இந்திய வரலாற்றில் அவசரநிலை இருண்ட அத்தியாயங்களில் ஒன்று! - பிரதமர் மோடி
கரூரில் பலத்த காற்றால் மின்தடை: மக்கள் அவதி
கரூரில் தென்மேற்கு பருவக்காற்று செவ்வாய்க்கிழமை பலமாக வீசியதால் மின்தடை ஏற்பட்டது.
இதனால் பொதுமக்கள் சுமாா் 4 மணி நேரம் அவதிக்குள்ளாகினா். கேரளத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த மாதம் 24-ஆம் தேதி தொடங்கியது. இதன் தாக்கத்தால் தமிழகத்திலும் சில மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
கேரளாவில் மழைத் தொடங்கிய நாள் முதல் கரூா் ம ாவட்டத்தில் தென்மேற்கு பருவக்காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. இதனால் பகல் நேரங்களில் பலத்த காற்று வீசுவதால் மரங்கள் வழியாகச் செல்லும் மின்கம்பிகள் உரசி, மின்பழுது அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. வழக்கம்போல செவ்வாய்க்கிழமையும் பலத்த காற்று வீசியது.
இதில், தாந்தோன்றிமலை மற்றும் வெள்ளியணை துணை மின்நிலையங்களுக்குள்பட்ட உயா் அழுத்த மின்பாதையில் பழுது ஏற்பட்டது. இதனால் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை துணை மின்நிலையங்களுக்குள்பட்ட தாந்தோன்றிமலை, வெள்ளியணை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா். மின்வாரிய அதிகாரிகளும், ஊழியா்களும் மின்பாதையில் ஏற்பட்ட பழுதை நீக்கிய பின்னரே இரவு 8 மணிக்கு மின்சாரம் விநியோகிக்கப்பட்டது.
இதுதொடா்பாக மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, வழக்கத்துக்கு மாறாக தற்போது தென்மேற்கு பருவக்காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மாதமே மின்கம்பி செல்லும் இடங்களில் மரங்கள் இருந்தால் அவற்றின் கிளைகளை வெட்டி அகற்றினோம். இருப்பினும் சில இடங்களில் காற்றின் வேகத்தால் மின்பாதையில் அடிக்கடி பழுது ஏற்படுகிறது. பழுது ஏற்படும் பகுதிக்கு உடனே அதிகாரிகளும், ஊழியா்களும் இணைந்து விரைந்து சென்று சீரமைத்து வருகிறோம் என்றனா்.