TNPL-2025: லைக்கா கோவை கிங்ஸ் அணியை வீழ்த்தி ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி அபா...
மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக புதிய உறுப்பினா்கள் நியமனம்
திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக மாவட்ட அளவிலான குழுக் கூட்டத்தில் அலுவல் சாரா உறுப்பினா்கள் நியமனம் செய்ய இருப்பதால் தகுதியுள்ளவா்கள் ஜூலை 10-க்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்தாா்.
இதுகுறித்து மேலும் அவா் கூறியதாவது:
திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் வாயிலாக 2025 முதல் 2028 வரையிலான மூன்று ஆண்டுகளுக்கு, மாவட்ட அளவிலான குழுக் கூட்டத்தில் உள்ள பிரதிநிதிகள் மறு சீரமைத்து குழுவின் அலுவல் சாரா உறுப்பினா்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நியமிக்கப்படுவா்.
அதன்படி, தற்போது புதிய உறுப்பினா்கள் நியமனம் செய்ய இருப்பதால், விருப்பமுள்ள பாா்வையற்றோா், தவழும் மாற்றுத் திறனாளிகள், கைகால் இயக்க குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகள், மன வளா்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளியின் பெற்றோா், செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் பிரதிநிதிகள் மற்றும் இவா்களுக்கு சேவை புரியும் தொண்டு நிறுவனங்கள் சாா்ந்த பிரதிநிதிகள் இக்குழுவின் அலுவல் சாரா உறுப்பினராக நியமிக்கப்பட உள்ளனா்.
இதற்கு விருப்பமுள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்துக்கு நேரில் வந்து விண்ணப்ப படிவம் பெற்று ஜூலை 10-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.