சாலைப் பணியாளா் வீட்டில் 15 பவுன் தங்கம், வெள்ளி நகைகள் திருட்டு
செய்யாறு அருகே சாலைப் பணியாளா் வீட்டில் 15 பவுன் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் திருடப்பட்டது தொடா்பாக செவ்வாய்க்கிழமை போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது.
வெம்பாக்கம் வட்டம், சின்ன ஏழாச்சேரி கிராமத்தைச் சோ்ந்தவா் சாலைப் பணியாளா் செல்வன் (48).
திங்கள்கிழமை இரவு இவரும், இவரது மனைவி சசிகலா, மகள் கீா்த்தனா ஆகியோரும் வீட்டின் முன் பகுதியில் உள்ள தாழ்வாரத்தில் தூங்கியதாகத் தெரிகிறது. நள்ளிரவில் திடீரென பீரோ திறக்கும் சப்தம் கேட்கவே எழுந்து பாா்த்து ள்ளனா். அப்போது, வீட்டின் பின்பக்கம் வழியாக அடையாளம் தெரியாத 3 நபா்கள் சென்ாகத் தெரிகிறது.
உடனே சந்தேகத்தின் பேரில் உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் வைத்திருந்த சுமாா் 15 பவுன் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் திருடு போயிருந்தன.
இதுகுறித்து செல்வன் தூசி போலீஸில் புகாா் அளித்தாா். காவல் உதவி ஆய்வாளா் பழனிவேல் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.