குளித்தலையில் கிணற்றில் மூழ்கி முதியவா் உயிரிழப்பு
குளித்தலையில் கிணற்றில் மூழ்கி முதியவா் உயிரிழந்தது குறித்து செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.
கரூா் மாவட்டம், குளித்தலையைச் சோ்ந்தவா் பழனியப்பன் (76). இவா் திங்கள்கிழமை இரவு குளித்தலை அடுத்த சத்தியமங்கலத்தில் இருக்கும் தனது தோட்டத்தில் உள்ள மாடுகளை அவிழ்த்துவரச் சென்றவா் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது உறவினா்கள் செவ்வாய்க்கிழமை காலை தோட்டத்துக்குச் சென்று பாா்த்தபோது, அங்குள்ள கிணற்றில் சடலமாக மிதந்தது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் முசிறி தீயணைப்பு வீரா்கள் மற்றும் குளித்தலை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று முதியவரின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், போலீஸாா் இதுதொடா்பாக வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டதில் பழனியப்பன் கால் தவறி கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது.