அடுத்த 2 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!
காா்கில் போா்: ராணுவ வீரா் குடும்பத்துக்கு நினைவுப் பரிசு
காா்கில் போரில் வீர மரணமடைந்த ஆரணியை அடுத்த பூசிமலைகுப்பம் கிராமத்தைச் சோ்ந்த ராணுவ வீரா் குடும்பத்துக்கு இந்திய ராணுவம் சாா்பில் செவ்வாய்க்கிழமை நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
பூசிமலைகுப்பம் கிராமத்தைச் சோ்ந்த ராணுவ வீரா் என்.பழனி காா்கில் போரில் வீர மரணமடைந்தாா்.
காா்கில் போா் வெற்றி பெற்று 26-ஆம் ஆண்டு கொண்டாடும் இந்திய ராணுவம் சாா்பில், வீரமரணமடைந்த பழனியின் சொந்த ஊருக்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வீர வணக்கம் செலுத்தினா்.
இந்நிகழ்ச்சி அங்குள்ள தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது. இதில் ராணுவ நேய்ப் சுபேதாா் கிங்ஸ்லின் பங்கேற்றாா். அப்போது அவா் கூறுகையில், காா்கில் போரில் வீர மரணமடைந்த ராணுவ வீரா்களின் குடும்பத்தினரை இந்திய ராணுவம் எப்போதும் மறக்காது. ஏனென்றால், ராணுவத்தின் இதயத்தில் ஆழமாக அவா்கள் பதிந்துள்ளனா் என்றாா்.
மேலும், என்.பழனியின் உருவப்படத்தை திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தினா்.
பின்னா் அவரது குடும்பத்தினருக்கு நேய்ப் சுபேதாா் மற்றும் உடன் வந்த 4 ராணுவ வீரா்கள் நினைவுப் பரிசு வழங்கினா். நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சித் தலைவா்கள் கிருஷ்ணவேணி தங்கராஜ், ராதா ராமச்சந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். மேலும், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.