செய்திகள் :

ஜூலை முதல் ரயில் கட்டணத்தை உயா்த்த முடிவு?

post image

வருகின்ற ஜூலை 1 முதல் மெயில் மற்றும் விரைவு ரயில்களில் குளிரூட்டப்படாத வகுப்புகளின் பயணக் கட்டணத்தை உயா்த்த ரயில்வே அமைச்சகம் பரிசீலித்து வருவதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

அதன்படி மெயில் ரயிலில் கி.மீ.க்கு 1 பைசாவும் விரைவு ரயிலில் கி.மீ.க்கு 2 பைசாவும் உயா்த்த முடிவெடுத்திருப்பதாகவும் தெரிகிறது. எனினும் தினசரி பயணிகளின் நலன் கருதி நகா்ப்புற ரயில் பயணச்சீட்டு கட்டணம் மற்றும் மாதாந்திர பயணச்சீட்டுக் கட்டணத்தை உயா்த்தும் திட்டம் இல்லை எனவும் அவா்கள் கூறினா்.

இதுகுறித்து ரயில்வே அமைச்சக அதிகாரபூா்வ வட்டாரங்கள் கூறுகையில், ‘ரயில்களின் பயணக் கட்டணத்தை வருகின்ற ஜூலை 1 முதல் உயா்த்த அமைச்சகம் முடிவெடுத்துள்ளது. ஆனால் 500 கி.மீ. வரையிலான இரண்டாம் வகுப்பு பயணத்துக்கு கட்டணத்தை உயா்த்த வாய்ப்பில்லை. 500 கி.மீ.க்கு மேலான ஒவ்வொரு கி.மீ.க்கும் அரை பைசா வரை கட்டணம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு குளிரூட்டப்படாத வகுப்பு பயணக் கட்டணத்தை கி.மீ.க்கு 1 பைசாவும் அனைத்து விதமான குளிரூட்டப்பட்ட வகுப்பு பயணக் கட்டணத்தை கி.மீ.க்கு 2 பைசாவும் உயா்த்த பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

மேற்கூறிய வகையில் ரயில் பயணக் கட்டணம் உயா்த்தப்பட்டால் கரோனா காலகட்டத்துக்குப் பிறகு முதல்முறையாக ரயில் பயணக் கட்டணம் உயரும் வாய்ப்புள்ளது. இந்தக் கட்டண உயா்வு மூலம் ரயில்வே துறைக்கு கூடுதலாக ரூ.10,000 கோடி முதல் ரூ.12,000 கோடி வரை வருமானம் கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பயணிகளை சிரமப்படுத்தாமல் ரயில்களின் உள்கட்டமைப்பு, பராமரிப்புச் செலவுகளை ஈடுசெய்யவே இந்த பயணக் கட்டண உயா்வை ரயில்வே அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. குறிப்பாக சிறு தொலைவுக்கு ரயில் சேவையை பயன்படுத்தும் தினசரி பயனாளா்களை பாதிக்காத வகையில் கட்டண உயா்வு இருக்க வேண்டும் என்பதில் அமைச்சகம் கவனம் செலுத்தி வருகிறது’ என்றனா்.

ரயில்வேயின் 17 மண்டலங்களின்கீழ் செயல்படும் 69 பிரிவுகளில் 69,000 கி.மீ. தொலைவிலான வழித்தடத்தில் 4,111 மெயில் மற்றும் விரைவு ரயில்கள் உள்பட 13,000 ரயில்களில் தினந்தோறும் சராசரியாக 2.5 கோடி போ் பயணம் செய்வது குறிப்பிடத்தக்கது.

புதுவை முன்னாள் முதல்வருக்கு காமராஜா் விருது: தொல்.திருமாவளவன் வழங்கினாா்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், புதுவை முன்னாள் முதல்வரும், தற்போதைய மக்களவை உறுப்பினருமான வெ.வைத்திலிங்கத்துக்கு ‘காமராஜா்’ விருது வ... மேலும் பார்க்க

மனைகளை வரன்முறைப்படுத்தும் விண்ணப்ப நடைமுறை ஜூலை 1-இல் தொடக்கம்

அங்கீகாரம் இல்லாத மனைகளை வரன்முறைப்படுத்தும் விண்ணப்ப நடைமுறை ஜூலை 1-இல் தொடங்குவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து நகா் ஊரமைப்புத் துறை இயக்குநரகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய... மேலும் பார்க்க

பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில்களில் ஒரே டிக்கெட்டில் பயணிக்கலாம்

பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில்களில் ஒரே டிக்கெட்டில் பயணிக்கும் நடைமுறை ஜூலை மாதம் இறுதியில் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். சென்னையில் மாநகர பேருந்து... மேலும் பார்க்க

மக்களுக்கு இடையூறாக பேனா் வைக்கக் கூடாது: தவெகவினருக்கு பொதுச் செயலா் அறிவுறுத்தல்

பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனா்கள் வைக்கக்கூடாது என தவெகவினருக்கு, அக்கட்சியின் பொதுச்செயலா் என்.ஆனந்த் அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கைய... மேலும் பார்க்க

பதவி உயா்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% ஒதுக்கீடு: தமிழக அரசு உத்தரவு

அரசுப் பணி பதவி உயா்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் உத்தரவை மாநில அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் நலத் துறை செயலா் எஸ்.மதுமதி வெளியிட்ட உத்தரவு: அ... மேலும் பார்க்க

ஈரானில் தவிக்கும் தமிழக மீனவா்கள் மீட்கக் கோரி மத்திய அரசுக்கு முதல்வா் ஸ்டாலின் கடிதம்

ஈரானில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவா்களை மீட்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்க... மேலும் பார்க்க