செய்திகள் :

சென்னை மெட்ரோ ரயில்கள் தாமதம்: காரணம் என்ன?

post image

சென்னை கோயம்பேடு-அசோக் நகர் மெட்ரோ வழித்தடத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் சென்னையில் மக்கள் தொகை பெருக்கம், வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் பெருநகர மக்கள் மின்சார ரயில், மெட்ரோ ரயில் சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை கோயம்பேடு-அசோக் நகர் மெட்ரோ வழித்தடத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக

பரங்கிமலை - சென்னை சென்டரல் செல்லும் வழிதடத்தில் 7 நிமிடங்களுக்கு பதில் 24 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்பட்டுகிறது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

இதனிடையே, சென்டரல் - கோயம்பேடு மற்றும் அசோக் நகர் - பரங்கிமலை இடையே எந்த பாதிப்புமில்லை என்பதால் பயணிகள் இதற்கேற்ப பயணத்தை திட்டமிடுமாறு மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

சென்னையில் நீலம் மற்றும் பச்சை வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், பச்சை வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தாமதம் ஏற்பட்டுள்ளதால் நீலம் வழித்தட அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருவதாகவும், பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்திற்கு வருந்துகிறோம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வி.பி.சிங் புகழை நாளும் போற்றுவோம்!: முதல்வர் ஸ்டாலின்

நீடூரில் வெட்டப்பட்ட இளைஞர் உயிரிழப்பு: 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை

மயிலாடுதுறை: நீடூரில் மர்மநபர்களால் பட்டாக்கத்தியால் வெட்டப்பட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்த நிலையில், தப்பியோடிய இரண்டு பேரை போலீஸார் 4 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்... மேலும் பார்க்க

திரையுலகில் நீண்ட காலமாக போதைப்பொருள் பழக்கம் இருக்கிறது: விஜய் ஆண்டனி

மதுரை: திரையுலகில் போதைப்பொருள் பயன்பாடு இன்று நேற்றல்ல நீண்ட நாள்களாகவே இருந்து வருகிறது. புகைப்பிடிப்பதும் போதைப் பழக்கம்தான். அதன் அடுத்த கட்டம் தான் போதைப்பொருள் பயன்பாடு என இசையமைப்பாளர் விஜய்... மேலும் பார்க்க

இந்து முன்னணி பிரமுகர் வெட்டிக் கொலை: 3 பேர் கும்பல் வெறிச்செயல்!

திருப்பூரில் இந்து முன்னணி பிரமுகரான பாலமுருகன்(30) மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம், திருப்பூர் குமாரானந்தபுரம் காமராஜர் வீதில் வசித்த... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து புதன்கிழமை காலை (ஜூன் 25) வினாடிக்கு 7,815 கன அடியாக சரிந்துள்ளது. காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்த... மேலும் பார்க்க

வி.பி.சிங் புகழை நாளும் போற்றுவோம்!: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: முன்னாள் பிரதமா் வி.பி.சிங் பிறந்த நாளையொட்டி, வி.பி.சிங் புகழை நாளும் போற்றுவோம் என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசத்தில் பிறந்திருந்தாலும் ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான த... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்துக்கு கோவை உள்பட 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, ஜூன் 24 முதல் ஜூன்... மேலும் பார்க்க