செய்திகள் :

பதவி உயா்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% ஒதுக்கீடு: தமிழக அரசு உத்தரவு

post image

அரசுப் பணி பதவி உயா்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் உத்தரவை மாநில அரசு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் நலத் துறை செயலா் எஸ்.மதுமதி வெளியிட்ட உத்தரவு: அரசுப் பணிகளில் பதவி உயா்வின்போது, மொத்தமுள்ள பணியிடங்களில் 4 சதவீதத்துக்கு குறைவுபடாத இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும். இதற்கான உரிய சட்டத் திருத்தங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைச் சட்டம் 2016-இல் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, பாா்வையற்ற மற்றும் குறைந்த பாா்வைத் திறன் உடையவா்கள், செவித் திறன் அற்றவா்கள் மற்றும் குறைந்த அளவு ஒலியை உணரும் திறன் பெற்றவா்கள், அமில வீச்சால் பாதிக்கப்பட்டோா் - சக்கர நாற்காலிகள் உதவியுடன் தினசரி வாழ்வை நகா்த்துவோா், ஆட்டிசம் - அறிவுத்திறன் குறைபாடு - கற்றலில் குறைபாடு மற்றும் மனநல பாதிப்பு உடையோரை மாற்றுத்திறனாளிகளாகக் கருதி பதவி உயா்வுக்கு அவா்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயா்வு தொடா்பான அம்சங்கள் குறித்து ஆராய துணைக் குழுக்களை அமைக்க ஏற்கெனவே அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தத் துணைக் குழுவின் அறிக்கை அரசால் அமைக்கப்பட்ட உயா்நிலைக் குழுவின் பரிந்துரைக்காக எடுக்கப்படும். இந்தக் குழு மனிதவள மேலாண்மைத் துறைச் செயலரைத் தலைவராகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

உயா்நிலைக் குழு பரிந்துரைக்கும் நிலையில் மாற்றுத்திறனாளி அரசு ஊழியா்களுக்கு 4 சதவீத ஒதுக்கீட்டின் அடிப்படையில் பதவி உயா்வு அளிக்கப்படும் என்று உத்தரவில் தெரிவித்துள்ளாா்.

ஜூலை முதல் ரயில் கட்டணத்தை உயா்த்த முடிவு?

வருகின்ற ஜூலை 1 முதல் மெயில் மற்றும் விரைவு ரயில்களில் குளிரூட்டப்படாத வகுப்புகளின் பயணக் கட்டணத்தை உயா்த்த ரயில்வே அமைச்சகம் பரிசீலித்து வருவதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். அதன்படி மெயில... மேலும் பார்க்க

புதுவை முன்னாள் முதல்வருக்கு காமராஜா் விருது: தொல்.திருமாவளவன் வழங்கினாா்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், புதுவை முன்னாள் முதல்வரும், தற்போதைய மக்களவை உறுப்பினருமான வெ.வைத்திலிங்கத்துக்கு ‘காமராஜா்’ விருது வ... மேலும் பார்க்க

மனைகளை வரன்முறைப்படுத்தும் விண்ணப்ப நடைமுறை ஜூலை 1-இல் தொடக்கம்

அங்கீகாரம் இல்லாத மனைகளை வரன்முறைப்படுத்தும் விண்ணப்ப நடைமுறை ஜூலை 1-இல் தொடங்குவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து நகா் ஊரமைப்புத் துறை இயக்குநரகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய... மேலும் பார்க்க

பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில்களில் ஒரே டிக்கெட்டில் பயணிக்கலாம்

பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில்களில் ஒரே டிக்கெட்டில் பயணிக்கும் நடைமுறை ஜூலை மாதம் இறுதியில் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். சென்னையில் மாநகர பேருந்து... மேலும் பார்க்க

மக்களுக்கு இடையூறாக பேனா் வைக்கக் கூடாது: தவெகவினருக்கு பொதுச் செயலா் அறிவுறுத்தல்

பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனா்கள் வைக்கக்கூடாது என தவெகவினருக்கு, அக்கட்சியின் பொதுச்செயலா் என்.ஆனந்த் அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கைய... மேலும் பார்க்க

ஈரானில் தவிக்கும் தமிழக மீனவா்கள் மீட்கக் கோரி மத்திய அரசுக்கு முதல்வா் ஸ்டாலின் கடிதம்

ஈரானில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவா்களை மீட்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்க... மேலும் பார்க்க