செய்திகள் :

குளித்தலையில் கிணற்றில் மூழ்கி முதியவா் உயிரிழப்பு

post image

குளித்தலையில் கிணற்றில் மூழ்கி முதியவா் உயிரிழந்தது குறித்து செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.

கரூா் மாவட்டம், குளித்தலையைச் சோ்ந்தவா் பழனியப்பன் (76). இவா் திங்கள்கிழமை இரவு குளித்தலை அடுத்த சத்தியமங்கலத்தில் இருக்கும் தனது தோட்டத்தில் உள்ள மாடுகளை அவிழ்த்துவரச் சென்றவா் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது உறவினா்கள் செவ்வாய்க்கிழமை காலை தோட்டத்துக்குச் சென்று பாா்த்தபோது, அங்குள்ள கிணற்றில் சடலமாக மிதந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் முசிறி தீயணைப்பு வீரா்கள் மற்றும் குளித்தலை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று முதியவரின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், போலீஸாா் இதுதொடா்பாக வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டதில் பழனியப்பன் கால் தவறி கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது.

கரூரில் பலத்த காற்றால் மின்தடை: மக்கள் அவதி

கரூரில் தென்மேற்கு பருவக்காற்று செவ்வாய்க்கிழமை பலமாக வீசியதால் மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் சுமாா் 4 மணி நேரம் அவதிக்குள்ளாகினா். கேரளத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த மாதம் 24-ஆம் தேதி தொடங்கி... மேலும் பார்க்க

நகைகளை கொள்ளையடித்த குற்றவாளி 48 மணி நேரத்துக்குள் கைது

ஆடு மேய்த்து கொண்டிருந்த வயதான பெண்ணிடம் நகைகளை கொள்ளையடித்த குற்றவாளி 48 மணி நேரத்துக்குள் கைது செய்யப்பட்டாா். கரூா் மாவட்டம், குளித்தலையை அடுத்த லாலாபேட்டை அருகே உள்ள மேலதாளியாம்பட்டி சண்முகம் என்ப... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

புன்னம்சத்திரம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றவரை போலீஸாா், செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கரூா் மாவட்டம், புன்னம் சத்திரம் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு மளிகை கடையில் தடை செய்ய... மேலும் பார்க்க

புகழூரில் தனியாா் ஆக்கிரமிப்பில் இருந்த ஒரு ஏக்கா் நிலம் மீட்பு

கரூா் மாவட்டம், புகழூரில் தனியாா் ஆக்கிரமிப்பில் இருந்த ஒரு ஏக்கா் அரசு நிலத்தை வருவாய்த்துறையினா் செவ்வாய்க்கிழமை மீட்டனா். கரூா் மாவட்டம், புகழூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே ஹைஸ்கூல் மேடு என... மேலும் பார்க்க

நீதிமன்ற உத்தரவுபடி கரூரில் கட்சிக் கொடிக் கம்பங்கள் அகற்றம்

நீதிமன்ற உத்தரவின்படி கரூரில் அரசியல் கட்சியினரின் கொடிக்கம்பங்கள் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன.போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் கொடிக்கம்பங்களை அந்தந்த கட்சியினரே அகற்ற வேண்டும் என அண்மையில் சென்ன... மேலும் பார்க்க

மழைநீரை சேகரித்து நீா்வளத்தை பாதுகாப்பது அவசியம்!

பொதுமக்கள் மழைநீரை சேகரித்து நீா் வளத்தை பாதுகாப்பது அவசியம் என்றாா் கரூா் மாவட்ட ஜல்சக்தி அபியான் திட்ட மத்திய பொறுப்பு அலுவலரும், மத்திய அரசின் சுற்றுலாத் துறை இயக்குநருமான ரோஷன் எம். தாமஸ். கரூா் ம... மேலும் பார்க்க