செய்திகள் :

கோடியூர் வாரச்சந்தை: சுகாதார சீர்கேட்டை சுட்டிக்காட்டிய விகடன்; நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!

post image

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே கோடியூரில் உள்ள தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் ஒவ்வொரு புதன்கிழமையும் வாரச் சந்தை நடைபெறும். இந்த பகுதி காய்கறிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு மக்களுக்கு முக்கிய இடமாக விளங்குகிறது.

ஆனால் இந்தச் சந்தையின் பின்புறத்தில் மருத்துவக் கழிவுகள், கோழி இறைச்சிக் கழிவுகள், பிளாஸ்டிக் பாட்டில்கள், குப்பைகள் என குவிந்துகிடந்தன, இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், வியாபாரிகள் என அனைவரும் பெரும் அசௌகரியத்தை எதிர்கொண்டனர்.

சந்தைக்கு வரும் வாடிக்கையாளர்கள் மூக்கைப் பிடித்தபடி கொண்டு தான் உணவுப் பொருட்கள் வாங்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டது.

பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் இது குறித்துக் கேட்டபோது, “நாங்கள் இங்கு குப்பைகள் கொட்டுவதில்லை. பிளாஸ்டிக் பொருட்களும் பயன்படுத்துவதில்லை. சந்தைக்கு வருபவர்களில் பெரும்பாலோர் துணிப்பைகளுடன் வருகின்றனர். இங்கு காணப்படும் குப்பைகள் என்றால், வெங்காயத் தோல், காய்கறித் துண்டுகள் போன்றவை மட்டுமே.

ஆனால், மருத்துவக் கழிவுகள், கோழி இறைச்சிக் கழிவுகள், மூட்டை மூட்டையான குப்பைகள் எப்படி இங்கு வருகின்றன என்பது தெரியவில்லை. ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்து செல்கின்றனர். ஒரு பக்கம் சந்தை நடக்க, மறுபக்கம் குப்பைகள் குவிந்தால், எப்படி வியாபாரம் செய்வது? இதனால் நோய்த்தொற்று ஏற்பட்டால் யார் பொறுப்பு? இது எங்கள் வியாபாரத்தை முற்றிலும் பாதிக்கிறது.

மேலும், இந்தப் பிரச்னையைத் தடுக்க முயற்சித்து, எச்சரிக்கைப் பலகைகள் வைத்தோம், சிலர் பொறுப்பற்று குப்பைகளைக் கொட்டுகின்றனர். ஜோலார்பேட்டை நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், ‘இதோ, அதோ’ என்று பதிலளித்து இழுத்தடிக்கின்றனர்.

இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து இந்த இடத்தை உடனடியாகச் சுத்தம் செய்ய வேண்டும்” என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அங்கிருந்த‌ பொதுமக்களிடமும் , வியாபாரிகளிடமும் பேசியும், நேரடியாக விசிட் செய்தும் இந்த அவலநிலை குறித்து விகடன் தளத்தில் ”கோடியூர்: வாரச்சந்தை நடைபெறும் இடத்துக்கு அருகே கொட்டப்படும் குப்பைகள்; முகம் சுளிக்கும் பொதுமக்கள்!” என்ற‌ தலைப்பில் செய்தி ஒன்றினை ஜூன்20-ம் தேதி வெளியிட்டிருந்தோம்.

இந்த விவகாரத்தை அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு சென்றிருந்தோம். விகடன் செய்தி எதிரொலியாக, அதிகாரிகள் செய்தி வெளியான மூன்றே நாள்களில் 23/06/25 அன்று விரைந்து குப்பைகளை அப்புறப்படுத்தியுள்ளனர்.

இது போன்று பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தை, அதிகாரிகள் எப்பொழுதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர் மக்கள்.

முதல்வர் ஸ்டாலின் நாளை வேலூர் வருகை... குழப்பியடிக்கும் பல்நோக்கு மருத்துவமனை திறப்புவிழா விவகாரம்!

வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் நாளை (ஜூன் 25) மற்றும் நாளை மறுநாள் (ஜூன் 26) நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்த... மேலும் பார்க்க

Israel - Iran: ``போர்நிறுத்ததை ஏற்றுக் கொள்கிறோம்; அதிபர் டிரம்ப்பிற்கு நன்றி, ஆனால்..'' - இஸ்ரேல்

ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக கூறி, அந்த நாட்டின் மீது கடந்த 13ஆம் தேதி முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ஈரான் நாடும் பதிலடி கொடுத்து இருநாடுகளுக்கிடையே போர் சூழும் அபாயம் ஏ... மேலும் பார்க்க

"மகாராஷ்டிரா பள்ளிகளில் மராத்தி மட்டுமே கட்டாயம்; இந்தி கட்டாயமல்ல" - மகா. பாஜக அமைச்சர்

மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கையையும், அதில் இருக்கும் மும்மொழிக் கொள்கையும் தமிழ்நாட்டில் பெரும் விவாதப்பொருளாகியிருந்தது. கடந்த நாடாளுமன்ற மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரில் தி.மு.க உள்ளிட்ட எதிர்க்... மேலும் பார்க்க

Israel - Iran: ``மீண்டும் தெளிவாக சொல்கிறோம்..'' - போர்நிறுத்தம் குறித்து பேசிய ஈரான்

ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக கூறி, அந்த நாட்டின் மீது கடந்த 13ஆம் தேதி முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ஈரான் நாடும் பதிலடி கொடுத்து வருவதால், இரு நாடுகளுக்கு இடையேயிலான மோ... மேலும் பார்க்க

Israel - Iran: போர்நிறுத்தை அறிவித்த ட்ரம்ப்; 12 நாள்களைக் கடந்தும் தொடரும் தாக்குதல்கள்..

ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக கூறி, அந்த நாட்டின் மீது கடந்த 13ஆம் தேதி முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ஈரான் நாடும் பதிலடி கொடுத்து வருவதால், இரு நாடுகளுக்கு இடையேயிலான மோ... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் நெஞ்சுவலியால் உயிரிழந்த அதிகாரி.. என்ன காரணம்?

தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தின் முதல் தளத்தில் நேற்று மாலை சட்டம், ஒழுங்கு தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். தஞ்சாவ... மேலும் பார்க்க