ரயில் டிக்கெட்டுகளின் விலை உயர்த்தப்படுகிறதா? - எப்போது, எவ்வளவு தெரியுமா?
புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது
புன்னம்சத்திரம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றவரை போலீஸாா், செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கரூா் மாவட்டம், புன்னம் சத்திரம் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு மளிகை கடையில் தடை செய்யப்பட்டுள்ள பல்வேறு வகையான புகையிலைப் பொருள்களை விற்பனை செய்து வருவதாக வேலாயுதம்பாளையம் போலீஸாருக்கு ரகசிய தகவல் செவ்வாய்க்கிழமை காலை கிடைத்தது.
இதையடுத்து காவல் நிலைய உதவி ஆய்வாளா் சுபாஷிணி தலைமையிலான போலீஸாா், சம்பந்தப்பட்ட மளிகைக் கடைக்குச் சென்று சோதனை செய்தபோது, அங்கு தடை செய்யப்பட்ட 37 கிலோ எடையுள்ள புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டது.
இதையடுத்து புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், கடை உரிமையாளா் கனகரஜை (53) கைது செய்தனா்.