓவியம்.

கலை படைப்பின் மீது பார்வையாளர் பின்னோக்கி விழுந்ததால் அந்த ஓவியம் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த சேதத்தை விரைவாக சரி செய்ய முடியும் என்று அருங்காட்சியம் சார்பில் பிபிசியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உருவப்படம் உஃபிசியில் "புளோரன்ஸ் மற்றும் ஐரோப்பா: பதினெட்டாம் நூற்றாண்டின் கலைகள்" என்ற கண்காட்சியின் ஒரு பகுதியாக காட்சிப்படுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற சம்பவங்களைத் தடுப்பதற்கான புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு சுற்றுலா பயணி ஒருவர் வான் கோ நாற்காலியில் அமர்ந்து அதனை சேதப்படுத்திய வீடியோ இணையத்தில் வைரலானது. இது போன்ற சம்பவங்கள் விலைமதிப்பற்ற கலைப்படைப்பின் பாதுகாப்பை உறுதி செய்ய தூண்டியுள்ளது.

Disneyland-ல் 9 வயது சிறுமியுடன் திருமண ஏற்பாடு; கைதான 22 வயது நபர்; என்ன நடந்தது?

பாரிஸின் டிஸ்னிலேண்ட் தீம் பார்க்கில் 9 வயதில் சிறுமியுடன் போலியான திருமணம் நடத்த முயன்றதாகப் பிரிட்டிஷ் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த சனிக்கிழமை காலை தீம் பார்க்கை திருமணத்திற்காக புக் செ... மேலும் பார்க்க

Cafe: ஒரு மணி நேரத்திற்கு 200 ரூபாய்; இருட்டான இருக்கை வசதி- போலீசார் சோதனையில் சிக்கிய கஃபேக்கள்!

மகாராஷ்டிராவில் அமைந்துள்ள சில கஃபேக்கள், காதல் ஜோடிகளுக்கு ஒரு மணி நேரத்திற்கு 200 ரூபாய் வசூலித்து, இருட்டான இருக்கை வசதியை வழங்கியுள்ளது.அந்த பகுதியில் கஃபே நடத்துபவர்கள் காதல் ஜோடிகளுக்கு கூடுதல் ... மேலும் பார்க்க

விருந்தினர்களை எழுப்ப "சிவப்பு பாண்டா"- சீன ஹோட்டலில் ஓர் இரவு தங்க இவ்வளவு கட்டணமா?!

சீனாவின் சோங்கிங் பெருநகரத்திற்கு அருகிலுள்ள சிலெஹே லெடு லியாங்ஜியாங் ஹாலிடே என்ற ஹோட்டல், விருந்தினர்களை எழுப்ப "சிவப்பு பாண்டாக்களை" பயன்படுத்தியதற்காக சர்ச்சையில் சிக்கியுள்ளது.இந்த ஹோட்டலில் தங்கு... மேலும் பார்க்க

சீனா: வயிற்றுக்குள் டூத் பிரஷுடன் 52 ஆண்டுகள் வாழ்ந்த நபர் - உடலில் எந்த தொந்தரவும் இல்லாதது எப்படி?

வயிற்று வலியால் அவதிப்பட்ட 64 வயது நபரின் குடலில் டூத் பிரஷ் இருந்ததைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கிட்டத்தட்ட இந்த டூத் பிரஷ் அவரின் குடலில் 52 ஆண்டுகள் இருந்திருக்கிறது.சீனாவைச் சேர... மேலும் பார்க்க

சென்னை: ரூ.50,000 மதிப்புள்ள வாட்சை சர்வீஸ் கொடுத்த பெண் - இழுத்தடித்த நிறுவனத்திற்கு அபராதம்!

சென்னையைச் சேர்ந்த ஒருவர், வாட்ச் சர்வீஸ் கொடுத்த இடத்தில் திருப்பி தர தாமதமானதால் அதற்கு வழக்கு தொடர்ந்து இழப்பீடு பெற்றிருக்கிறார்.சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சுவாதி என்பவர் அவரது குடும்ப உறுப்... மேலும் பார்க்க

அடையாள அட்டை இல்லை; மும்பை ஐ.ஐ.டி வகுப்பறையில் வாலிபர் - விசாரணையில் ஆச்சர்யமடைந்த போலீஸ்

மும்பை விமான நிலையத்தின் ஓடுதளத்திற்குள் நேற்று முன் தினம் மர்ம நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்துவிட்டார். அதேபோன்று மும்பை ஐ.ஐ.டிக்குள் மர்ம நபர் அத்துமீறி நுழைந்துள்ளார். மும்பை ஐ.ஐ.டி வளாகத்திற்குள் இ... மேலும் பார்க்க