செய்திகள் :

வந்தே பாரத் ரயிலுக்குள் திடீரென கொட்டிய 'நீர் வீழ்ச்சி'; ரயில்வே சொல்லும் காரணம்!|வைரல் வீடியோ

post image

வந்தே பாரத் - இந்தியாவின் அதிநவீன மற்றும் மிக வேகமாக பயணிக்கும் ரயில் என்று இந்த ரயில் குறித்து மத்திய அரசு பெருமை கொள்கிறது. ஆனால், இந்த ரயில் குறித்தும், அதன் சேவைகள் குறித்தும் அவ்வப்போது புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது.

லேட்டஸ்டாக, வாரணாசி - புது டெல்லி வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் (ரயில் எண் 22415) திடீரென்று ஏ.சி வழியே, பயணிகள் சீட்டின் மீது தண்ணீர் கொட்டியுள்ளது. இதனால், அந்த சீட்டில் அமர்ந்திருந்த பயணிக்கு மிகவும் அசௌகரியம் ஏற்பட்டுள்ளது. அவரது லக்கேஜுகளும் இந்தத் தண்ணீரால் முழுவதும் நனைந்துள்ளது.

வந்தே பாரத்
வந்தே பாரத்

'இலவச நீர்வீழ்ச்சி' என்ற கேப்ஷனோடு, இதன் வீடியோப் பதிவை இணையத்தில் போஸ்ட் செய்ய, இது மிகவும் வைராலாகி உள்ளது.

இந்தப் பதிவிற்கு உடனடியாக ரயில்வே நிர்வாகம் எதிர்வினையாற்றி, "கோச் C-7-ல், சீட் நம்பர் 76-ல் கூலிங் சிஸ்டமில் தேங்கியிருந்த நீரால், இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் தண்ணீர் வடியும் ஓட்டையை பில்டர் மறைத்துவிட்டது. அதனால், ரயிலில் பிரேக் போடப்பட்டப் போது, தண்ணீர் காற்று குழாயின் மூலம் வெளியே கசிந்துள்ளது" என்று காரணம் கூறியுள்ளது.

நீங்கள் வந்தே பாரத்தில் பயணித்திருக்கிறீர்களா? உங்களுடைய பயண அனுபவம் என்ன?

ரயில் டிக்கெட்டுகளின் விலை உயர்த்தப்படுகிறதா? - எப்போது, எவ்வளவு தெரியுமா?

இந்தியாவின் 'பாக்கெட் ஃபிரெண்ட்லி' டிராவல் ஆப்ஷன் என்றால், அது 'ரயில்' தான். சாதாரண மக்கள் முதல் பணக்காரர்கள் வரை யார் வேண்டுமானாலும், அவர்களது பட்ஜெட்டிற்கு ஏற்ப எளிதாகவும், வசதியாகவும் ரயிலில் பயணம்... மேலும் பார்க்க

பிறகு ஏன் கலாய்க்க மாட்டார்கள் ‘விளம்பர மாடல் அரசு’ என்று?

அனைவருக்கும் பசுமை வணக்கம்! மாம்பழங்களுக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை என்று மாம்பழங்களை சாலையில் கொட்டி விவசாயிகள் போராட்டம்; கரும்புக்கான நிலுவைத் தொகையை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று முதல்வருக்க... மேலும் பார்க்க

கோடியூர் வாரச்சந்தை: சுகாதார சீர்கேட்டை சுட்டிக்காட்டிய விகடன்; நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே கோடியூரில் உள்ள தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் ஒவ்வொரு புதன்கிழமையும் வாரச் சந்தை நடைபெறும். இந்த பகுதி காய்கறிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு... மேலும் பார்க்க

முதல்வர் ஸ்டாலின் நாளை வேலூர் வருகை... குழப்பியடிக்கும் பல்நோக்கு மருத்துவமனை திறப்புவிழா விவகாரம்!

வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் நாளை (ஜூன் 25) மற்றும் நாளை மறுநாள் (ஜூன் 26) நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்த... மேலும் பார்க்க

Israel - Iran: ``போர்நிறுத்ததை ஏற்றுக் கொள்கிறோம்; அதிபர் டிரம்ப்பிற்கு நன்றி, ஆனால்..'' - இஸ்ரேல்

ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக கூறி, அந்த நாட்டின் மீது கடந்த 13ஆம் தேதி முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ஈரான் நாடும் பதிலடி கொடுத்து இருநாடுகளுக்கிடையே போர் சூழும் அபாயம் ஏ... மேலும் பார்க்க

"மகாராஷ்டிரா பள்ளிகளில் மராத்தி மட்டுமே கட்டாயம்; இந்தி கட்டாயமல்ல" - மகா. பாஜக அமைச்சர்

மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கையையும், அதில் இருக்கும் மும்மொழிக் கொள்கையும் தமிழ்நாட்டில் பெரும் விவாதப்பொருளாகியிருந்தது. கடந்த நாடாளுமன்ற மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரில் தி.மு.க உள்ளிட்ட எதிர்க்... மேலும் பார்க்க