செய்திகள் :

துபாய் இந்திய நகரமாக இருந்த கதை தெரியுமா? மறைக்கப்பட வரலாறு!

post image

'சூரியன் மறையாத பேரரசு' எனப் புகழப்படும் அளவு உலகம் முழுவதும் பரவியிருந்தது பிரிட்டிஷ் ராஜ்ஜியம். உலகில் இப்போதுவுள்ள 60 முதல் 65 நாடுகள் பிரிட்டிஷ் பேரரசின் கட்டுப்பட்டில் இருந்தன. இவை அந்த காலத்தின் சிக்கலான நடைமுறைகளால் தங்களுக்குள் விநோதமான வரலாற்றுப் பிணைப்புகளைக் கொண்டிருக்கின்றன.

அப்படியான ஒரு வரலாற்றுப் பிழையின் அல்லது பிணைப்பின்படி, இந்தியா சுந்தந்திரம் அடைந்தபோது துபாய், ஏமன் உள்ளிட்ட மத்திய கிழக்குப் பகுதிகளை இந்தியாவுடன் இணைக்கும் திட்டம் ஏற்பட்டது!

பஹ்ரைனில் ஆங்கிலோ-இந்தியன் விருந்து

பிரிட்டிஷ் ஆண்ட அனைத்து நாடுகளிலும் இன்றுவரை காலனி ஆதிக்கத்தின் எச்சங்களைப் பார்க்க முடியும். ஆனால் மத்திய கிழக்கு நாடுகளில் பிரிட்டிஷ் இந்திய அரசின் சின்னங்களைப் பார்ப்பது நமக்கு கொஞ்சம் விநோதமாகத் தோன்றலாம்.

1956ஆம் தி டைம்ஸ் நிருபர் டேவிட் ஹோல்டன் பஹ்ரைன் தீவுக்குச் சென்றுள்ளார். அங்கு முற்காலத்தில் நடைபெற்ற விக்டோரியா மகாராணி பதவியேற்பு விழாவின் தடயங்களை ஆராய்ந்து பின்வரும் கருத்துக்களைக் கூறியிருக்கிறார்.

"பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் இங்கே சற்று கற்பனையான ஒரு போக்கையே பராமரிக்கிறது. மத்திய கிழக்கு முழுவதும் பிரிட்டிஷ் இந்தியாவின் எச்சங்களைக் காண முடிகிறது. விக்டோரியா மகாராணி பதவியேற்பு விழாவில் இருந்தவர்களுக்கு ஆங்கிலோ-இந்தியன் முறையில் கறி விருந்து அளிக்கப்பட்டுள்ளது.

அப்போதைய ஓமன் சுல்தான், ராஜஸ்தானில் கல்வி கற்றவர். அரபியை விட உருது மொழியில் சரளமாகப் பேசக்கூடியவராக இருந்தார். அருகில் இருந்த குவைத் மாகாணத்தில் வீரர்கள் ஹைதராபாத் ராணுவ சீருடை அணிந்திருக்கின்றனர். ஹைதராபாத் வழியாக டெல்லியிலிருந்து தெற்கு அரேபிய கடற்கரைக்கான இணைப்பு மிகவும் வலுவானதாக இருந்தது." என்கிறார் டேவிட் ஹோல்டன்.

British
British

அரேபியர்களின் இந்திய தேசியவாதம்!

20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அரேபிய தீபகற்பத்தின் 3ல் 2 பகுதி பிரிட்டிஷ் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. நாமும் அரேபியர்களும் ஒரே அரசு நிர்வாகத்தால் ஆழப்பட்டோம் என்பதை நாம் மறந்துவிட்டோம்.

ஏமன் முதல் குவைத் வரை பெரும் அரேபிய பகுதிகள் இந்திய வைஸ்ராய்க்கு கட்டுப்பட்டதாக இருந்தன. அந்தப் பகுதியில் இந்திய துருப்புகளே காவல் இருந்தன. இந்தியாவில் இருந்த பிரிட்டிஷ் அதிகாரிகளே ஆட்சி செய்தனர்.

1889ஆம் ஆண்டின் விளக்கச் சட்டத்தின் கீழ், அரேபிய தீபகற்பத்தில் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகள், சட்டப்பூர்வமாக இந்தியாவின் ஒரு பகுதியாகக் கருதப்பட்டன. ஓமன் இந்தியாவின் மாகாணங்களில் ஒன்றாக இருந்தது. இந்தியாவின் சுதேச சமஸ்தானங்கள் பட்டியலில் முதல் பெயராக அபுதாபி இருந்தது.

நவீன ஏமன் நாட்டின் மேற்கு பகுதி பம்பாய் மாகாணத்தின் ஒரு பகுதியாக ஆளப்பட்டது. அங்கு வாழ்ந்த மக்களுக்கு பிரிடிஷ் இந்தியா பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டன.

 1931ஆம் ஆண்டு மகாத்மா காந்தி இந்த நகரத்துக்கு சென்றிருந்தபோது, பல அரேபிய இளைஞர்கள் இந்திய தேசியவாதிகளாகத் தங்களைக் அடையாளப்படுத்திக்கொண்டதைக் கண்டு வியந்துள்ளார்.

எனினும் இந்தியாவில் உள்ள பொதுமக்களுக்கோ அல்லது பிரிட்டிஷ் மக்களுக்கோ கூட இந்தியா அரேபியா வரை விரிந்திருப்பது பற்றி தெரியமல் இருந்தது.

British Empire
British Empire

ஏனெனில் பிரிட்டிஷ் இந்திய அரசின் முழு பரப்பையும் காட்டும் வரைபடங்கள் ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தன. அவை பொதுவெளிக்கு வந்தால் ஓட்டோமான் அல்லது சௌதி நாட்டினர் கிளர்ந்தெழக் கூடும் என்பதனால் அவற்றை மறைத்து வந்தனர்.

இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட்ட வளைகுடா நாடுகள்!

1921 முதல் பிரிட்டிஷ் இந்தியாவின் பகுதியாக அரேபியா நிலைக்குமா என்ற கேள்விகள் எழத் தொடங்கியிருக்கின்றன. ஏனெனில் இந்தியாவில் இருந்த இந்திய தேசியவாதிகள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தால் சேர்த்துக் கட்டப்பட்ட ராஜ்ஜியங்களின் கொத்துதான் இந்தியா என்பதை மாற்றி, மகாபாரதத்தின் புவியியலில் வேரூன்றிய ஒரு கலாசார நிலப்பரப்பே நம் நாடு என்ற கற்பனையை உருவாக்கத் தொடங்கியுள்ளனர்.

1937 ஏப்ரல் 1 அன்று பல ஏகாதிபத்திய அரசுகளில் பிரிவினைகள் நடந்தபோது ஏமன் இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட்டது.

அப்போது, "ஏமன் கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் பிரிட்டிஷ் இந்திய பேரரசின் பகுதியாக இருந்துள்ளது... இனி எமது காலனியத்துவ நாடுகளில் ஒன்றாக இடம்பிடிக்கும்." என ஜார்ஜ் மன்னரின் தந்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் அரசியல் ரீதியாக அடுத்த 10 ஆண்டுகளுக்கு வளைகுடாவில் இருந்த பிரிட்டிஷ் பகுதிகள் இந்திய் அரசின் கட்டுப்பாட்டிலேயே இருந்தன. இந்திய சுதந்திரத்தின்போது வளைகுடா அரேபியர்களை நிர்வகிக்கும் பொறுப்பை இந்தியா அல்லது பாகிஸ்தானிடம் ஒப்படைப்பதற்கான முன்மொழிவுகள் செய்யப்பட்டன.

Gulf Countries
Gulf Countries

ஆனால் அப்போது இந்திய அரசியல் தலைவர்களுக்கு அதில் அதிக விருப்பம் இல்லாததால் அந்த முடிவைக் கைவிட்டுள்ளனர். இறுதியாக 1947ம் ஆண்டுதான் வளைகுடா நாடுகள் இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட்டன.

இந்திய மற்றும் பாகிஸ்தான் அதிகாரிகள் சுதந்திரத்துக்குப் பிறகு நூற்றுக்கணக்கான சமஸ்தானங்களைத் தங்கள் நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தி சேர்த்துவந்தபோது, சுதேச சமஸ்தானங்கள் பட்டியலில் இருந்து அரபு பகுதிகள் காணாமல் போயின.

அந்த காலத்தில் இந்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படாமல் இருந்திருந்தால் துபாய் அல்லது குவைத் போன்ற அரபு பிரதேசங்கள் இன்று இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்திருக்கலாம்.

இதற்குபிறகு அரேபிய பகுதியில் இந்திய வைஸ்ராய் கட்டுப்பாட்டில் இருந்த படைகள் திரும்பப் பெறப்பட்டு, பிரிட்டிஷ் அரசின் படைகள் நிறுத்தப்பட்டன. எனினும் அதிகாரப்பூர்வ நாணயமாக இந்திய ரூபாயே தொடர்ந்தது. இந்தியாவில் ஆட்சி செய்த பிரிட்டிஷ் அதிகாரிகள் சிலர் அரேபியாவை ஆட்சி செய்யத் தொடங்கினர்.

24 ஆண்டுகள் கழித்துதான் 1971ல் சூயஸுக்கு கிழக்கே காலனித்துவ ஆட்சியை கைவிடுவதற்கான முடிவின் படி, வளைகுடா நாடுகளில் இருந்து இறுதியக பிரிட்டிஷ் வெளியேறியது.

பிரிட்டிஷின் வீழ்ச்சிக்குப் பிறகு காலனியத்துவத்தின் அடையாளமான இந்தியா உடனான உறவுகளின் தடங்களை அழிப்பதில் வளைகுடா நாடுகள் வெற்றி பெற்றுள்ளன. இன்று அரேபிய பொது மக்களில் பலருக்கு அவர்கள் இந்தியாவைத் தலைமையிடமாகக் கொண்டிருந்த பிரிட்டிஷ்-இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்தார்கள் என்பது உறுதியாகத் தெரியாது.

ஏனென்றால் அவர்களின் கதை பல்வேறு திருப்பங்களைக் கடந்துள்ளது. இன்று மத்திய கிழக்கின் பிரமாண்டமான, பரபரப்பான நகரமாக இருக்கும் துபாய் ஒரு காலத்தில் இந்திய அரசின் சிறிய பகுதியாக இருந்தது என்பதை நம்மாலேயே நம்ப முடியவில்லைதானே!

உலக நாகரிகத்தின் தொட்டில்.! இந்தியாவின் முதல் `ஆன் சைட் மியூசியம்' ஆதிச்சநல்லூர்! | Photo Album

'உலக நாகரிகத்தின் தொட்டில்.! இந்தியாவின் முதல் 'ஆன் சைட் மியூசியம்' தூத்துக்குடி ஆதிச்சநல்லூர்.!இந்தியாவின் முதல் 'ஆன் சைட் மியூசியம்' தூத்துக்குடி ஆதிச்சநல்லூர்.!இந்தியாவின் முதல் 'ஆன் சைட் மியூசியம்... மேலும் பார்க்க