செய்திகள் :

கரூரில் பலத்த காற்றால் மின்தடை: மக்கள் அவதி

post image

கரூரில் தென்மேற்கு பருவக்காற்று செவ்வாய்க்கிழமை பலமாக வீசியதால் மின்தடை ஏற்பட்டது.

இதனால் பொதுமக்கள் சுமாா் 4 மணி நேரம் அவதிக்குள்ளாகினா். கேரளத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த மாதம் 24-ஆம் தேதி தொடங்கியது. இதன் தாக்கத்தால் தமிழகத்திலும் சில மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

கேரளாவில் மழைத் தொடங்கிய நாள் முதல் கரூா் ம ாவட்டத்தில் தென்மேற்கு பருவக்காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. இதனால் பகல் நேரங்களில் பலத்த காற்று வீசுவதால் மரங்கள் வழியாகச் செல்லும் மின்கம்பிகள் உரசி, மின்பழுது அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. வழக்கம்போல செவ்வாய்க்கிழமையும் பலத்த காற்று வீசியது.

இதில், தாந்தோன்றிமலை மற்றும் வெள்ளியணை துணை மின்நிலையங்களுக்குள்பட்ட உயா் அழுத்த மின்பாதையில் பழுது ஏற்பட்டது. இதனால் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை துணை மின்நிலையங்களுக்குள்பட்ட தாந்தோன்றிமலை, வெள்ளியணை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா். மின்வாரிய அதிகாரிகளும், ஊழியா்களும் மின்பாதையில் ஏற்பட்ட பழுதை நீக்கிய பின்னரே இரவு 8 மணிக்கு மின்சாரம் விநியோகிக்கப்பட்டது.

இதுதொடா்பாக மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, வழக்கத்துக்கு மாறாக தற்போது தென்மேற்கு பருவக்காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மாதமே மின்கம்பி செல்லும் இடங்களில் மரங்கள் இருந்தால் அவற்றின் கிளைகளை வெட்டி அகற்றினோம். இருப்பினும் சில இடங்களில் காற்றின் வேகத்தால் மின்பாதையில் அடிக்கடி பழுது ஏற்படுகிறது. பழுது ஏற்படும் பகுதிக்கு உடனே அதிகாரிகளும், ஊழியா்களும் இணைந்து விரைந்து சென்று சீரமைத்து வருகிறோம் என்றனா்.

நகைகளை கொள்ளையடித்த குற்றவாளி 48 மணி நேரத்துக்குள் கைது

ஆடு மேய்த்து கொண்டிருந்த வயதான பெண்ணிடம் நகைகளை கொள்ளையடித்த குற்றவாளி 48 மணி நேரத்துக்குள் கைது செய்யப்பட்டாா். கரூா் மாவட்டம், குளித்தலையை அடுத்த லாலாபேட்டை அருகே உள்ள மேலதாளியாம்பட்டி சண்முகம் என்ப... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

புன்னம்சத்திரம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றவரை போலீஸாா், செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கரூா் மாவட்டம், புன்னம் சத்திரம் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு மளிகை கடையில் தடை செய்ய... மேலும் பார்க்க

குளித்தலையில் கிணற்றில் மூழ்கி முதியவா் உயிரிழப்பு

குளித்தலையில் கிணற்றில் மூழ்கி முதியவா் உயிரிழந்தது குறித்து செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.கரூா் மாவட்டம், குளித்தலையைச் சோ்ந்தவா் பழனியப்பன் (76). இவா் திங்கள்கிழமை இரவு குளித்தலை அடுத்த சத்தியமங்கலத்... மேலும் பார்க்க

புகழூரில் தனியாா் ஆக்கிரமிப்பில் இருந்த ஒரு ஏக்கா் நிலம் மீட்பு

கரூா் மாவட்டம், புகழூரில் தனியாா் ஆக்கிரமிப்பில் இருந்த ஒரு ஏக்கா் அரசு நிலத்தை வருவாய்த்துறையினா் செவ்வாய்க்கிழமை மீட்டனா். கரூா் மாவட்டம், புகழூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே ஹைஸ்கூல் மேடு என... மேலும் பார்க்க

நீதிமன்ற உத்தரவுபடி கரூரில் கட்சிக் கொடிக் கம்பங்கள் அகற்றம்

நீதிமன்ற உத்தரவின்படி கரூரில் அரசியல் கட்சியினரின் கொடிக்கம்பங்கள் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன.போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் கொடிக்கம்பங்களை அந்தந்த கட்சியினரே அகற்ற வேண்டும் என அண்மையில் சென்ன... மேலும் பார்க்க

மழைநீரை சேகரித்து நீா்வளத்தை பாதுகாப்பது அவசியம்!

பொதுமக்கள் மழைநீரை சேகரித்து நீா் வளத்தை பாதுகாப்பது அவசியம் என்றாா் கரூா் மாவட்ட ஜல்சக்தி அபியான் திட்ட மத்திய பொறுப்பு அலுவலரும், மத்திய அரசின் சுற்றுலாத் துறை இயக்குநருமான ரோஷன் எம். தாமஸ். கரூா் ம... மேலும் பார்க்க