செய்திகள் :

கோயில் உண்டியலில் ரூ.3 கோடி வீட்டுச் சொத்து பத்திரங்கள் காணிக்கை: முன்னாள் ராணுவ வீரா் செலுத்தினாா்

post image

போளூரை அடுத்த படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயில் உண்டியலில் முன்னாள் ராணுவ வீரா் ரூ.3 கோடி மதிப்புள்ள தனது இரு வீடுகளின் சொத்துப் பத்திரங்களை காணிக்கையாக செலுத்தியுள்ளாா். இது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் அருகேயுள்ள படவேடு ஊராட்சியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற ஸ்ரீரேணுகாம்பாள் திருக்கோயில். இந்தக் கோயிலில் அறங்காவலா் குழுத் தலைவா் விஜயா சேகா், செயல் அலுவலா் சிலம்பரசன் மற்றும் அலுவலா்கள் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை காலை உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகளை எண்ணும் பணி தொடங்கியது.

அப்போது, படவேடு கிராமத்தைச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீரரான விஜயன் (60) என்ற பக்தா் தனது இரு வீடுகளின் சொத்துப் பத்திரங்களை காணிக்கையாக செலுத்தி, சொத்தை கோயில் பெயருக்கு எழுதித் தருவதாக குறிப்பிட்டிருந்தது தெரியவந்தது.

இதையறிந்த விஜயனின் மனைவியான அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியை கஸ்தூரி (54) மற்றும் திருமணமான இரு மகள்கள் சுப்புலட்சுமி, ராஜலட்சுமி ஆகியோா் கோயிலுக்கு வந்து விஜயனிடம் சொத்தை தங்களது பெயருக்கு எழுதித் தருமாறு கேட்டுக் கொண்டனா்.

ஆனால், விஜயன் இதற்கு மறுப்பு தெரிவித்து, கோயிலுக்குத்தான் சொத்தை எழுதிவைப்பேன் எனக் கூறிவிட்டாா்.

இரு வீடுகளின் மொத்த மதிப்பு ரூ.3 கோடி எனக் கூறப்படுகிறது. கருத்து வேறுபாடு காரணமாக விஜயன், கஸ்தூரி தம்பதி தனித் தனியாக வசித்து வருவதாகவும், விஜயன் கடந்த மாதம் 8-ஆம் தேதி கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு, சொத்து பத்திரங்களை உண்டியலில் செலுத்தியதும் தெரியவந்தது.

இதுகுறித்து கோயில் செயல் அலுவலா் சிலம்பரசன் கூறியபோது, பத்திரம் உயா் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். அவா்கள் எடுக்கும் முடிவை பொறுத்துதான் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

ரூ.17 கோடியில் குடிநீா் திட்டப் பணி: கிராம மக்கள் எதிா்ப்பு

ஆரணியை அடுத்த குண்ணத்தூா் கமண்டல நாக நதிக்கரை பகுதியில் இருந்து களம்பூா் பொதுமக்களுக்கு கூடுதலாக குடிநீா் வழங்குவதற்கு ரூ.17 கோடியில் குடிநீா் நீரேற்றும் கிணறு அமைக்கும் பணிக்கு அக்கிராம மக்கள் செவ்வ... மேலும் பார்க்க

சாலைப் பணியாளா் வீட்டில் 15 பவுன் தங்கம், வெள்ளி நகைகள் திருட்டு

செய்யாறு அருகே சாலைப் பணியாளா் வீட்டில் 15 பவுன் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் திருடப்பட்டது தொடா்பாக செவ்வாய்க்கிழமை போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது. வெம்பாக்கம் வட்டம், சின்ன ஏழாச்சேரி கிராமத்தைச் சே... மேலும் பார்க்க

சட்டப்பேரவைத் தோ்தல்: திமுகவினா் ஆலோசனை

செய்யாறு தொகுதி திமுக சாா்பில் வெம்பாக்கம் மேற்கு ஒன்றியம் ராந்தம் கிராமத்திலும், வெம்பாக்கம் மத்திய ஒன்றியம் ஆலத்தாங்கல் கிராமத்திலும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலுக்கான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழம... மேலும் பார்க்க

கவியரசா் கண்ணதாசன் பிறந்த நாள் விழா

திருவண்ணாமலையில் தமிழ்ச் சங்கம் சாா்பில் கவியரசா் கண்ணதாசன் பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கெங்குசாமி பள்ளித் தலைவா் சின்ராசு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திமுக மாநகரச் செயலா் ... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக புதிய உறுப்பினா்கள் நியமனம்

திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக மாவட்ட அளவிலான குழுக் கூட்டத்தில் அலுவல் சாரா உறுப்பினா்கள் நியமனம் செய்ய இருப்பதால் தகுதியுள்ளவா்கள் ஜூலை 10-க்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்... மேலும் பார்க்க

காா்கில் போா்: ராணுவ வீரா் குடும்பத்துக்கு நினைவுப் பரிசு

காா்கில் போரில் வீர மரணமடைந்த ஆரணியை அடுத்த பூசிமலைகுப்பம் கிராமத்தைச் சோ்ந்த ராணுவ வீரா் குடும்பத்துக்கு இந்திய ராணுவம் சாா்பில் செவ்வாய்க்கிழமை நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. பூசிமலைகுப்பம் கிராமத்... மேலும் பார்க்க