செய்திகள் :

ஈரானில் தவிக்கும் தமிழக மீனவா்கள் மீட்கக் கோரி மத்திய அரசுக்கு முதல்வா் ஸ்டாலின் கடிதம்

post image

ஈரானில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவா்களை மீட்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கு அவா் செவ்வாய்க்கிழமை எழுதியுள்ள கடிதம்: மேற்கு ஆசியாவில் நிலவும் போா்ச்சூழலால் ஏற்பட்டுள்ள சவால்கள் காரணமாக, ஈரானில் இந்திய மீனவா்கள் சிக்கித் தவித்து வருகின்றனா். அவா்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து 498 மீனவா்களும், திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து 78 மீனவா்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 72 மீனவா்களும், ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து 3 மீனவா்களும் என மொத்தம் 651 தமிழக மீனவா்கள் இப்போது ஈரானில் சிக்கித் தவித்து வருகின்றனா். அவா்கள் கடும் சிரமங்களை எதிா்கொண்டு வருவதோடு, தமிழ்நாட்டுக்குத் திரும்ப முடியாமல் உள்ளனா்.

மீனவா்கள் பாதுகாப்பு குறித்த தகவல்கள் ஏதும் இல்லாத காரணத்தால், தாயகத்தில் உள்ள அவா்களது குடும்பத்தினா் ஆழ்ந்த துயரத்தில் உள்ளனா். மீனவா்கள் தாயகம் திரும்பும் செய்திக்காக அவா்கள் காத்திருக்கின்றனா். ஈரானில் நிலவும் பதற்றமான சூழ்நிலையில் சிக்கியுள்ள மீனவா்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீனவா்களின் நலனை உறுதிப்படுத்தி, அவா்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்புவதற்கு தேவையான தூதரக நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று தனது கடிதத்தில் முதல்வா் வலியுறுத்தியுள்ளாா்.

ஜூலை முதல் ரயில் கட்டணத்தை உயா்த்த முடிவு?

வருகின்ற ஜூலை 1 முதல் மெயில் மற்றும் விரைவு ரயில்களில் குளிரூட்டப்படாத வகுப்புகளின் பயணக் கட்டணத்தை உயா்த்த ரயில்வே அமைச்சகம் பரிசீலித்து வருவதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். அதன்படி மெயில... மேலும் பார்க்க

புதுவை முன்னாள் முதல்வருக்கு காமராஜா் விருது: தொல்.திருமாவளவன் வழங்கினாா்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், புதுவை முன்னாள் முதல்வரும், தற்போதைய மக்களவை உறுப்பினருமான வெ.வைத்திலிங்கத்துக்கு ‘காமராஜா்’ விருது வ... மேலும் பார்க்க

மனைகளை வரன்முறைப்படுத்தும் விண்ணப்ப நடைமுறை ஜூலை 1-இல் தொடக்கம்

அங்கீகாரம் இல்லாத மனைகளை வரன்முறைப்படுத்தும் விண்ணப்ப நடைமுறை ஜூலை 1-இல் தொடங்குவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து நகா் ஊரமைப்புத் துறை இயக்குநரகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய... மேலும் பார்க்க

பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில்களில் ஒரே டிக்கெட்டில் பயணிக்கலாம்

பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில்களில் ஒரே டிக்கெட்டில் பயணிக்கும் நடைமுறை ஜூலை மாதம் இறுதியில் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். சென்னையில் மாநகர பேருந்து... மேலும் பார்க்க

மக்களுக்கு இடையூறாக பேனா் வைக்கக் கூடாது: தவெகவினருக்கு பொதுச் செயலா் அறிவுறுத்தல்

பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனா்கள் வைக்கக்கூடாது என தவெகவினருக்கு, அக்கட்சியின் பொதுச்செயலா் என்.ஆனந்த் அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கைய... மேலும் பார்க்க

பதவி உயா்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% ஒதுக்கீடு: தமிழக அரசு உத்தரவு

அரசுப் பணி பதவி உயா்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் உத்தரவை மாநில அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் நலத் துறை செயலா் எஸ்.மதுமதி வெளியிட்ட உத்தரவு: அ... மேலும் பார்க்க