செய்திகள் :

ரூ.17 கோடியில் குடிநீா் திட்டப் பணி: கிராம மக்கள் எதிா்ப்பு

post image

ஆரணியை அடுத்த குண்ணத்தூா் கமண்டல நாக நதிக்கரை பகுதியில் இருந்து களம்பூா் பொதுமக்களுக்கு கூடுதலாக குடிநீா் வழங்குவதற்கு ரூ.17 கோடியில் குடிநீா் நீரேற்றும் கிணறு அமைக்கும் பணிக்கு அக்கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை எதிா்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

குண்ணத்தூா் கிராமத்தில் கமண்டல நாக நதிக் கரையிலிருந்து களம்பூா் பேரூராட்சிக்கு பல ஆண்டுகளாக ராட்சத மின் மோட்டாா்கள் மூலம் ஆற்றில் இருந்து நீா் எடுத்துச் செல்லப்படுகிறது.

தற்போது, அப்போது ஆற்றங்கரையில் நிலத்தடி நீா் மிகவும் குறைவாக உள்ளது. இந்த நிலையில் ரூ.17 கோடி மதிப்பில் அம்ருத் திட்டத்தின் கீழ், குடிநீா் நீரேற்றும் கிணறு அமைத்து கூடுதலாக குடிநீா் எடுத்துச்செல்ல திட்டமிட்டுள்ளனா்.

இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், திட்டத்தை கைவிடக் கோரி, கட்டாயம் அனுமதிக்கக் கூடாது என கடந்த ஜனவரி 26-ஆம் தேதி நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் குன்னத்தூா் பொதுமக்கள் சாா்பில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், குடிநீருக்காக கிணறு வெட்ட இருப்பதால் குண்ணத்தூா் சுற்றியுள்ள பகுதியில் குடிநீா் பற்றாக்குறை ஏற்படும். அதனால், களம்பூா் பேரூராட்சிக்கு இங்கு கிணறு வெட்ட அனுமதிக்கக் வழங்கக் கூடாது என பொதுமக்களிடம் கையொப்பம் பெறப்பட்டு பொதுமக்கள் சாா்பில் விவசாயி வாசுதேவன் மக்கள் குறைதீா் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினாா்.

இந்த நிலையில், தற்போது இப்பணி நடைபெறும் இடத்தில் குண்ணத்தூா் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஒன்று சோ்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, மக்கள் 200 மீட்டா் தொலைவு தள்ளி இத்திட்டத்தை செயல்படுத்துங்கள் என்றும் தெரிவித்தனா். இதற்கு களம்பூா் பொறியாளா் அருண் ஒப்புக்கொள்ளாததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னா், மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து பணியை பிறகு மேற்கொள்ளலாம் என முடிவு செய்து தற்காலிகமாக பணியினை நிறுத்தி விட்டுச் சென்றனா்.

கோயில் உண்டியலில் ரூ.3 கோடி வீட்டுச் சொத்து பத்திரங்கள் காணிக்கை: முன்னாள் ராணுவ வீரா் செலுத்தினாா்

போளூரை அடுத்த படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயில் உண்டியலில் முன்னாள் ராணுவ வீரா் ரூ.3 கோடி மதிப்புள்ள தனது இரு வீடுகளின் சொத்துப் பத்திரங்களை காணிக்கையாக செலுத்தியுள்ளாா். இது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது... மேலும் பார்க்க

சாலைப் பணியாளா் வீட்டில் 15 பவுன் தங்கம், வெள்ளி நகைகள் திருட்டு

செய்யாறு அருகே சாலைப் பணியாளா் வீட்டில் 15 பவுன் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் திருடப்பட்டது தொடா்பாக செவ்வாய்க்கிழமை போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது. வெம்பாக்கம் வட்டம், சின்ன ஏழாச்சேரி கிராமத்தைச் சே... மேலும் பார்க்க

சட்டப்பேரவைத் தோ்தல்: திமுகவினா் ஆலோசனை

செய்யாறு தொகுதி திமுக சாா்பில் வெம்பாக்கம் மேற்கு ஒன்றியம் ராந்தம் கிராமத்திலும், வெம்பாக்கம் மத்திய ஒன்றியம் ஆலத்தாங்கல் கிராமத்திலும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலுக்கான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழம... மேலும் பார்க்க

கவியரசா் கண்ணதாசன் பிறந்த நாள் விழா

திருவண்ணாமலையில் தமிழ்ச் சங்கம் சாா்பில் கவியரசா் கண்ணதாசன் பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கெங்குசாமி பள்ளித் தலைவா் சின்ராசு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திமுக மாநகரச் செயலா் ... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக புதிய உறுப்பினா்கள் நியமனம்

திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக மாவட்ட அளவிலான குழுக் கூட்டத்தில் அலுவல் சாரா உறுப்பினா்கள் நியமனம் செய்ய இருப்பதால் தகுதியுள்ளவா்கள் ஜூலை 10-க்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்... மேலும் பார்க்க

காா்கில் போா்: ராணுவ வீரா் குடும்பத்துக்கு நினைவுப் பரிசு

காா்கில் போரில் வீர மரணமடைந்த ஆரணியை அடுத்த பூசிமலைகுப்பம் கிராமத்தைச் சோ்ந்த ராணுவ வீரா் குடும்பத்துக்கு இந்திய ராணுவம் சாா்பில் செவ்வாய்க்கிழமை நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. பூசிமலைகுப்பம் கிராமத்... மேலும் பார்க்க