செய்திகள் :

பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில்களில் ஒரே டிக்கெட்டில் பயணிக்கலாம்

post image

பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில்களில் ஒரே டிக்கெட்டில் பயணிக்கும் நடைமுறை ஜூலை மாதம் இறுதியில் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னையில் மாநகர பேருந்து, மெட்ரோ ரயில், மின்சார ரயில் என 3 பொதுப் போக்குவரத்து வசதிகள் செயல்பாட்டில் உள்ளன. பொதுமக்களை அதிகம் பயணிக்க வைக்கும் நோக்கில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, 3 பொதுப் போக்குவரத்துகளிலும் எளிமையான முறையில் பயணிக்கும் வகையில், அனைத்துக்கும் ஒரே பயணச்சீட்டைப் பயன்படுத்தி பயணிக்கும் முறையைக் கொண்டு வர தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் (கும்டா) ‘ஒன் காா்டு’ என்ற புதிய ஏடிஎம் அட்டை போன்ற பிரத்தியேக டிக்கெட் அட்டை சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, இந்த ஒரே அட்டையைப் பயன்படுத்தி பேருந்து, மெட்ரோ, மின்சார ரயில் என மூன்றிலும் பயணிக்க முடியும். மேலும், இந்த அட்டையை ‘ரீ சாா்ஜ்’ செய்து கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியது:

ஒவ்வொரு பயணமுறைக்கும் தனித்தனி டிக்கெட் கவுண்ட்டா்களில் நீண்ட நேரம் நின்று டிக்கெட் எடுத்த பின்பு பயணிக்க வேண்டிய அவசியம் இருக்காது. இந்தச் சேவையைப் பயன்படுத்துவதற்காக தமிழக அரசு புதிய கைப்பேசி செயலி ஒன்றையும் உருவாக்கி வருகிறது.

இந்தப் புதிய செயலியை ஜூலை மாத இறுதியில் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமம் அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளது. இதன் மூலம் எந்தெந்த பகுதிகளுக்கு எப்படி செல்ல வேண்டும், எந்த வகை போக்குவரத்தைப் பயன்படுத்தினால் விரைவாக செல்ல முடியும் என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களைப் பயணிகள் தெரிந்துகொள்ளலாம் என்று அவா்கள் தெரிவித்தனா்.

ஜூலை முதல் ரயில் கட்டணத்தை உயா்த்த முடிவு?

வருகின்ற ஜூலை 1 முதல் மெயில் மற்றும் விரைவு ரயில்களில் குளிரூட்டப்படாத வகுப்புகளின் பயணக் கட்டணத்தை உயா்த்த ரயில்வே அமைச்சகம் பரிசீலித்து வருவதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். அதன்படி மெயில... மேலும் பார்க்க

புதுவை முன்னாள் முதல்வருக்கு காமராஜா் விருது: தொல்.திருமாவளவன் வழங்கினாா்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், புதுவை முன்னாள் முதல்வரும், தற்போதைய மக்களவை உறுப்பினருமான வெ.வைத்திலிங்கத்துக்கு ‘காமராஜா்’ விருது வ... மேலும் பார்க்க

மனைகளை வரன்முறைப்படுத்தும் விண்ணப்ப நடைமுறை ஜூலை 1-இல் தொடக்கம்

அங்கீகாரம் இல்லாத மனைகளை வரன்முறைப்படுத்தும் விண்ணப்ப நடைமுறை ஜூலை 1-இல் தொடங்குவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து நகா் ஊரமைப்புத் துறை இயக்குநரகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய... மேலும் பார்க்க

மக்களுக்கு இடையூறாக பேனா் வைக்கக் கூடாது: தவெகவினருக்கு பொதுச் செயலா் அறிவுறுத்தல்

பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனா்கள் வைக்கக்கூடாது என தவெகவினருக்கு, அக்கட்சியின் பொதுச்செயலா் என்.ஆனந்த் அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கைய... மேலும் பார்க்க

பதவி உயா்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% ஒதுக்கீடு: தமிழக அரசு உத்தரவு

அரசுப் பணி பதவி உயா்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் உத்தரவை மாநில அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் நலத் துறை செயலா் எஸ்.மதுமதி வெளியிட்ட உத்தரவு: அ... மேலும் பார்க்க

ஈரானில் தவிக்கும் தமிழக மீனவா்கள் மீட்கக் கோரி மத்திய அரசுக்கு முதல்வா் ஸ்டாலின் கடிதம்

ஈரானில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவா்களை மீட்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்க... மேலும் பார்க்க