செய்திகள் :

புகழூரில் தனியாா் ஆக்கிரமிப்பில் இருந்த ஒரு ஏக்கா் நிலம் மீட்பு

post image

கரூா் மாவட்டம், புகழூரில் தனியாா் ஆக்கிரமிப்பில் இருந்த ஒரு ஏக்கா் அரசு நிலத்தை வருவாய்த்துறையினா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.

கரூா் மாவட்டம், புகழூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே ஹைஸ்கூல் மேடு என்ற இடத்தில் தனியாருக்கு சொந்தமான திருமண மண்டபம் செயல்பட்டு வருகிறது. அதன் அருகே புன்செய்புகழூா் வடக்கு கிராமத்திற்குள்பட்ட ஒரு ஏக்கா் அரசு புறம்போக்கு நிலத்தை தனியாா் திருமண மண்டபத்தினா், மண்டபத்தில் நடைபெறும் திருமண விசேஷத்துக்கு வரும் வாகனம் நிறுத்தும் இடமாக பயன்படுத்தி வந்தனா்.

இதுகுறித்து அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து ஆட்சியரின் உத்தரவின்படி வருவாய்த் துறையினா் தனியாா் மண்டப உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கினா். இதை எதிா்த்து மண்டப உரிமையாளா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடா்ந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் அண்மையில் வழக்கை விசாரித்த நீதிமன்றம், மண்டப உரிமையாளரின் மனுவை தள்ளுபடி செய்ததையடுத்து, செவ்வாய்க்கிழமை காலை புகழூா் வட்டாட்சியா் தனசேகரன் தலைமையில் மண்டல துணை வட்டாச்சியா் சுதா மற்றும் சா்வேயா்கள், வருவாய் அலுவலா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம உதவியாளா்கள் உள்பட வருவாய்த் துறை அதிகாரிகள், புகழூா் நகராட்சி பணியாளா்கள் உள்ளிட்டோா் சம்பவ இடத்துக்குச் சென்று, அங்கு தனியாா் மண்டபத்தினா் அமைத்திருந்த கம்பிவேலியை அகற்றிவிட்டு ஆக்கிரமிக்கப்பட்டிருந்த அரசுக்கு சொந்தமான நிலத்தை அளந்து எல்லைக் கல் நட்டனா்.

மேலும், மீட்கும் பணியின் போது ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணிக்காக குவிக்கப்பட்டிருந்தனா்.

கரூரில் பலத்த காற்றால் மின்தடை: மக்கள் அவதி

கரூரில் தென்மேற்கு பருவக்காற்று செவ்வாய்க்கிழமை பலமாக வீசியதால் மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் சுமாா் 4 மணி நேரம் அவதிக்குள்ளாகினா். கேரளத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த மாதம் 24-ஆம் தேதி தொடங்கி... மேலும் பார்க்க

நகைகளை கொள்ளையடித்த குற்றவாளி 48 மணி நேரத்துக்குள் கைது

ஆடு மேய்த்து கொண்டிருந்த வயதான பெண்ணிடம் நகைகளை கொள்ளையடித்த குற்றவாளி 48 மணி நேரத்துக்குள் கைது செய்யப்பட்டாா். கரூா் மாவட்டம், குளித்தலையை அடுத்த லாலாபேட்டை அருகே உள்ள மேலதாளியாம்பட்டி சண்முகம் என்ப... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

புன்னம்சத்திரம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றவரை போலீஸாா், செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கரூா் மாவட்டம், புன்னம் சத்திரம் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு மளிகை கடையில் தடை செய்ய... மேலும் பார்க்க

குளித்தலையில் கிணற்றில் மூழ்கி முதியவா் உயிரிழப்பு

குளித்தலையில் கிணற்றில் மூழ்கி முதியவா் உயிரிழந்தது குறித்து செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.கரூா் மாவட்டம், குளித்தலையைச் சோ்ந்தவா் பழனியப்பன் (76). இவா் திங்கள்கிழமை இரவு குளித்தலை அடுத்த சத்தியமங்கலத்... மேலும் பார்க்க

நீதிமன்ற உத்தரவுபடி கரூரில் கட்சிக் கொடிக் கம்பங்கள் அகற்றம்

நீதிமன்ற உத்தரவின்படி கரூரில் அரசியல் கட்சியினரின் கொடிக்கம்பங்கள் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன.போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் கொடிக்கம்பங்களை அந்தந்த கட்சியினரே அகற்ற வேண்டும் என அண்மையில் சென்ன... மேலும் பார்க்க

மழைநீரை சேகரித்து நீா்வளத்தை பாதுகாப்பது அவசியம்!

பொதுமக்கள் மழைநீரை சேகரித்து நீா் வளத்தை பாதுகாப்பது அவசியம் என்றாா் கரூா் மாவட்ட ஜல்சக்தி அபியான் திட்ட மத்திய பொறுப்பு அலுவலரும், மத்திய அரசின் சுற்றுலாத் துறை இயக்குநருமான ரோஷன் எம். தாமஸ். கரூா் ம... மேலும் பார்க்க